இவற்றிற்கான களஞ்சியம் 'Tamil Eelam' வகை

Jun 29 2009


CAPitalZ

தமிழீழ அரசு நோக்கிய பயணம்

Filed under LTTE, Tamil Eelam, Tamils

சில‌ர் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் இய‌க்க‌த்திற்கும், த‌மிழ் ம‌க்க‌ளுக்கும் உள்ள‌ ப‌ல‌த்த‌ நேய‌த்தைப் பிரிக்கும் வித‌மாக‌ ப‌ல‌ ச‌ந்தேக‌ குத‌ர்க்க‌ங்க‌ளை க‌ட்டுரையாக‌ எழுதுகிறார்க‌ள். இதை எழுதுப‌வ‌ர்க‌ளும், வாசிப்ப‌வ‌ர்க‌ளும் த‌லைவ‌ர் சொன்னால் தான் செய்ய‌வேண்டும் என்று சொல்லிக்கொண்டு மேலும் மேலும் த‌மிழ‌ர்க‌ளைப் பிரிக்கிறார்க‌ள். இப்படியான கட்டுரைகளை தயவுசெய்து எழுதாதீர்கள்.  புதினம் இணையத்தளம் புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளம்; TamilNet.com ஆங்கிலத்திலும், புதினம் தமிழிலும்.

தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்று ஆராய்வதை விடுங்கள்.  அவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் வழிகாட்டிய பாதையை நாம் செவ்வனே செய்யவேண்டும். இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்… இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்… தான் தமிழ்த்தேசியம் உருவாகுவதைத் தடுக்கும் சக்திகளுக்கு அல்வா சாப்பிடுவது போன்றதாகும்.  இதைத் தான் இல‌ங்கை/  இந்திய அரசு எதிர்பார்த்து நிற்கிறது.  நீங்களும் இந்திய “றோ” பிரிக்கும் வலையில் விழுந்துவிடாதீர்கள்; மற்றவர்களையும் விழுத்தாதீர்கள். நீங்க‌ள் த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்று ந‌ம்புவ‌ராக‌ இருக்க‌லாம்; அல்ல‌து அவ‌ர் உண்மையில் இற‌ந்துவிட்டார் என்று ந‌ம்புவ‌ராக‌ இருக்க‌லாம். உங்க‌ள் ந‌ம்பிக்கை எதுவாயினும் த‌ற்போது த‌மிழீழ‌ம் வென்றெடுக்க‌ தேவையான‌ க‌ட‌மைக‌ளை நீங்க‌ள் செய்யாம‌ல் சோர்ந்து போகாதீர்க‌ள். த‌லைவ‌ரின் வ‌ழிகாட்ட‌லில் தான் எல்லாமே ந‌ட‌ந்த‌ன‌, இப்போதும் அவ‌ரின் வ‌ழிகாட்ட‌லில் தான் எல்லாமே ந‌ட‌ந்துகொண்டிருக்கின்ற‌ன‌. நாம் செய‌ற்ப‌டுவ‌து தான் நாம் த‌லைவ‌ருக்கு செய்யும் க‌ட‌ன். எல்லாம் முடிந்துவிட்ட‌து இனிமேல் ஒன்றும் செய்ய‌ இய‌லாது என்று சோர்ந்து போய்விடாதீர்க‌ள்.

செல்வராசா பத்மநாதன், தலைவர் உயிருடன் இருக்கும்போதே நியமிக்கப்பட்டவர். த‌லைவ‌ர் நிய‌மித்த‌வ‌ரை நாம் அவ‌தூராக‌ பேசுவ‌து த‌லைவ‌ரின் சொல்லுக்கு நாம் ம‌திப்புக்கொடுக்க‌வில்லை என்று தானே அர்த்த‌ம்.  அவரை பிடித்துத் தரச்சொல்லி இன்னும் இலங்கை மற்றய அரசாங்கங்களை வற்புறுத்தி வருகிறது.  பத்மநாதன் அவர்களுக்கு இலங்கையில் ஒரு மந்திரி பதவி கொடுத்து இலங்கை காவல் காக்கவில்லை; கருணாவைப் போல்.

புலிகளின் அரசியல் பிரிவு, புலனாய்வுப் பிரிவு என்பன, தலைவர் இருக்கும் காலத்திலும் தாமாக அறிக்கைகள் விட்டவை தான்.  இது தமிழ்நாட்டு தமிழர்களுக்கு புதியவையாக இருக்கலாம்.  ஆனால், ஈழத்தமிழர்களுக்கு இவை புதியவை அல்ல.  புலிகளின் பல அங்கங்களிலிருந்து அறிக்கைகள் அவ்வப்போது வருவனவே.  அர‌சிய‌ல் துறை, பேச்சாள‌ர், கடற்புலி த‌ள‌ப‌தி, வரலாற்று ஆசிரியர், படைத்தளபதிகள், இராணுவ‌ப் பேச்சாள‌ர் என்று பலர் அவ்வப்போது அறிக்கைகள் விட்டவர்கள் தான்.  தலைவர் தான் தான் அறிக்கை விடவேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு போடாமல் புலிகளின் எல்லாத் துறையும் நன்று வளரவேண்டும் என்று விரும்பியவர்.

பத்மநாதன் காசு வேண்டி விட்டார்; பொய் சொல்லிவிட்டார்; ஏமாற்றிவிட்டார்; இலங்கை அரசால் வாங்கப்பட்டுவிட்டார்; இந்திய அரசால் வாங்கப்பட்டுவிட்டார் என்று ஏதாவது சொல்லி தற்போதைய காலத்தின் கட்டாய வேலைப்பாடுகளை குலையவைக்கவே தமிழ்த்தேசியத்திற்கு எதிரான சக்திகள் விரும்புகின்றன.  தமிழர்கள் ஒற்றுமையாக தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கும் முயற்சியில் இறங்கவேண்டுமே தவிர, செய்யப்படும் முயற்சிகளை குழப்பி, திசைதிருப்பி, பிரிப்பதாக இருக்கக் கூடாது.

தலைவர் மேதகு வே. பிரபாகன் ஒரு மகத்தான தலைவர் என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை.  அவர் ஒரு தீர்க்கதரிசி.  இவ்வளவு காலமும் அவர் என்ன செய்தாலும், அதில் ஏதோ ஒரு முறையான காரணம் இருக்கும் என்று நம்பியவர்கள், இப்போது மட்டும் ஏன் முரணாக பேசுகிறீர்கள்.  மகத்தான தலைவரின் கட்டளைகளை சிரமேற் கொண்டு செய்துமுடித்தவர்களின் நம்பிக்கை இப்போது மட்டும் வீணாகாது.  தலைவரின் செய‌ல்க‌ள் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் த‌வ‌றான‌தாக‌த் தெரிந்தாலும் அத‌ன் உட்க‌ருத்து மிக‌ ஆள‌மாக‌ இருக்கும். அதை எதிர்த்து முன்னுக்குப் பின் முர‌ணாக‌க் க‌தைத்த‌ல் என்ப‌து துரோக‌த்திற்கு ஒத்த‌ செய‌ல்.

த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார், ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பொய் சொல்லுகிறார்க‌ள் என்று எண்ண‌த் தெரிந்த‌ உங்க‌ளுக்கு, த‌லைவ‌ர் தான் இற‌ந்தால் அடுத்து என்ன‌ செய்ய‌வேண்டும் என்று ஒரு செய‌ற்திட்ட‌ம் போடாம‌லா இருந்திருப்பார் என்று எண்ண‌த்தோன்ற‌வில்லை. த‌லைவ‌ரின் க‌ட்ட‌ளைக‌ளுக்கு கொடுத்த‌ அதே ம‌திப்பை இப்போதும் நாம் கொடுக்க‌க் க‌ட‌மைப்ப‌ட்டுள்ளோம். அவ‌ரின் ஆலோச‌னைக‌ளின் ப‌டிதான் ப‌த்ம‌நாத‌ன் முத‌ற்கொண்டு, புல‌னாய்வுத் துறை வ‌ரை செய‌ற்ப‌டுகின்ற‌‌ன‌. த‌மிழீழ‌ம் உருவாகுவ‌த‌ற்கு அடுத்த‌ க‌ட்ட‌ நக‌ர்வை த‌லைவ‌ர் வ‌குத்துக்காட்டிய‌ வ‌ழியில் தான் ப‌த்ம‌நாத‌ன் முன்னெடுக்கிறார். அதைத் தான் புலிக‌ளின் புல‌னாய்வுத் துறையும், த‌ற்போது ப‌த்ம‌நாத‌ன் எடுக்கும் முய‌ற்சிக்கு கைகொடுங்க‌ள் என்று கேட்டிருக்கிறார்க‌ள். த‌லைவ‌ரே நேரில் வ‌ந்து என‌க்காக‌ இதைச் செய்யுங்க‌ள் என்று கேட்க‌வேக‌ண்டும் என்று எதிர்பார்ப்ப‌வ‌ர்க‌ள், த‌லைவ‌ர் எப்போதுமே நேரில் கோரிக்கை விட்ட‌து கிடையாது என்ப‌தை ம‌ற‌ந்துவிட்டார்க‌ள். த‌லைவ‌ர் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மூல‌மாக‌த் தான் த‌ன் செய‌ற்திட்ட‌த்தை ந‌டைமுறைப்ப‌டுத்தியுள்ளார்.

த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்று ந‌ம்புவ‌ர்க‌ள், வ‌ருகிற‌ மாவீர‌ர் நாள் த‌லைவ‌ர் க‌தைப்பார் என்று எதிர்பார்த்து இருக்கிறார்க‌ள். த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்தால் கூட‌ மாவீர‌ர் நாளில் த‌லைவ‌ர் வெளிவ‌ர‌மாட்டார், நாம் த‌லைவ‌ர் சொன்ன‌ செய‌ற்பாட்டை செய்து அவ‌ர் வெளியில் வ‌ர‌ ஏதுவான‌ சூழ‌லை உருவாக்காவிட்டால். த‌லைவ‌ர் கொடுத்த‌ வேலையை செய்தால் தானே த‌லைவ‌ர் வெளியில் வ‌ர‌த்த‌க்க‌ சூழ‌ல் உருவாகும். அத‌ன்பிற‌கு தானே அவ‌ர் வெளியில் வ‌ர‌லாம். நீங்க‌ள் த‌லைவ‌ர் சொன்னால் தான் செய்வேன் என்று கிட‌ப்பில் கிட‌ந்தால், அந்த‌ சூழ‌ல் உருவாக‌ப்போவ‌தில்லை; அவ‌ரும் வ‌ர‌முடியாம‌ல் த‌விக்க‌வேண்டிய‌து தான். இதில் க‌வ‌னிக்க‌வேண்டிய‌ ஒரு வ‌ர‌லாற்றுத் த‌க‌வ‌ல் என்ன‌வென்றால், இந்தியா முன்பு த‌லைவ‌ரைக் கொன்றுவிட்டோம் என்று சொல்லி அறிவித்திருந்த‌து, இந்திய‌ இராணுவ‌ ஆக்கிர‌மிப்பின் போது. அப்போது கூட இல்லை நான் உயிருட‌ன் தான் இருக்கிறேன் என்று அறிக்கை ஒன்றும் விட‌வில்லை. இன்னும் சொன்ன‌ப்போனால், மூன்று வ‌ருட‌ங்க‌ளின் பின் தான் த‌லைவ‌ர் வெளிவ‌ந்‌தார்.

நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு உருவாக்க‌வேண்டும் என்ற‌ செய‌ற்திற‌னை எல்லோரும் ஒட்டுமொத்த‌மாக‌ செய்வோம். இனி வ‌ரும் செய‌ற்திட்ட‌ங்க‌ளையும், முழும‌ன‌துட‌ன் ந‌ட‌த்திக்காட்டுவோம். த‌லைவ‌ரின் வ‌ழிகாட்ட‌லை நாம் செய்து த‌லைவ‌ரின் ந‌ம்பிக்கையை நாம் கைவிடாம‌ல் காப்பாற்றுவோமாக‌.

No responses yet

May 26 2009


CAPitalZ

இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு!

இந்தியா த‌மிழின‌ அழிப்பாளிக‌ளில் ஒருவ‌ர் என்ற‌ ப‌ட்ட‌த்தை, 25,000 ம‌க்க‌ளுக்கு மேல் கொன்றும், 30,‍‍000 ஆயிர‌ம் ம‌க்க‌ளை அங்க‌வீன‌ராக்கியும், 3,00,000 ம‌க்க‌ளுக்கு மேல் உள்நாட்டிற்குள்ளையே இட‌ப்பெய‌ர‌வைத்தும் நிரூபித்திருக்கிற‌து.

எங்க‌ள் த‌லைவ‌ரைக் கொல்ல‌த் துணைபோன‌திலிருந்து, இந்தியா த‌மிழ‌னின் துரோகி என்ப‌தை நெடுங்கால‌த்திற்கு உறுதியாக்கிவிட்ட‌து. த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் சிங்க‌ள‌ இராணுவ‌த்தால் அநியாய‌மாக‌க் கொல்ல‌ப்ப‌டுகிறார்க‌ளே என்று கூட‌ க‌வ‌லைப்ப‌டாம‌ல், த‌மிழின‌ அழிப்பிற்கு சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் துணை நிற்கிற‌து.

முன்பு இந்திய‌ “அமைதிப் ப‌டை” யாய் வ‌ந்து செய்த‌ க‌ற்ப‌ழிப்புக‌ள் போதாதென்று, இப்போது இந்தியா, இல‌ங்கை அர‌சின் கொள்கைக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ ஐநா வ‌ரை கைகோர்த்து நிற்கிற‌து. டென்மார்க் ம‌ற்றும் சுவிஸ் நாடுக‌ள் இல‌ங்கையின் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளை ஆராய‌ வேண்டும்; அத‌ற்கு த‌னியாக‌ விவாதிக்க‌ வேண்டும் என்று ஒரு கோரிக்கை விடுத்த‌து. விடுத்த‌ கோரிக்கையை எதிர்த்து, அத‌ற்கு என்று தனியாக‌ விவாதிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை என்று க‌டுமையாக‌ எதிர்த்த‌ நாடுக‌ள்: இந்தியா, பாகிஸ்தான், ம‌லேசியா. 17 நாடுக‌ள் இல்லை, ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ள் ப‌ற்றிய‌ த‌னிப்ப‌ட்ட‌ விவாவ‌த‌ம் வேண்டும் என்று கோரிய‌தால், இவ‌ர்க‌ள் எதிர்ப்பு முறிய‌டிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ முறிய‌டிப்பை எதிர்த்து இந்தியா, சீனா, எகிப்து ஆகிய‌ நாடுக‌ள் ஐநாவை புற‌க்க‌ணித்து வெளிந‌ட‌ப்பு செய்திருக்கின்ற‌ன‌. இன்று இந்த‌ ம‌னித‌ உரிமை மீற‌ல் த‌னிப்ப‌ட்ட‌ விசார‌ணைக்கு வ‌ருகிற‌து. இன்ற‌ய‌ தின‌த்தில் இல‌ங்கைக்கு எதிராக‌, அல்ல‌து ஆத‌ர‌வாக‌ எத்த‌னை நாடுக‌ள் வாக்க‌ளிக்கின்ற‌ன‌ என்ப‌தைப் பொறுத்தே ம‌னித‌ உரிமை மீற‌ல் குறித்த‌ விசார‌ணை ஆர‌ம்பிக்குமா இல்லையா என்ப‌து தெரிய‌வ‌ரும்.

த‌ன் மான‌த் த‌மிழ‌னே, பாருங்க‌ள் உங்க‌ள் இந்தியாவின் கொள்கைக‌ளை. த‌மிழ‌ர் ப‌டையை அழிக்க‌த் துணை போய், எம் த‌மிழின‌த் த‌லைவ‌ரையும் கொல்ல‌த் துணை போய் முடிந்துவிட்ட‌து என்றாவ‌து… இனிமேலாவ‌து… த‌மிழ‌ன் ப‌க்க‌ம் நிற்கிற‌தா இந்த‌ இந்தியா? எங்கே அந்த‌ சில‌ பேர்வ‌ளிக‌ள், புலிக‌ளைத் தான் இந்தியா எதிர்க்கிற‌து; பிர‌பாக‌ர‌னைத் தான் இந்தியா எதிர்க்கிற‌து என்று ஐயோ கூயோ என்று கூச்ச‌லிட்ட‌வ‌ர்க‌ள். இந்தியா த‌மிழ‌னுக்கு அல்ல‌ எதிர்ப்பு, புலிக‌ளுக்குத் தான் என்று ஆணித்த‌ர‌மாக‌ வாதாடிய‌வ‌ர்க‌ள் எல்லாம் எங்கே? உங்க‌ள் முக‌ங்க‌ளை அங்கே இன‌ப்ப‌டுகொலையில் இற‌ந்துபோன‌வ‌ர்க‌ளுக்கும் இன்னும் ஏன் இற‌க்க‌வில்லை என்று நினைத்து வாடும் எம் த‌மிழின‌த்திற்குக் கொண்டு போய்க் காட்டுங்க‌ள்.

என‌க்கு என்ன‌ வினோத‌ம் என்றால், த‌மிழின‌த்திற்கு முற்றுமுழுதாக‌ ஆத‌ர‌வாக‌ நிற்க‌வேண்டிய‌ இந்தியா ஐநா ச‌பையில் இல‌ங்கைக்கு ஆத‌ர‌வாக‌ எதிர்ந‌ட‌ப்பு செய்திருக்கிற‌து. இதில் எந்த‌ வித‌த்திலும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌ மேலைத்தேய‌ நாடுக‌ள், ம‌னித‌ நேய‌த்தைக் காப்பாற்ற‌வேண்டி த‌மிழ‌ர்க‌ள் சார்பாக‌ போராடி வ‌ருகிற‌து.

அன்றுதொட்டு என் க‌ருத்து, இந்தியா த‌மிழ‌னுக்கு ஒருக்காலும் உத‌வ‌ப் போவ‌தில்லை என்ப‌து தான்; அது த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌னாக‌ இருந்தால் கூட‌. இன்றுவ‌ரை 400 இற்கும் மேற்ப‌ட்ட‌ த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ன் சிங்க‌ள‌ இராணுவ‌த்தால் கொலைசெய்ய‌ப்ப‌ட்டுள்ளான். போதாத‌ற்கு, ப‌ல‌ரின் உட‌மைக‌ள் அழிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன [வ‌ள்ள‌ம், வ‌லை போன்ற‌ன‌]‌; ப‌ல‌ர் ப‌ல‌ நாட்க‌ளாக‌ கைதுசெய்து வைக்க‌ப்ப‌ட்டிருந்திருக்கிறார்க‌ள். இவ்வ‌ள‌விற்கும், இந்தியா ஒரு ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காம‌ல், மாறாக‌, த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌னையும் கொன்றொழித்த‌ சிங்க‌ள‌வ‌னுட‌ன் கைகோர்த்து ஐநா வ‌ரை போராடி வெளிந‌ட‌ப்பு வ‌ரை செய்கிற‌து.

“என்ன‌ கொடுமை சார் இது” என்று சொல்லி அழ‌வே தோன்றுகிற‌து.

One response so far

Apr 24 2009


CAPitalZ

புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா?

புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போகவில்லை. அவர்களால் இயன்ற அளவு தாக்குகிறார்கள். அவர்களும் மக்களுடன் தான் இருக்கிறார்கள். இருந்த்தாலும் பலதரப்பட்ட உதவிகளுடன் இலங்கை இராணுவம் தாக்கி முன்னேறுகிறது.

அயல் நாடு இந்தியா கடற்படை நிறுத்தி புலிகளைக் கண்காணிக்குது, அமெரிக்கா சட்டலைட்டில் உடனுக்குடன் படமெடுத்து எந்த அசைவையும் இலங்கைக்குத் தெரியப்படுத்துகிறது. ஆளில்லா வேவு விமானம் அனுப்பி வடிவாக காணொழி மாதிரி மேலிருந்து பார்த்து குண்டுகளை அடிக்கிறது இலங்கை. இந்தியா கொடுத்த இரசாயனக் குண்டுகளைப் போட்டு ஒரேயடியாக பல நூறு பேரைக் கொன்று இலகுவாக்குகிறது இலங்கை. உணவு பொருட்களுக்கு அனுமதி இல்லை. மருந்த்துப் பொருட்களுக்கு அனுமதி இல்லை. தன்னார்வ உதவி செய்யும் குழுக்களுக்கும் அனுமதி இல்லை. பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி இல்லை. புலிகளை அனேகமான பலம் பொருந்திய வெளிநாடுகள் தடைசெய்திருக்கிறது.

இவ்வளவையும் எதிர்த்து எப்படி ஐயா வெல்வது?

புலிகள் இயக்கத்திற்குள்ளேயே, போராடுபவர்களுக்கு மட்டும் தானாம் இரண்டு நேரச் சாப்பாடு. மற்றய அனைவருக்கும் [அரசியல் துறை, பத்திரிகைத் துறை, கட்டளைத் தளபதிகள், வாக ஓட்டுநர்கள் & etc.]ஒரு நேரச் சாப்பாடாம்.

No responses yet

Feb 07 2009


CAPitalZ

தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?

Filed under India, Tamil Eelam

என்ன தலைப்பைப் பார்த்தவுடன் கோபம் வருகிறதா?

அட பின்ன என்னங்க?

தமிழ் நாட்டில உள்ள கொஞ்ச நெஞ்ச தமிழ்ப் பற்றாளர்களும் தீக்குளிச்சு/ தற்கொலை செய்துகொண்டால் தமிழ் மக்களை யாரப்பா காப்பாற்றுறது?

என்னைப் பொறுத்த வரையில், தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களாகத் தான் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரு உண்மையான தமிழ்ப் பற்றுள்ள தலைவர் இல்லை [அட கருணாநிதி சுத்தமா இல்லைங்க].  சரி தலைவர் இல்லை என்றால் அட நீங்களே ஒரு புதிய தலைவராக உருவாகுங்கள்.  எப்பவுமே யார் சொல்லையாச்சும் கேட்டு கேட்டு அடிமை போல் சொன்னதைச் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் ஏறி மக்களை வழிநடத்துவது கடினமாகத் தான் இருக்கும். இருந்தாலும் யாராச்சும் உருவாக வேண்டுமெல்லோ?

ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப் பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண் டிருந்தது.

மாறாக, கருணாதி தன் சுயரூபத்தை, இவ்வளவு காலமும் பொத்தி வைத்த ரகசியத்தை வெளியில் விட்டிருக்கிறார்.  தனக்கு புலிகள் அந்தக் காலத்தில் சகோதர யுத்ததை நடத்தியபோதே புலிகளை வெறுத்து விட்டதாம்.  தலைவர் வே. பிரபாகரன், ஒரு சர்வாதிகாரி ஆம்.

இவ்வளவு நாளும் புலிகளை பகைக்க விரும்பாமல் ஏதோ தானோ என்று இருந்திருக்கிறார் போலும்.  இப்போது புலிகள் “ஒழிக்கப்படுகிறார்கள்” என்றவுடன் உண்மையான தன் மனநிலையை வெளியில் விடுகிறார் போலும்.  இதற்கு ஜெயலலிதா எவ்வளோ மேல்.  அவர் கண்ணுக்குத் தெரிந்த எதிரி.  ஆனால், கூடவே இருக்கும் நரிகளை அடையாளங் காணுவது கடினம் தான்.

இப்படியான ஒரு படு மோசமான நெருக்கடியை தமிழீழ மக்கள் எதிர்கொண்டிருக்கும் வேளையில், உண்மையாக யார் தமிழீழ மக்கள் பக்கம், யார் தமிழீழ மக்களுக்கு எதிரானவர்கள் என்பது தெரிய வருகிறது.

தமிழீழப் பற்றாளர்களே, இந்தக் கால கட்டத்தை உண்ணிப்பாகக் கவனியுங்கள்.  புலித்தோல் போற்றிய நரியும், பசுத்தோல் போற்றிய நரியும்ம் தம்மைத் தாமே அடையாளங் காட்டிக்கொள்கின்றன.

உற்று நோக்குங்கள்.

பா – 2

3 responses so far

Nov 30 2008


CAPitalZ

[த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 4] தமிழ் நாடும் கேர‌ளாவும் 4 வித்தியாச‌ங்க‌ள்

த‌மிழ் ந‌ட்டில் த‌ரையிற‌ங்கி வெட்ப‌ த‌ட்ப‌ நிலையையும் உண‌ர்ந்த்தாச்சு. இனி என்ன‌ க‌ண்டேன் என்று பார்ப்போமா.

முன் இடுகைக‌ளில் இருந்து நான் பார்த்த‌ த‌மிழ் நாட்டைத் தான் சொல்கிறேன். க‌ன‌டாவில் கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ள் வாழ்ந்துவிட்டேன். ஆகையால், இல‌ங்கையில் இருந்து த‌மிழ் நாடு போகிற‌வ‌ரின் பார்வை என் பார்வையில் இருந்து நிச்ச‌ய‌மாக‌ வேறுப‌டும்.

எங்க‌ள் வ‌ண்டி மேல்ம‌ருவ‌த்தூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற‌து.

வாக‌ன‌ங்க‌ள் மிக‌ நெரிச‌ல்க‌ளாக‌ ப‌ய‌ணித்த‌ன‌. ப‌ய‌ண‌த்தில் ந‌வீன‌ த‌மிழ் நாடும், ஏழ்மை த‌மிழ் நாடும் மாறி மாறி வ‌ந்த‌ன‌. அது என்ன‌ அது? சில‌ க‌ட்டிட‌ங்க‌ள்/ இட‌ங்க‌ளைக் க‌ட‌க்கும்போது ந‌வீன‌ ம‌ய‌மாக்கிய‌தாக‌ இருக்கும். வ‌டிவாக‌, சுத்த‌மாக‌ இருக்கும். வீதியின் அருகாமையில், ஏதோ ஷெல் விழுந்து இடிந்து போன‌ க‌ட்டிட‌ங்க‌ள் போல் க‌ட்டிட‌ங்க‌ளையும் காண‌க்கூடிய‌தாக‌ இருந்த‌து. நான் நினைத்தேன் இவை என்ன‌ ந‌ம்ம‌ ஊரில் உள்ள‌ க‌ட்டிட‌ங்க‌ள் போல் அல்ல‌வா இருக்கிற‌து. ப‌ல‌ சிறிய‌ கோவில்க‌ள் கூட‌ த‌விக்க‌ விட்ட‌ நிலையில் இருந்த‌ன‌.  கட்டிடங்களுக்கு உள் செடி கொடிகள் வளர்ந்து பராமரிப்பற்றும் காணப்பட்டன.

வாக‌ன‌ம் ஓட்டுத‌ல் என்றால், ஏதோ ஒரு ம‌யிரிழை த‌ப்பினால், இடி என்ற‌ மாதிரித் தான் எல்லோரும் ஓட்டுவார்க‌ள். TATA SUMO வில் [க‌ன‌டாவில் SUV] இல் 10 பேர் போனோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்க‌ளேன். ஆமாம், முன்னுக்கு மூன்று பேர், ந‌டுவில் 3 பேர், பின்னுக்கு 4 பேர். Auto வில் கூட‌ ஓட்டுந‌ருட‌ன் ஒருவ‌ர், பின்னுக்கு மூன்று பேர், அதில் ஒருவ‌ர் ம‌டியில் இன்னுமொருவ‌ர் என்று 6 பேர் மொத்த‌மாக‌ [ஓட்டுந‌ரையும் சேர்த்து] செல்வோம். வாக‌ன‌ நெரிச‌லான‌ இட‌ங்க‌ளில், ஓட்டுவ‌து மிக‌வும் க‌டின‌மாக‌ என‌க்குத் தென்ப‌ட்ட‌து. ஒருவ‌ர் விட்டுத் த‌ருவார் என்று பார்த்துக்கொண்டிருந்தால், அவ‌ர் ஜென்ம‌த்திற்கு எடுக்க‌வே மாட்டார். 3 – Point Turn என்ப‌து, ஒருவ‌ர் எடுத்துக்கொண்டிருக்கையிலேயே முன்பும் பின்புமாக‌, ம‌ற்ற‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் பாட்டிற்கு ஏதும் ந‌ட‌க்காத‌து போல் போய்க் கொண்டிருப்பார்க‌ள். என்னைக் கேட்டால், இரு ச‌க்க‌ர‌ வ‌ண்டிக‌ளுக்கு என்றே த‌னி வீதி அமைத்தால் ந‌ல்ல‌து என்பேன். அவ‌ர்க‌ளும், மோட்டார் கார்க‌ளும் ஒன்றாக‌ப் போக‌த்தான் மிக‌வும் சிக்க‌லாக‌ இருக்கிற‌து. அட‌ இடிய‌ப்ப‌ச் சிக்க‌ல் என்பார்க‌ளே, அதைவிட‌ சிக்க‌லான‌துங்க‌. மாட்டு வ‌ண்டில்க‌ளும், மாடு இழுக்கும் ட‌ய‌ர் பூட்டிய‌ வ‌ண்டிக‌ளும் கூட‌ வீதிக‌ளில் க‌ண்டேன். இவ்வ‌ள‌வு சிக்க‌லுக‌ளுக்கிடையில், பொது ம‌க்க‌ளும் ஏதோ த‌ன் சொந்த‌ வீட்டில் ந‌ட‌ப்ப‌து போல், மிக‌வும் லாவ‌க‌மாக‌ வீதியைக் க‌ட‌ப்பார்க‌ள். ஆனால், என்ன‌ ஆச்ச‌ரிய‌ம், இவ்வ‌ள‌வு ம‌யிரிழை இடைவெளியில் ஓடினாலும் கூட‌, ஒரு சின்ன‌ கீற‌ல் கூட‌ விளாம‌ல் ஓடுகிறார்க‌ள் என்ப‌து உண்மையில் கெட்டித்த‌ன‌ம் தான்.

இப்ப‌டியே ஒரு காட்சியையும் க‌ண்டேன். ஒரு மிக‌வும் ஏழ்மையான‌ குடும்ப‌மா (அ) ப‌ல‌ குடும்ப‌ங்க‌ளிலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ளா என்று தெரிய‌வில்லை. அவ‌ர்க‌ள் ஒரு பெரிய‌ குப்பை மேட்டை ச‌ல்ல‌டை போட்டுக்கொண்டிருக்கிறார்க‌ள். வாக‌ன‌த்தில் போகும்போதே நாற்ற‌ம் தாங்க‌ முடிய‌வில்லை. என‌து த‌மிழ்நாட்டுப் ப‌ய‌ண‌த்தில் நான் க‌ண்ட‌ மிக‌வும் ஏழ்மையான‌ காட்சி இது தான். என் மூளையில் அந்த‌ நொடியில் உதித்த‌ சிந்த‌னைக‌ள். அடுத்த‌ வ‌ல்ல‌ர‌சு, IT இல் வ‌ள‌ர்ந்து விட்டோம் என்று எவ்வ‌ள‌வோ சொன்னார்க‌ள்… அட‌ எங்க‌ள் நாட்டில் [பிர‌ச்சினை பெரிதாவ‌த‌ற்கு முன்] கூட‌ இப்ப‌டிக் க‌ண்ட‌தில்லையே. க‌வ‌னிப்பார‌ற்ற‌ க‌ட்டிட‌ங்க‌ளும், குப்பையைக் கிள‌ரும் ஏழைக‌ளும் இப்போது இங்கு இருக்கிறார்க‌ளாயின், எங்க‌ள் நாடு பிர‌ச்சினைக்கு முன் இப்போதைய‌ த‌மிழ் நாட்டை விட‌ ந‌ன்றாக‌ இருந்திருக்கிற‌தே. இப்போதைய‌ த‌மிழீழ‌ம் போல் இருக்கிற‌தே த‌மிழ் நாடு என்று யோசிச்சேன். பிற‌கு, அட‌ இங்கு ஏழைக‌ளும், ப‌ண‌க்கார‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். அங்கு இப்போதைக்கு ஏழைக‌ள் ம‌ட்டும் தான் இருக்கிறார்க‌ள். க‌ன‌டாவில் கூட‌ குப்பையைக் கிள‌றுப‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். ஆனால், த‌மிழ் நாட்டில் பார்க்கும்போது ஏதோ ம‌ன‌து க‌டின‌மாக‌ இருந்த‌து.

நாங்க‌ள் வ‌ந்த‌ பெருஞ்சாலையில் [highway] இடையில் குறுக்காக‌ ஏதோ ஒரு தானிய‌ விதை வ‌கை செடிக‌ளை ப‌ர‌ப்பி விட்டிருக்கிறார்க‌ள். போகும் வாக‌ன‌ங்க‌ள் எல்லாம் அத‌ன் மேல் ஏறி மிதித்துக்கொண்டு தான் போக‌வேண்டும். அட‌ அது என்ன‌ண்டாவாம், இப்ப‌டி ந‌டு ரோட்டில் போட்டுத் தான் அதை உடைப்பார்க‌ளாம். கிட்ட‌த்த‌ட்ட‌ த‌விடு த‌ட்டுவ‌து போல். இப்ப‌டியும் ச‌ன‌ம் ஏழ்மையான‌ வாழ்க்கையில் த‌ங்க‌ள் தொழிலை செய்து வ‌ருகிறார்க‌ள்.

இப்ப‌டியே வீடு வ‌ந்து சேர்ந்தோம். க‌டைக‌ள், விருந்தின‌ர் வீடு என்று எல்லாம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ போய் வ‌ந்தோம்.

நான் பார்த்த‌தில். த‌மிழ் நாடு வ‌ற‌ண்ட‌ பிர‌தேச‌மாக‌வே தென்ப‌டுகிற‌து. ஆறுக‌ள் எல்லாம் வ‌ற‌ண்டு, ம‌ண‌லாக‌வும் க‌ல்லாக‌வும் தெரிகிற‌து. அந்த‌ இட‌த்தில் குடிசை போட்டுக் கூட‌ ஆட்க‌ள் வாழ்கிறார்க‌ள். மிக‌ப் பெரிய‌ ஆறுக‌ளுக்கு குறுக்காக‌ க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ பால‌ங்க‌ள் எல்லாம் waste ஓ என்று எண்ணும‌ள‌விற்கு அங்கு த‌ண்ணீர் வ‌ந்த‌ த‌டைய‌த்தையே காண‌வில்லை. ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் கூட‌ ம‌ர‌ங்க‌ள் சோலையாக‌ ப‌ச்சைப் ப‌சேலென்று இல்லை. வ‌ற‌ண்ட‌ பிர‌தேச‌த்தில் வ‌ள‌ர‌க்கூடிய‌ முற்செடிக‌ள் போன்ற‌ ம‌ர‌ங்க‌ள் தான் அதிக‌மாக‌த் தென்ப‌டுகின்ற‌ன‌.

எனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்த விடயம். தமிழ் நாட்டில் தமிழ் சாகுது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அப்போது தான் நேரில் பார்த்தேன். எந்த வியாபார நிலையம் கூட தமிழில் பெயர் பலகையைக் கொண்டிருக்கவில்லை என்பது மிகவும் கவலையான விடயமாக இருந்தது. அப்ப என்னதில இருக்கும்? “பர்னிச்சர் ஸ்டோர்” “கிருஷ்ணன் ஹோட்டல்”, “மார்க்க‌ட்”, “கோர்ப‌ரேட் ஸ்டோர்” என்று இப்படி ஆங்கிலத்தை தமிழில் எழுதி தான் சகல பெயர்ப்பலகைகளும் இருந்தன. இதை விட இங்கு கனடாவில் தமிழ் வாழுது என்று சொல்லலாம். அட கடைக்கு மட்டுமா இப்படி. ஊர்களுக்கும் இப்படி எல்லா பெயர் வைக்கிறார்கள்: “T. த‌ர்ம‌புர‌ம்”, “I.O.B. நக‌ர்”, என்று இப்ப‌டி ப‌ல‌ ஊர்க‌ள். முத‌லில், என்ன‌டா இது ஊர்க‌ளுக்கும் initial வைத்திருக்கிறார்க‌ளோ என்று அதிர்ந்து போனேன்.

பிற‌கு திருச்சியில் இருந்து கேர‌ளா சென்று வ‌ந்தோம். திருச்சியில் இருந்து வெளிக்கிட்டு, குருவாயூர் கோயிலுக்குப் போனோம்.

திருச்சியில் இருந்து கேர‌ளா போகும் பாதை நெடிய‌ ப‌ழ‌ வ‌கைக‌ள் வைத்து வித்துக்கொண்டிருந்தார்க‌ள். என‌க்கு நாங்க‌ள் இல‌ங்கையில் க‌ண்டிக்குப் போன‌ ஞாப‌க‌ம் தான் வ‌ந்த‌து.

கேர‌ளா எல்லை வ‌ந்த‌து. அத‌ற்குப் பிற‌கு ப‌ழ‌ங்க‌ள் ஏதும் வீதியோர‌ங்க‌ளில் விற்க‌ப்ப‌ட‌வில்லை. கேர‌ள‌ காவ‌ல்துறையிட‌ன் ப‌ண‌ம் க‌ட்டி சீட்டு எடுக்க‌ வேண்டும், அவ‌ர்க‌ள் மாநில‌த்திற்கு வாக‌ன‌ம் செல்வ‌தால். அது ப‌ர‌வாயில்லை. ஆனால், அந்த‌ காவ‌ல்துறைக்கு ரூ. 50 ல‌ஞ்ச‌மாக‌வும் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. ச‌ட்ட‌த்தைச் செய்வ‌த‌ற்கும் ல‌ஞ்ச‌மா என்ற‌ க‌ம‌ல் ஹாச‌னின் “இந்திய‌ன்” ப‌ட‌ கேள்வி ஞாப‌க‌த்திற்கு வ‌ந்த‌து. கோபிக்காதீங்க, பிற‌கு திரும்பி த‌மிழ் நாட்டுக்க‌ வ‌ரேக்க‌ த‌மிழ் நாடு காவ‌ல்துறை ச‌ளைத்த‌வ‌ர்க‌ள் அல்ல‌ என்று அவ‌ர்க‌ளும் ப‌ண‌ம் வாங்கினார்க‌ள்.

இப்ப‌டியே குருவாயூர் கோயிலுக்குப் போனோம். அன்று தான் கேர‌ளாவில் “ஓண‌ம்” ப‌ண்டிகை. அப்போது தான் எங்க‌ளுக்குத் தெரிந்த‌து. ச‌ன‌க் கூட்ட‌ம் நிற‌ம்பி வ‌ளிந்த‌து. சாமி த‌ரிச‌ன‌த்திற்கு மிக‌ நீண்ட‌ வ‌ரிசை காத்திருந்த‌து. நாங்க‌ளும் காத்திருந்து உள்ளே போனால், அங்கு ஏதோ ஆடு மாட்டைக் க‌லைப்ப‌து போல் துர‌த்துகிறார்க‌ள் உள் வேலை செய்யும் ஆட்க‌ள். வேக‌மாக‌ச் செல் என்று பில‌த்துக் க‌த்தி கூச்ச‌லிடுகிறார்க‌ள் [ம‌லையாள‌த்தில்]. போதாதுக்கு, க‌ம்பிக‌ளிலும், த‌க‌ர‌ங்க‌ளிலும் அடித்து ஒலி எழுப்புகிறார்க‌ள். நாங்க‌ளும், ஆட்டு ம‌ந்தைக‌ள் போல் ஒரு க‌ம்பிக‌ளால் வ‌குக்க‌ப்ப‌ட்ட‌ பாதையில் மிக‌ வேக‌மாக [கும்பிட‌க் கூட‌ நேர‌ம் கிடைக்காம‌ல்] க‌ட‌வுளைக் க‌ண்டால் போதும் என்று போனோம். என‌க்கு கோயில் வெறுத்துப் போன‌து. என‌க்கு வேறு கோயில்க‌ளிலும் இப்ப‌டிப்ப‌ட்ட‌ அனுப‌ம் கிடைத்த‌து. ஆனால், பிற‌கு சிந்தித்துப் பார்க்கையில், அவ்வ‌ள‌வு ச‌ன‌ம் வ‌ந்தால் அவ‌ர்க‌ளும் என்ன‌ செய்வ‌து. அத‌னால‌, இந்தியாவில் எந்த‌க் கோயிலுக்கும் எந்த‌ ஒரு விசேட‌ தின‌ங்க‌ளிலும் செல்லாதீர்க‌ள். நிதான‌மாக‌ சாமி கும்பிட‌ வேண்டுமா?, எந்த‌ ஒரு விசேட நாளாக‌ இல்லாத‌‌ நாளாக‌ப் பார்த்துப் போங்க‌ள்!

ஆனால், ஒன்றை நினைத்து ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டேன். மேல் ம‌ருவ‌த்தூர் அம்ம‌ன் கோவிலில் மூல‌ஸ்தான‌த்திற்குள் செல்ல‌வே எங்க‌ளை அனும‌தித்தார்க‌ள். மூல‌ஸ்தான‌ விக்கிர‌க‌த்தை சுற்றி வ‌ந்தோம். த‌மிழில் பூசை வைத்தார்க‌ள். என்ன‌ தான் நான் த‌மிழ் ப‌ற்றாள‌னாக‌ இருந்தால் கூட‌ கோவிலில் எப்போதும் ச‌ம‌ஸ்கிருத‌ ம‌ந்திர‌த்தைக் கேட்டுக் கேட்டு, த‌மிழில் கேட்கும் போது ஏதோ ஒரு வித‌ அந்த‌ர‌மாக‌வே இருந்த‌து. ஒரு த‌லைமுறை இப்ப‌டி த‌மிழில் கோவிலில் பூசை செய்து பார்த்து ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டு விட்டால், பிற‌கு ச‌ரியாகிவிடும் என்று நினைக்கிறேன். திருச்சியில் கூட‌ மேல்வ‌ருவ‌த்தூருக்கு என்று ஒரு சிறிய‌ அம்ம‌ன் கோவில் இருக்கிற‌து. அங்கும் த‌மிழில் பூசை வைத்தார்க‌ள். திருச்சியில் இருக்கும், உச்சிப் பிள்ளையார் கோவிலிலும் அர்ச்ச‌னை செய்ப‌வ‌ர்க‌ளை, உள்ளே மூல‌ஸ்தான‌த்திற்கு அருகாமையில் அழைக்கிறார்க‌ள். நான் ம‌லேசியாவில், ப‌த்து ம‌லை முருக‌ன் கோவிலுக்கு ம‌லை ஏறி இருக்கிறேன். உச்சிப் பிள்ளையார் கோவில், ப‌த்து ம‌லை முருக‌ன் கோவிலுக்கு ஏறும் ப‌டிக‌ளை விட‌க் குறைவாக‌வே என‌க்குத் தென்ப‌ட்ட‌ன‌.

(1)  கேர‌ளாக்குள் எங்கு பார்த்தாலும் ப‌ச்சைப் ப‌சேலென்று ம‌ர‌ங்க‌ள். ஆறு குள‌ங்க‌ள் எல்லாம் நிற‌ம்பி இருந்த‌ன‌. போதாத‌த‌ற்கு, வீடுக‌ளுக்கு முன்னால் குள‌ம் குள‌மாக‌ த‌ண்ணீர் நின்ற‌து. அதில் தாம‌ரைப் பூக்க‌ள் கூட‌ இருந்த‌ன‌. தென்னை ம‌ர‌ம் இல்லாத‌ காணி இல்லை என்று சொல்லும‌ள‌விற்கு தென்னை ம‌ர‌ங்க‌ளாக‌ இருந்த‌ன‌. வ‌ழி நெடுக‌ “க‌ள்” என்று ம‌லையாள‌த்தில் [ஆனால், "க‌" த‌மிழ் க‌ மாதிரியே இருந்த‌து] எழுதி இருந்தார்க‌ள். என்ன‌ ஆச்ச‌ரிய‌ம் இள‌நீர் மிக‌ச் சில‌ இட‌ங்க‌ளிலேயே விற்க‌ப்ப‌ட்ட‌ன‌. ப‌ச்சை இள‌நீர் தான் கூடுத‌லாக‌ விற்றார்க‌ள். செவ்விள‌நீர் வெறும் குரும்பையாக‌ இருந்த‌து. என்றாலும், ஆசைக்கு வாங்கிக் குடித்தேன். என்ன‌ இருந்தாலும், இல‌ங்கையின் இள‌நீருக்கு அடிக்காது.

அப்ப‌டியே கோவ‌ள‌ம் க‌ட‌ற்க‌ரைக்குச் சென்றோம். நாங்க‌ள் ச‌ற்று க‌ட‌ல் நீரில் குழித்தோம். க‌ருங்க‌ல் ம‌ண் அதிக‌மாக‌ இருந்த‌தால், க‌ட‌ற்க‌ரை க‌றுப்பாக‌, ஒளிப்பாக‌ இருந்த‌து. ஆனால், க‌ட‌ல் குளிக்க‌ இங்கே செல்லாதீர்க‌ள். க‌ட‌ல் அலை மிக‌வும் அகோர‌மாக‌ பாய்வ‌தால், ச‌ரியாக‌ க‌ட‌ல் குளிக்க‌வே அங்குள்ள‌ life guards விட‌மாட்டார்க‌ள். உண்மையில் ஆப‌த்தான‌தாக‌க் கூட‌ இருந்த‌து.

பிற‌கு House Boat இல் ஏறினோம். ஒரு த‌ர‌க‌ர் மூல‌மாக‌வே ஏறினோம். இதில் இன்னுமொரு த‌ர‌க‌ருக்கும் எம‌து வாக‌ன‌ ஓட்டுந‌ருக்கும் த‌க‌ராறு ஏற்ப‌ட்டு விட்ட‌து. எங்க‌ள் வாக‌ன‌ சார‌தி த‌மிழில் பேசுகிறார். ம‌ற்ற‌ய‌வ‌ர், ம‌லையாள‌த்தில் பேசுகிறார். எங்க‌ள் சார‌தி, “இஞ்ச‌ வாங்க‌ சார், இஞ்ச‌ வாங்க‌ சார்” என்று கூப்பிட்டு கூப்பிட்டு பேசுகிறார். எங்க‌ள் எல்லோருக்கும் குலை ந‌டுக்க‌ம். வேற்று பிர‌தேச‌த்தில் வ‌ந்து சண்டை பிடிக்கிறார். எல்லோரும் சேர்ந்து மொத்தி [அடித்து] விட்டார்க‌ள் என்றால்? இல‌ங்கையில் இப்ப‌டி எல்லாம் செய்ய‌ முடியுமா? சிங்க‌ள‌ ஊரில் த‌மிழில் ச‌ண்டை பிடித்தால், முத‌லில் “புலி” என்று தான் உள்ளே போடுவார்க‌ள். அட‌ த‌மிழ‌ன் சிங்க‌ள‌த்தில் கூட‌ ச‌ண்டை பிடிக்க‌ முடியாதுங்க‌. ஒரு ப‌க்க‌த்தில் ப‌ய‌மாக‌ இருந்தாலும், ம‌று ப‌க்க‌த்தில் அந்த‌ சுத‌ந்திர‌ம் ச‌ந்தோச‌த்தைக் கொடுத்த‌து. [இப்ப‌டி க‌ர்நாட‌காவில் செய்ய‌லாமா என்று என‌க்குத் தெரியாது]. இது ம‌ட்டும‌ல்ல‌, த‌மிழ் நாட்டில் கூட‌ வேற்று மொழிக்கார‌ர்க‌ள் மிக‌வும் சுத‌ந்திர‌மாக‌ த‌ங்க‌ள் மொழியை ச‌ன‌ நெரிச‌லான‌ இட‌ங்க‌ளில் கூட‌ பேசுகிறார்க‌ள். எங்க‌ளுக்கு என்றால், சிங்க‌ள‌வ‌ன் எங்க‌ளைக் க‌ண்டு பிடிச்சிடுவானோ என்று ப‌ய‌ந்து ப‌ய‌ந்து தான் இருந்திருப்போம். இந்த‌ சுத‌ந்திர‌ம் மிக‌வும் விய‌ப்பாக‌, ஆனால் ஆரோக்கிய‌மாக‌ இருந்த‌து. இதைத் தான் “ச‌ன‌நாய‌க‌ம்” என்று சொல்வார்க‌ளோ?

ஆனால், அந்த‌ House Boats இருக்கும் இட‌த்திற்குப் போனால், ஏராள‌மான‌வை நிற்கின்ற‌ன‌. அங்கு போய் பார்த்து விருப்ப‌மான‌தை பேர‌ம் பேசி ஏறியிருக்க‌லாம். சில‌வ‌ற்றில் satellite எல்லாம் பூட்டி இருந்தார்க‌ள். ஆனால், house boat இல் சுத்த‌ம் இல்லை என்று குறை கூறும‌ள‌விற்கு இல்லை. மிக‌வும் ந‌வீன‌மாக‌த் தான் உள்ளுக்குள் இருந்த‌ன‌. ஏதோ ஒரு ந‌ல்ல‌ hotel இல் இருப்ப‌து போல் தான் இருந்த‌து. ஆனாலும், இர‌வு வ‌ந்த‌வுட‌ன் ஒரு ப‌ய‌ம். அட‌டே, பெண்க‌ள் எல்லாம் இருக்கிறார்க‌ள், ந‌கைக‌ளைக் கொள்ளைய‌டிக்க‌ திருட‌ன் வ‌ருவானா? (அ) க‌ப்ப‌லில் ஓட்டுப‌ரே திருடாவாரா என்று. எங்க‌ளுட‌ன் 3 பேர், க‌ப்ப‌ல் ஓட்டுந‌ர், ச‌மைய‌ல் கார‌ர், உத‌வியாள‌ர், என்று கூட‌வே இருப்பார்க‌ள். இர‌வில் க‌ப்ப‌லை ஒரு ஓர‌மாக‌ க‌ட்டுவார்க‌ள். ஆனால், அந்த‌ ஓர‌மாக‌ வாளும் ம‌க்க‌ள் அந்த‌ கும் இருட்டிலும் ந‌ட‌மாடிக் கொண்டிருப்பார்க‌ள். அவ‌ர்க‌ள் வ‌ந்து திருடி விடுவார்க‌ளா என்று கூட‌ ப‌ய‌மாக‌ இருக்கும். இப்ப‌டி house boat இல் போகிற‌வ‌ர்க‌ள் நகைக‌ளைப் போடாதீர்க‌ள். ஒரு சில‌ருட‌னோ/ த‌னியாக‌வோ செல்லாதீர்க‌ள். க‌ன‌ பேர் போனால் தான் ப‌ய‌ம் ச‌ற்று குறைவாக‌ இருக்கும். ப‌டுக்கும்போது க‌ண்ணாடி ச‌ன்ன‌லை துணி போட்டு ம‌றைத்து விட்டுத் தான் ப‌டுத்தோம். ஏனென்றால், அருகாமையில் குடியிருக்கும் ம‌க்க‌ள் எங்க‌ள் க‌ப்ப‌லுக்கு ப‌க்க‌மாக‌த் தான் ந‌ட‌ந்து திரிகிறார்க‌ள்.

ம‌லையாள‌த்திற்கும், த‌மிழிற்கும் பெரிய‌ வித்தியாச‌ம் கிடையாது. இதில் இன்னும் வேடிக்கை என்ன‌வென்றால், நாங்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் உப‌யோகிக்கும் சொற்க‌ளை ம‌லையாள‌த்தில் உப‌யோகிக்கிறார்க‌ள். “உண்டு” “கிடையாது” என்று சொல்லும்போது என‌க்கு ச‌ந்தோச‌மாக‌ இருந்த‌து. அட‌ இட‌ம் கூட‌ யாழ்ப்பாண‌த்தைப் போல் தான் ப‌ச்சைப் ப‌சேலென்று இருந்த‌து. அங்க‌த்தே நினைப்பைக் கூட்டிய‌து கேர‌ளா தான். (2)  போதாத‌ற்கு, வீடுக‌ள் கூட‌ யாழ்ப்பாண‌ வீடுக‌ள் மாதிரி விசால‌மாக‌ இருந்த‌ன‌. த‌மிழ் நாட்டில் கொழும்பு வீடுக‌ள் போல், முற்ற‌ம் மிக‌ச் சிறிதாக‌வே இருக்கும். ஆனால், கேர‌ளாவில் வீடுக‌ளுக்கு முற்ற‌ம் யாழ்ப்பாண‌ வீடுக‌ள் போல் மிக‌ப் பெரிதாக‌ இருந்த‌து. வீதி வாச‌லில் இருந்து வீட்டு வாச‌லுக்கு வெகு தூர‌ம் இருந்த‌து.

(3)  இதை விட‌ வேறு ஒரு வித்தியாச‌த்தையும் க‌ண்டேன். நான் த‌மிழ் நாடுக்கு வ‌ரும்போது என் எதிர்பார்ப்பு எங்கும் சினிமாவாக‌த் தான் இருக்கும் என்று இருந்த‌து. ஆனால், த‌மிழ் நாட்டில் எங்கும் அர‌சிய‌ல் poster க‌ளாக‌த் தான் இருந்த‌து. இது என‌க்குக் கிடைத்த‌ மிக‌ப் பெரிய‌ அதிர்ச்சி.  மேல்ம‌ருவ‌த்தூரில் இருந்து திருச்சி வ‌ரும் ம‌ட்டும், “திருமாவ‌ள‌வ‌ன்”, “கேப்டன் விஜ‌ய‌காந்த்” என்று கொட்டை எழுத்துக‌ளில் சுவ‌ர்க‌ளில் எழுதி இருந்தார்க‌ள். அசிங்க‌மாக‌ அல்ல‌, அச்ச‌டித்தாற் போல் இருந்த‌து. திருச்சியில் ச‌ற்று க‌ருணாநிதிக்கும், ம‌க‌ன் “தளபதி மு.க‌. ஸ்டாலின்”  இற்கும் இருந்த‌து. ஆனால், வ‌ழி நெடுக‌ இப்ப‌டி ஏதோ ஒன்று இருந்த‌து. ஆனால், கேர‌ளாவில் ம‌ருந்துக்குக் கூட‌ அர‌சிய‌ல் poster க‌ள் இருக்க‌வில்லை. ஆக‌க் கூடி ஊருக்கு ம‌த்தியில் இருக்கும் ச‌ந்தி [downtown] யில் ம‌ட்டும் சில‌ அர‌சிய‌ல் poster க‌ள் இருந்த‌ன‌. ம‌க்க‌ள் அர‌சிய‌ல் த‌ங்க‌ள் சுவ‌ர்க‌ளை அழுக்காக்க‌ இட‌ம் கொடுக்க‌வில்லை என்ப‌து தெட்ட‌த் தெளிவாக‌த் தெரிந்த‌து.

கேர‌ள‌ கோவில் குருவாயூராக‌ இருக்க‌ட்டும் வேறு ஹிந்துக் கோவிலாக‌ இருக்க‌ட்டும், அவைக்கு கோபுர‌ம் இருக்க‌வில்லை. த‌மிழ் கோவில்க‌ள் போல் கோபுர‌ம் அற்று சீன‌ கோவில்க‌ள் போல் தான் கூரைக‌ள் இருந்த‌ன‌. த‌மிழ‌ருக்கே ஆன‌ த‌னிச் சிற‌ப்போ கோபுர‌ங்க‌ள் என்ற‌ கேள்வியை இவை எழுப்பின‌?

(4) த‌மிழ் நாடு முழுவ‌தும் சில‌ தூர‌ங்க‌ளுக்கு இடையில் ஒரு கோவில் காண‌ப்ப‌டும். கால் மிதித்த‌ இட‌மெல்லாம் கோவில்‌க‌ள் என்று கூட‌ சொல்ல‌லாம். போதாத‌த‌ற்கு புதுக் கோவில்க‌ளும் க‌ட்டுகிறார்க‌ள். ஆனால், கேர‌ளாவில் கோவில்க‌ள் மிக‌ மிக‌ அரிதாக‌வே தென்ப‌ட்ட‌ன‌. கேர‌ள‌ ப‌ய‌ண‌த்தில் 2 கோவில்க‌ளும் 5 ப‌ள்ளிவாச‌ல்க‌ளும் க‌ண்டேன்.

House boat போய் முடிய‌ அதே இட‌த்தில், speed boat ஏறி ஓடினோம். அதாவ‌து ஒரு வ‌ள்ள‌த்தில் engine பூட்டி கையால் பிடித்து திருப்ப‌து. அதில் தான். என‌து மாம‌னாருக்கு மிக‌வும் ஆசையாக‌ இருந்த‌தால் ஓடினோம். அட‌ நான் ஓட்ட‌வில்லை. வ‌ள்ள‌ சொந்த‌க் கார‌ன் ஓட்டி சிறிது தூர‌ம் சென்ற‌ பின் என‌து மாம‌னார் ஓட்டினார். நாங்க‌ள் ஓடிய‌து 40 horse power engine ஆம். மாம‌னார் சொன்னார் தாங்க‌ள் ஊரில் 180 horse power இல் எல்லாம் ஓடினார்க‌ளாம் [கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்]. இது பெரிதாக‌ இல்லை என்று ச‌லித்துக் கொண்டார். என‌க்கெண்டால் இந்த‌ 40 horse power ஏ வேக‌மாக‌த் [ப‌ய‌மாக‌] தான் இருந்த‌து.

கேர‌ள‌ ப‌ண்டிகையான‌ ஓண‌ம் நேர‌த்தில் நாங்க‌ள் சென்ற‌தால், ப‌ல‌ க‌டைக‌ளில் சாப்பாட்டிற்கு 2 ம‌ணித்தியால‌ங்க‌ள் வ‌ரை காக்க‌ வேண்டி இருந்த‌து. எல்லோரும் விடுமுறையில் போய் விட்டார்க‌ளாம். இறால், ந‌ண்டு கூட‌ பிடிக்க‌ ஒருவ‌ரும் போகாத‌தால், hotel க‌ளில் அது கூட‌ இல்லை. 5 நாட்க‌ளுக்கு விடுமுறையாம். கேர‌ளா போகிற‌வ‌ர்க‌ள் ஓண‌ம் ப‌ண்டிகை நேர‌த்தில் போகாதீர்க‌ள். எங்கு பார்த்தாலும் சோட‌னையாக‌வும், கோல‌ங்க‌ளாக‌வும் இருக்க‌வில்லை. ஒரு சில‌ இட‌ங்க‌ளில் பிள்ளையாரை பூக்க‌ளால் சோடித்து இருந்தார்க‌ள்.

பிற‌கு அப்ப‌டியே, குற்றாள‌ம் வ‌ந்து குளித்தோம். வ‌ரும் வ‌ளியில் ம‌துரை மீனாட்சி கோயிலுக்குப் போக‌லாம் என்று ஒரு ம‌திய‌ம் 2 ம‌ணி போல் போனோம், ஆனால் கோவில் பூட்ட‌ப்ப‌ட்டு இருந்த‌து. மீண்டும் 4 ம‌ணிக்குத் தான் துற‌ப்பார்க‌ளாம். நாங்க‌ள் நிற்காமல் வ‌ந்துவிட்டோம்.

ஆனால் ம‌துரையில் ஒன்றைக் க‌ண்டேன். ஒரு பெரிய‌ ச‌துர‌ குளிக்குள் ந‌டுவில் கோவில் இருக்கிற‌து. நான் நினைக்கிறேன் அந்த‌க் குழி முன்பு குள‌மாக‌ இருந்திருக்க‌ வேண்டும் என்று. இப்போது வ‌ற்றிவிட்ட‌தால் கீழே கிரிக்கெட் விளையாடுகிறார்க‌ள். ஆனால், அந்த‌ இட‌ம் ஏதோ ம‌ந்திர‌ப் ப‌ட‌ங்க‌ளில் வ‌ருவ‌து போல் ஒரு பிர‌மிப்பாக‌வே இருந்த‌து. நாலா ப‌க்க‌மும் மிக‌ப் பெரிய‌ அக‌ழி. சின்ன‌ அக‌ழி அல்ல‌. ஒரு உதைப‌ந்தாட்ட‌ திட‌ல் அள‌வு பெரிய‌து.  ஆழம் கூட ஒரு 7/ 8 பேர் ஆழ்ப்பம்.  ந‌டுவில் கோவில். ஆனால், ம‌துரை திருச்சியை விட‌ சுத்த‌ம் குறைந்த‌ ஏழை இட‌மாக‌வே தென்ப‌டுகிற‌து. த‌ட்டில் குடிசை போட்டுக் கூட‌ ஆட்க‌ள் வாழ்கிறார்க‌ள். வீதிக‌ள் அக‌ல‌ம் குறைந்த‌ன‌வையாக‌வே தென்ப‌ட்ட‌ன‌.

இவை விட‌, சாக்க‌டை என்று த‌மிழ்ப் ப‌ட‌ங்க‌ளில் சொல்வார்க‌ளே அத‌ற்குப் ப‌க்க‌த்திலேயே சாப்பாட்டுக் க‌டை வைத்திருப்பார்க‌ள். ச‌மைத்து ச‌மைத்து குப்பையை அப்ப‌டி கையால் எத்தி விட்டால் அது சாக்க‌டையில் விழும். ஆனால், அந்த‌ தாங்க‌முடியாத‌ நாத்த‌த்திலும் [என‌க்கு, அவ‌ர்க‌ளுக்கு அல்ல‌] மேசை போட்டு வெட்ட‌ வெளியில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்க‌ள். இப்ப‌டி ம‌ட்டும‌ல்ல‌, அந்த‌ குடிசையும் கோபுர‌மும் என்று சொல்வ‌து போல், மிக‌ ந‌ல்ல‌ மாடி க‌ட்டிட‌ சாப்பாட்டுக் க‌டை கூட‌ ஒரு நாத்த‌ம் தாங்க‌ முடியாத‌ சாக்க‌டைக் காணிக்கு அருகாமையில் இருக்கும். நானும் அப்ப‌டி ஒரு க‌டைக்குப் போய்ச் சாப்பிட்டிருக்கேன். க‌ன‌டாவின் Tim Horton’s போல் ஒரு க‌டையும் ஊத்த‌ச் சாப்பாட்டுக் க‌டையும் அருக‌ருகாமையிலேயே இருப்ப‌தையும் க‌ண்டிருக்கிறேன்.

ஆனால், ஒன்று த‌மிழ் நாடு முன்னேறுகிற‌து என்ப‌தை ம‌றுப்ப‌த‌ற்கில்லை. எங்கு பார்த்தாலும் வீதி போடுகிறார்க‌ள். பெருஞ்சாலை [highway] க‌ட்டி ந‌டுவில் பூ ம‌ர‌ம் எல்லாம் ந‌ட்டிருக்கிறார்க‌ள். க‌ன‌டாவில் கூட‌ பெருஞ்சாலைக‌ளில் பூ ம‌ர‌ம் இல்லை. புதிது புதிதாய் க‌ட்டிட‌ங்க‌ள் க‌ட்டிக்கொண்டிருக்கிறார்க‌ள். என‌து மாமி சொன்னா, தான் முன் வ‌ந்த‌த‌ற்கும் [அதாவ‌து 1 வ‌ருட‌த்திற்கு முன்] இப்ப‌வுமே ந‌ல்ல‌ வீதிக‌ள் ப‌ல‌ போட்டுவிட்டார்க‌ள் என்றார். நாங்க‌ள் த‌ங்கி இருந்த‌ வீட்டின் அருகாமையில் இருந்த‌ ம‌ண் வீதியைக் கூட‌ தார் வீதியாக‌ மாற்றுகிறார்க‌ள். ஆனால், தார் வீதி போடுவ‌த‌ற்கு செம்ம‌ண் உப‌யோகிக்கிறார்க‌ள். நான் நினைத்தேன், அட‌டே விவ‌சாய‌ ம‌ண்ணை ஏன் இத‌ற்கு உப‌யோகிக்கிறார்க‌ள் என்று.

என‌க்கு த‌மிழ் நாட்டில் மிக‌வும் பிடித்த‌து: ப‌ழ‌ர‌ச‌ம்.
க‌ன்டாவில் Fresh Fruit Juice என்று சொல்லி குளிர்பான‌ப் பெட்டியில் இருந்த‌ சாறைத் த‌ருவார்க‌ளே. அங்கே உண்மையான‌ ப‌ழ‌த்தை எங்க‌ள் க‌ண் முன் அரைத்து juice எடுத்துத் த‌ருவார்க‌ள். முந்திரிய‌ப் ப‌ழ‌ம், மாதுள‌ம் ப‌ழ‌ம், சாத்துக்குடி [Orange மாதிரி, ஆனால் இனிக்கும்], அன்னாசி, ச‌போடா, Lemon, ம‌ற்றும் சுத்த‌மான‌ பால், என்று எல்லாம் மிக‌வும் ஆசைப்ப‌ட்டுக் குடித்தேன்.

எந்த‌க் க‌டையிலும் சைவ‌ சாப்பாடு அந்த‌ மாதிரி இருக்கும். நெய் தோசை என்ன‌, பூரி என்ன, இட்ட‌லி என்ன‌‌ எல்லாம் “கிய‌ல‌ வ‌ட‌க் நானே” [சிங்க‌ள‌ம்: சொல்லி வேலை இல்லைய‌ல்லோ]. அசைவ‌ சாப்பாடு என‌க்கெண்டால் பிடிக்க‌வில்லை. ஆனால், பிற‌கு ஆட்க‌ள் சொன்னார்க‌ள் செட்டிநாட்டுக் க‌டைக‌ளில் அசைவ‌ச் சாப்பாடு ந‌ன்றாக‌ இருக்கும் என்று. மிக‌ப் பெரிய‌ hotel க‌ளில் சாப‌பாடு ந‌ன்றாக‌த் தான் இருக்கும். Chicken 65 உண்மையில் ந‌ன்றாக‌த் தான் இருந்த‌து. Chicken 65 என்றால், கோழி முட்டையில் இருந்து பொரித்து 65வ‌து நாள் அதை வெட்டி க‌றி ச‌மைத்தால் தான் அது உண்மையில் Chicken 65.

தெளிவாக‌, நான் த‌மிழ் நாடு முழுக்கப்‌ பார்க்க‌வில்லை. ஆனால், இவ்வ‌ள‌வு இட‌ங்க‌ளுக்குப் போகும் வழியில் ப‌ல‌ ஊர்க‌ளைக் க‌ட‌ந்து சென்றேன். என்னைப் பொறுத்த‌ வ‌ரையில் இந்தியா ஒரு சுற்றுலா இட‌மாக‌க் க‌ருதி போகாதீர்க‌ள். உங்க‌ள் ப‌ழைய‌ நினைவுக‌ளை அசை போட‌, “எங்க‌ள் ஊர் எப்ப‌டி” என்று மீண்டுமொருமுறை அனுப‌விக்க‌, இய‌ற்கையை ர‌சிக்க‌ செல்லுங்க‌ள்.  சறமும், shorts  உம் மறக்காமல் கொண்டு செல்லுங்கள்.

முற்றும்.

4 responses so far

Nov 25 2008


CAPitalZ

த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னின் வீடு

Filed under LTTE, Tamil Eelam

பிர‌பாக‌ர‌னின் வீடு

இது தாங்க‌ த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னின் வீடு. இப்ப‌டித் தான் இறுதியாக‌ வ‌ந்த‌ ச‌மாதான‌ கால‌த்தில் இருந்த‌து.

என்ன‌ ஆச்ச‌ரிய‌ம், எத்த‌னை பேரின்ரை வீடு த‌ரைம‌ட்ட‌ம் ஆக்க‌ப்ப‌ட்டிருந்தாலும், த‌லைவ‌ரின்ரையை விட்டு வைத்திருக்கிறார்க‌ள். [பெயின்ற் இப்போது அடித்த‌து, ஆனால், க‌ட்டிட‌ம் ப‌ழைய‌ க‌ட்டிட‌மே].

த‌லைவ‌ர் முத‌ன் முத‌லில் சிங்க‌ள‌ இராணுவ‌ம் வீடு தேடி வ‌ந்த‌போது ஒளிந்திருந்த‌ ம‌ர‌மும் தெரிகிற‌து.

என‌து பெற்றோர் ச‌மாதான‌ கால‌த்தில் த‌மிழீழ‌ம் சென்றிருந்த‌ போது அவ‌ர்க‌ள் போய்ப் பார்த்தார்க‌ள்.

இதில் இன்னும் விசேட‌ம் என்ன‌ தெரியுமா? ச‌மாதான‌ கால‌த்தில், சிங்க‌ள‌ ஊர்க‌ளில் இருந்து பேரூந்து சுற்றுலா வ‌ந்து எல்லாம் பார்த்தார்க‌ளாம். சில‌ர் போகும்போது ஒரு பிடி ம‌ண் எடுத்துக்கொண்டும் சென்றார்க‌ளாம்.

எதிர் கால‌த்தில் இந்த‌ வீடு ஒரு பெரும் சுற்றுலா த‌ல‌மாக‌ வ‌ந்தாலும் வ‌ரும், த‌மிழீழ‌ம் கிடைத்த‌ பின்.

த‌லைவ‌ரைப் போல் இந்த‌ வீடும் என்றும் சாயாது இருக்க‌ வேண்டும்.

2 responses so far

Nov 23 2008


CAPitalZ

மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ள் என்று சொல்வ‌து ச‌ரியா?

Filed under LTTE, Tamil Eelam, Tamils

மாவீர‌ர்க‌ளை நினைவுகூற‌‌ வேண்டும் என்று மாவீர‌ர் வார‌மாக‌ ந‌வ‌ம்ப‌ர் 21 முத‌ல் 27 வ‌ரை க‌டைப்பிடிக்க‌ப் ப‌டும் என்று த‌ல‌வ‌ர் இந்திய‌ இராணுவ‌ ஆக்கிர‌மிப்பின் நேர‌த்தில் வெளியிட்டார். அப்போது நானும் த‌மிழீழ‌த்தில் இருந்தேன். அது ப‌ற்றிய‌ என‌து ப‌திவை இங்கே ப‌டிக்க‌லாம்.

நேன்று நான் இருந்த‌ தொட‌ர் மாடிக் க‌ட்டிட‌ வ‌ளாக‌த்தில் மாவீர‌ர் நாள் க‌டைப்பிடிக்க‌ப் ப‌ட்ட‌து. ஒரு 75 பேர் அள‌வில் வ‌ந்திருந்தார்க‌ள். 6:30 ம‌ணிக்கு தொட‌ங்கும் என்று அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. 7 ம‌ணிக்கு க‌த‌வு பூட்ட‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் பின் வ‌ந்த‌வ‌ர்க‌ள் எவ‌ரும் உள் அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை, மாவீர‌ர் க‌ல்ல‌றைக்கு தீப‌ங்க‌ள் எல்லோரும் ஏற்றி முடியும் வ‌ரை.

வ‌ழ‌மை போல் எல்லாம் ந‌டைபெற்ற‌து. நான் இங்கு ப‌திவு போட‌க் கார‌ண‌ம் அது அல்ல‌. இந்த‌ நிக‌ழ்வை ந‌ட‌த்திய‌வ‌ர், மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்று அடிக்க‌டி உறுதி கொண்டார்.

இப்ப‌டி த‌லைவ‌ர் எதையும் சொன்ன‌து இல்லை. மாவீர‌ர்க‌ளுக்கு அஞ்ச‌லி செலுத்த‌ வேண்டும் என்று சொன்ன‌து ம‌ட்டுமே. இன்னும் சொல்ல‌ப் போனால், ச‌ம‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ எதுவுமே இய‌க்க‌ ந‌டைமுறைக்குள் வ‌ர‌க்கூடாது என்ப‌தில் முடிவாக‌ இருப்ப‌வ‌ர். தீப‌ம் ஏற்றுத‌ல் என்ப‌து கூட‌ த‌மிழ் முறை என்ப‌தாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌தே ஒளிய‌ ச‌ம‌ய‌ ச‌ம்ப‌ந்த‌மாக‌ அல்ல‌. த‌லைவ‌ர் இந்துவாக‌ இருந்தால் கூட‌ இற‌ந்த‌வ‌ர்க‌ளை எரிக்காம‌ல், விதைத்து க‌ல்ல‌றை க‌ட்டினார். த‌ன் ம‌க‌னுக்கு த‌ன‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னான‌ சாள்ஸ் அண்ட‌னி என்று பெய‌ர் வைத்தார். த‌லைவ‌ரின் மூல‌ சிந்த‌னை, எந்த‌ ச‌ம‌ய‌ எந்த‌ வ‌ழித்தோன்ற‌ல் என்ற‌ பாகுபாடின்றி “த‌மிழ‌ன்” என்ற‌ ஒரு குடையின் கீழ் எல்லோரையும் இணைக்க‌வே போராடி வ‌ருகிறார். ஆரிய‌ரா திராவிட‌ரா என்ற‌ கேள்வியே இல்லாம‌ல், பூச‌க‌ராக‌ இருந்தால் கூட‌ த‌மிழ‌ன் என்று தான் பார்க்க‌ப்ப‌டுகிற‌து. நீ எந்த‌ ச‌ம‌ய‌, எந்த‌ வ‌ழித்தோன்ற‌லாக‌ இருப்ப‌து என்ப‌து முக்கிய‌ம் அல்ல‌, நீ த‌மிழ‌னாக‌ இரு. முசுலிம்க‌ள் தாங்க‌ள் “த‌மிழ‌ர்” அல்ல‌ “முசுலிம்” என்ற‌ வேறுப‌ட்ட‌ இன‌ம் என்று இல‌ங்கையில் பிரிந்து நின்ற‌ப‌டியால் [இந்தியாவில் அப்ப‌டி அல்ல‌] தான் ப‌ல‌ விரும்ப‌த்த‌காத‌ நிக‌ழ்வுக‌ள் ந‌ட‌ந்தேறின‌. ச‌ரி அந்த‌ சிக்க‌லான‌ விட‌ய‌த்தைப் ப‌ற்றிய‌து அல்ல‌ என‌து ப‌திவு.

நேற்று ந‌ட‌ந்த‌ மாவீர‌ர் நாள் நிக‌ழ்வில், மாவீர‌ர்க‌ள் காவ‌ல் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்று சொல்வ‌தை நான் வ‌ன்மையாக‌க் க‌ண்டிக்கிறேன். நான் இறைவ‌னைத் த‌விர‌ உருவ‌ (அ) ப‌ட‌ வ‌ழிபாட்டில் ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌னாக‌ இருந்து, நான் மாவீர‌ர்க‌ளை வ‌ழிப‌ட‌ மாட்டேன் என்று சொன்னால், என்னை த‌மிழீழ‌த்திற்கு எதிரான‌வ‌ன் என்ற‌ ப‌ட்டிய‌லிலா போடுவீர்க‌ள்? அல்ல‌து நான் ஒரு உருவ‌ (அ) ப‌ட‌ வ‌ழிபாட்டிற்கு எதிரான‌ ஒரு ச‌ம‌ய‌த்தில் இருந்தால், இப்ப‌டி மாவிர‌ர்களை வ‌ழிப‌ட‌ மாட்டேன் என்று சொன்னால்? ஞாப‌க‌மிருக்க‌ட்டும், ந‌ம‌து த‌மிழீழ‌ போராட்ட‌த்தை ஒரு இந்து/ சைவ‌ ம‌க்க‌ளின் போராட்ட‌ம் ம‌ட்டுமே என்று மாற்றாதீர்க‌ள். இது ச‌ம‌ய‌ங்க‌ளுக்கு அப்பாற்ப‌ட்டு ஒன்றுப‌ட்ட‌ “த‌மிழ‌னின்” போராட்ட‌ம்.

நான் மாவீர‌ர்க‌ளை ம‌திக்கிறேன். அவ‌ர்க‌ளின் தியாக‌ம் அள‌ப்ப‌ரிய‌து. அவ‌ர்க‌ளுக்கு விள‌க்கேற்றி அஞ்ச‌லி செலுத்துகிறேன். அவ‌ர்க‌ளின் வேட்கை நிறைவேற‌ நான் வ‌ழிப‌டும் க‌ட‌வுளிட‌ம் பிராத்திக்கிறேன். ஆனால், நான் என‌து இறைவ‌னைத் த‌விர‌ வேறு எவ‌ரையும் (அ) எதையும் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ மாட்டேன்.

குறிப்பு:
நான் ஒரு ப‌ல‌ தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்கும் இந்து. என‌க்காக‌ இதை எழுத‌வில்லை. இப்ப‌டி ஆத‌ங்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை நாங்க‌ள் ஒதுக்கிவிட‌க் கூடாது என்ற‌ ஆத‌ங்க‌த்தில் எழுதுகிறேன்.

No responses yet

Oct 30 2008


CAPitalZ

இந்தியாவின் உத‌வி

ஐயா நான் அன்று தொட்டு இதைத் தான் சொல்லி வ‌ருகிறேன்.

த‌மிழீழ‌ உண‌ர்வை உண‌ராம‌ல் “உத‌வி” என்ப‌து உத‌விய‌ல்ல‌.

த‌மிழீழ‌ம் தான் வேண்டும். புலிக‌ள் தான் எங்க‌ள் அர‌சு. உண‌ர்ந்து செய்வ‌தே “உத‌வி” என‌ நினைக்க‌ப்ப‌டும். இல்லையேல் “துரோக‌ம்” என‌ [இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தில் ந‌ட‌ந்த‌து போ] நினைக்க‌ப்ப‌டும்.

என்ன‌ தான் த‌லை கீழாக‌ நின்றாலும், “த‌மிழீழ‌ம்” தான் முடிவாக‌ இருக்க‌ வேண்டும். இல்லையேல் யார் செய்வ‌தும் “உத‌வி” என்று க‌ண‌க்கில் எடுப‌டாது. இதுவே இப்ப‌டி என்றால், “Sri Lanka’s territorial integrity” என்று சொல்லி த‌மிழீழ‌த்தை த‌டுக்க‌ எடுக்கும் எந்த‌ சிறு செய‌லும் “துரோக‌ம்” என்றே எண்ண‌ப்ப‌டும்.

இது தான் அன்றும் ந‌ட‌ந்த‌து.

புலிக‌ள் எங்க‌ளின் வ‌லிமைமிக்க‌ ப‌டை. பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் த‌லைவ‌ர். த‌மிழீழ‌ம் த‌ருகிறோம் பிர‌பாக‌ர‌னைத் தாருங்க‌ள் என்று சொன்னால் கூட‌ தாரை வார்க்க‌த் த‌யாரில்லை. ஏனென்றால், நாங்க‌ள் ப‌ல‌முறை ஏமாந்து போனோம். இல‌ங்கையிட‌ம் க‌ண‌க்கில‌டங்கா முறையும், இந்தியாவிட‌ம் கூட‌ ஏமாந்து போனோம். இனி த‌லைவ‌ரைத் த‌விர‌ வேறெவ‌ரையும் ந‌ம்ப‌த் த‌யாரில்லை.

ச‌மாதான‌ கால‌ந்தொட்டு ப‌ன்னாட்டு த‌ன்னார்வ‌ நிறுவ‌ன‌ங்க‌ள் [NGOs] த‌மிழீழ‌ ம‌க்க‌ளுக்கு உத‌வி வ‌ருகின்ற‌ன‌. ப‌ல‌ நாடுக‌ள் த‌மிழீழ‌ ம‌க்க‌ளுக்கு அடைக்க‌ல‌ம் கொடுத்து எவ்வ‌ள‌வோ வ‌ச‌திக‌ள் செய்து த‌ருகின்ற‌ன‌. த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளிட‌ம் அதை விட‌ மேல‌திக‌மாக‌ எதிர்பார்க்கிறோம். வேற்றான் உத‌விய‌ அள‌வே ச‌கோத‌ர‌னும் உத‌வி செய்வ‌தென்றால், வேற்றானுக்கும் ச‌கோத‌ர‌னுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்?

எத்த‌னை வ‌ருட‌ங்க‌ள், எத்த‌னை இழ‌ப்புக்க‌ள், எத்த‌னை வ‌லிக‌ளைக் க‌ட‌ந்து வ‌ந்துவிட்டோம். இன்னும் சோறு அனுப்புகிறோம்; ஒன்றுப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் இருந்து சாப்பிடுங்க‌ள் என்றால் கோப‌ம் வ‌ராம‌ல் வேறு என்ன‌ வ‌ரும்?

சீன‌ க‌தை/ ப‌ழ‌மொழி: ஒருவ‌னுகு மீனைப் பிடித்துக் கொடுத்தால் அவ‌னுக்கு அன்று உண்வு. ஆனால், அதே ந‌ப‌ருக்கு மீன் பிடிக்க‌க் க‌ற்றுக்கொடுத்தால் வாழ் நாள் பூராவும் உண‌வு.

எத்த‌னை முறை இப்ப‌டியே சோறு த‌ந்து “உத‌வ‌ப்” போறீங்க‌ள். நாங்க‌ளாக‌ சோறு செய்ய‌ உத‌வுவ‌து தான் வேண்டும்.

சாதார‌ண‌மாக‌வே ஒருவ‌ன் நெருங்கிய‌ உற‌வின‌ர்க‌ளிட‌ம் அதிக‌மாக‌ எதிர்பார்ப்பான் ம‌ற்ற‌ய‌வ‌ர்க‌ளை விட‌. அதே போல் தான் த‌மிழீழ‌ ம‌க்க‌ளும் த‌மிழ் நாட்டிட‌ம் ம‌ற்ற‌ய‌ உல‌க‌ ந‌டுக‌ளை விட‌ அதிக‌மாக‌ எதிர்பார்க்கிறோம். ஆனால், மீண்டும் மீண்டும் இந்தியாவின் “ஒன்றுபட்ட‌ இல‌ங்கை” என்று சொல்லி எங்க‌ளுக்கு கோப‌த்தைத் தான் கூட்டுகிற‌து.

இவ்வ‌ள‌வு கால‌த்திற்கு பிற‌காவ‌து, த‌மிழீழ‌ம் கிடைக்கும் ம‌ட்டும் இவ‌ர்க‌ள் ஓய‌மாட்ட‌ர்க‌ள் என்ப‌தை உண‌ர‌வேண்டும். த‌மிழீழ‌ம் நிச்ச‌ய‌ம். இந்தியாவின் ச‌ம்ம‌த‌த்தோடோ (அ) இல்லாம‌லோ, த‌மிழீழ‌ம் ம‌ல‌ரும். அது இந்தியாவால் ம‌ல‌ர்ந்தால் எல்லோருக்கும் ந‌ல்ல‌து.

உண்மையில் உத‌வ‌ எண்ணினால், த‌மிழீழ‌ம் உருவாகுவ‌த‌ற்கு குர‌ல் கொடுங்க‌ள்.

No responses yet

Oct 27 2008


CAPitalZ

வ‌டிவேல் அர‌சிய‌லும், த‌மிழீழ‌மும்

  • த‌மிழ‌ர்க‌ளுக்குத் த‌மிழீழ‌ம் வேண்டும். இதை எதிர்ப்ப‌வ‌ர் எல்லோரும் எதிரிக‌ளாக‌த் தான் பார்க்க‌ப் ப‌டுவார்க‌ள்.
  • சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இல‌ங்கையைப் பிரிக்க‌ எத்த‌ணிக்கும் எவ‌ரும் எதிரிக‌ளாக‌ப் பார்க்கிறார்க‌ள்.
  • ஆனால் வ‌ர‌லாற்றில் இர‌ண்டும் வேறு வேறு நாடுக‌ளாக‌த் தான் இருந்த‌ன‌ என்ப‌தை சிங்க‌ள‌ அர‌சு க‌ண‌க்கிலெடுக்குதில்லை.

இத‌னால் தான் இந்திய‌ இராணுவ‌ம் இல‌ங்கை வ‌ந்த‌ போது, த‌மிழ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள், சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள். இறுதியில் எதிரியின் எதிரி ந‌ண்ப‌ன் என்ற‌ சூட்சும‌த்தைக் கையாண்டுவிட்டார்க‌ள்.

என்ன‌மோ ஏதோ, இந்தியா பொய்க் கார‌ண‌ங்க‌ளைச் சொல்லி த‌மிழீழ‌ம் அமைவ‌தைத் த‌டுப்ப‌தில் மூச்சாக‌ இருக்கிற‌து. வ‌ங்காள‌ தேச‌ம் அமைக்கும்போது இந்தியாவிலும் பிரிவினை வ‌ரும் என்று எண்ணாத‌ இந்தியா இப்போது ம‌ட்டும் ஏதோ க‌வ‌லைப்ப‌டுவ‌து போல் காட்டிக்கொள்கிற‌து. உண்மையில் அப்போது தான் இந்தியா பிரிவ‌த‌ற்கான‌ ப‌ல‌ கார‌ணிக‌ள் இருந்த‌ன‌. புதிதாக‌ உருவாகிய‌ இந்தியா, நாட்டு அர‌சிய‌ல் எப்ப‌டி இருக்கும் என்று தெரியாத‌ ப‌ல‌ தேச‌ங்க‌ள். இந்து முசுலிம் க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ கால‌ம்.
இல‌ங்கை அர‌சின் வாக்குறுதிக‌ளுக்கு ம‌ன‌ம் ஆறுதல‌டைய‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளைச் சொல்கிற‌து. 20 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ த‌மிழ‌க‌ மீனவ‌ர்க‌ளைக் கொல்ல‌மாட்டோம் என்று தான் இல‌ங்கை அர‌சு வாக்குறுதி கொடுத்துக்கொண்டு வ‌ருகிற‌து. அதை அப்ப‌டியே ந‌ம்பும்ப‌டி த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌ம் சொல்லுகிற‌து. அவ‌ர்க‌ளும் வ‌டிவேல் பாணியில் [அதாங்க‌, எவ்வ‌ள‌வு தான் அடிச்சாலும் என்ன‌ தான் ப‌ண்ணினாலும் க‌டையிசில் தான் பெரிய‌ ஆள், வெற்றி பெற்ற‌ மாதிரி ப‌ட‌ங்காட்டுற‌து] அர‌சிய‌ல் ப‌ண்ணுகிறார்க‌ள்.

த‌மிழீழ‌ம் அன்றி வேறேதும் தீர்வாகாது ஈழ‌த் த‌ம்ழ‌ருக்கு. இதை ஒத்துக்க‌ ம‌றுத்து க‌டும்போக்காக‌ வ‌ரும்போது த‌மிழ் நாட்டு ம‌க்க‌ள் கொதித்தெழுகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் த‌மிழீழ‌த்திற்கு ஆத‌ர‌வு த‌ரும்போது இந்தியா ம‌றுக்க‌, இந்தியாவிலிருந்து வேறுப‌ட்டு “த‌மிழ‌ன்” என்று த‌னித்து கோரிக்கை எழுப்ப‌, இந்தியா “பாத்தீங்க‌ளா, த‌மிழீழ‌ம் கிடைச்சால் பிற‌கு இந்தியாவிலும் பிரிவினை தான் என்று நான் சொன்னேன் தானே” என்று குண்டைத் தூக்கிப் போட்டு த‌மிழீழ‌ ம‌க்க‌ள் வாயில் ம‌ண்ணைப் போடுகிற‌து. க‌டைசியில் இந்தியாவின் எண்ண‌ம் ஈடேறுகிற‌து.

த‌மிழீழ‌ ம‌க்க‌ள் கேட்ப‌தெல்லாம் ஒன்று: “உத‌வி செய்யாவிட்டாலும் ப‌ர‌வாயில்லை, உவ‌த்திர‌மாவ‌து செய்யாதிருங்க‌ள்”.

த‌மிழீழ‌ம் பெற்றுத்த‌ராவிட்டாலும் ப‌ர‌வாயில்லை. [த‌மிழீழ‌ம் ஈழ‌த்த‌மிழ‌னால் ம‌ட்டுமே வென்றெடுக்க‌ முடியும் என்ப‌து த‌லைவ‌ரின் ந‌ம்பிக்கை]. எதிரிக்கு உத‌வாம‌லிருங்க‌ள் அதுவே போதும். கோடிக்க‌ண‌க்கில் வாரி வாரி இனாமாக‌ கொடுக்கிற‌து இந்திய‌ அர‌சு எதிரிக்கு. இராணுவ‌ உத‌வி கொடுக்க‌வில்லை என்று உத்தியோக‌பூர்வ‌ அறிக்கைக‌ள் விட்டு பின்ப‌க்க‌த்தில் இராணுவ‌ வீர‌ர்க‌ளையே கொடுக்கிற‌து. அப்போ த‌மிழ் நாட்டு அர‌சைக் கூட‌ இந்தியா க‌ண‌க்கிலெடுக்க‌வில்லை என்று தானே அர்த்த‌ம்?

இப்போ மீண்டும் இந்தியாவிலிருந்து வேறுப‌ட்டு “த‌மிழ‌ன்” என்ற‌ ரீதியில் த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் குர‌ல் கொடுக்க‌, இந்தியா “பிரிவினை” என்று சொல்லி மீண்டும் த‌மிழீழ‌ ம‌க்க‌ள் வாயில் ம‌ண்ணைப் போட்டு த‌ன் பாதையில் லாவ‌க‌மாக‌ ந‌ட‌ந்து போகிற‌து. மீண்டும் வ‌டிவேல் அர‌சிய‌ல் தான்.

அண்ணே வ‌டிவேல் அண்ணே, நீங்க‌ளாச்சும் அர‌சிய‌லுக்கு வ‌ந்து “த‌னித் த‌மிழீழ‌ம் தான் தீர்வு என்று சொல்லுங்க‌ண்ண‌.

“திருட‌னாய்ப் பார்த்து திருந்தாவிட்ட‌ல், திருட்டை ஒழிக்க‌ இய‌லாது” என்ற‌ பாட‌ல் தான் ஞாப‌க‌த்திற்கு வ‌ருகுது.

No responses yet

Aug 10 2008


CAPitalZ

திருகோண‌ம‌லையின் நிலை

Filed under Sri Lanka, Tamil Eelam

க‌ன‌டாவில் த‌மிழ் கார்னிவேல் [Tamil Carnival] நேற்றும் இன்றும் [August 9, 10] ந‌டைபெறுகிற‌து.

நான் நேற்று எங்க‌ள் அண்ண‌ன் குடும்ப‌த்துட‌ன் சென்றிருந்தேன். நாள் முழுவ‌தும் ம‌ழை. த‌மிழ் கார்னிவேல் வெட்ட‌ வெளியில் ந‌ட‌ப்ப‌தால், மிக‌க் குறைந்த‌ அள‌விலான‌ ச‌ன‌மே [வ‌ழ‌மைக்கு மாறாக‌] வ‌ந்திருந்தார்க‌ள். இன்றாவ‌து ம‌ழை பெய்யாம‌ல் ந‌ட‌த்துன‌ர்க‌ளுக்கு ந‌ட்ட‌ம் வ‌ராம‌ல் இய‌ற்கை அன்னை வ‌ழிச‌மைப்பாளாக‌.

ச‌ரி விச‌ய‌த்திற்கு வ‌ருகிறேன். சாப்பிட‌லாம் என்று சாப்பாடு வாங்க‌ ஒரு க‌டை [வெட்ட‌வெளியில் த‌ற்காலிக‌மாக‌ போட‌ப்ப‌ட்ட‌ க‌டை (using tent)] அருகே ஒதிங்கினேன். அங்கே ஒருவ‌ருட‌ன் உரையாடினேன். அவ‌ர் அர‌ச‌ வேலை பார்க்கிறாராம். சும்மா உத்தியோக‌ம் இல்லைங்க‌ , அர‌ச‌ பாதுகாப்பு ப‌டையுட‌‌ன‌னான‌ வேலை [ஆனால் இவ‌ர் போராளி அல்ல‌]. என‌க்கு கொஞ்ச‌ம் த‌ய‌க்க‌ம், அர‌ச‌ சார்பான‌ ஆளோ என்று.

க‌ன‌டா வ‌ந்து 2 கிழ‌மைக‌ள் தானாம்.

திருகோண‌ம‌லையில் பிள்ளையான் குழுவின் அட்ட‌காச‌ம் தாங்க‌ முடிய‌வில்லை என்றார். அவ‌ர்க‌ள் புலி உடுப்பு போட்டுக்கொண்டு வ‌ருவார்க‌ளாம். உங்க‌ளோடு சும்ம‌ வ‌ந்து க‌தைப்பார்க‌ளாம். அப்ப‌டி க‌தையோடு க‌தையாக‌ இன்னொருவ‌ர் ப‌ட‌ம் [photo] எடுப்பாராம். பிற‌கென்ன‌, அதை வைத்தே, நீ புலிக‌ளுட‌ன் தொட‌ர்புள்ள‌ ஆள், என்று வெருட்டியே ப‌ண‌ம் ப‌றிப்பார்க‌ளாம்.

நீங்க‌ள் வாக‌ன‌ம் ஏதாவ‌து வைத்திருந்தால் வீட்டிற்கு வ‌ந்து வாக‌ன‌த்தைத் த‌ரும்ப‌டி கேட்பார்க‌ளாம். குடுக்க‌ வேண்டும். அப்ப‌டி குடுக்க‌வில்லை என்றால், பிற‌கு பிர‌ச்சினை ஆர‌ம்ப‌ம் தானாம். அடிக்க‌டி வ‌ந்து புலி ஆத‌ர‌வாள‌ரா, வீட்டில் உள்ள‌வ‌ர்க‌ளை அடிப்பார்க‌ளாம், ப‌ண‌ம் தா என்று தொந்த‌ர‌வு தானாம். அவ‌ர் த‌ன்னுடைய‌ வாக‌ன‌த்தை பெருசு [அர‌சு] பாவிக்க‌வும் தான் கொடுப்ப‌தால் அவ‌ரிட‌ம் இன்னும் ஒரு தொந்த‌ர‌வும் செய்ய‌வில்லையாம்.

நான் கேட்டேன், நீங்க‌ள் அர‌சு பாதுகாப்புப் ப‌டைக‌ளுட‌ன் தான் உங்க‌ள் வேலை, புலி அடித்தால் நீங்க‌ளும‌ல்ல‌வா போய்ச்சேர்ந்து விடுவீர்க‌ள் என்றேன். அத‌ற்கு அவ‌ர், ஆமாம் இற‌ந்தால் த‌ன் பெய‌ரும் சிங்க‌ள‌ப் ப‌டைக‌ளுட‌ன் வ‌ரும். த‌ன் வேலை அப்ப‌டி என்றார்.

புலிக‌ள் திருகோண‌ம‌லை துறைமுக‌த்தில் ஒரு ப‌ட‌கை இர‌வோடு இர‌வாக‌ மூழ்க‌டித்த‌ செய்தி கேள்விப்ப‌ட்டிருப்பீர்க‌ள். அது ந‌ட‌ந்த‌ ச‌மய‌ம்,  சிங்க‌ள‌ப் ப‌டைக‌ள் மிக‌வும் ப‌ய‌ந்து விட்ட‌தாம். சிங்க‌ள‌ப் ப‌டைக‌ள் நினைத்தார்க‌ளாம், புலிக‌ள் விமான‌த் தாக்குத‌ல் தான் ந‌ட‌த்திவிட்டார்க‌ள் என்று. அந்த‌ப் ப‌ட‌கு க‌வுண்டு விட்ட‌தாம். அதை நிமிர்த்துவ‌திலும் அதில் உள்ள‌ சாமான்க‌ளை எடுப்ப‌திலும் இன்னும் முய‌ற்சித்துக்கொண்டு தான் இருக்கிறார்க‌ளாம். ஆனால், எந்த‌ சிப்பாயும் இற‌க்க‌வில்லை என்றார். அவ‌ர்க‌ள் பாய்ந்த்துவிட்டார்க‌ளாம்.

ஒரு ச‌ம‌ர் ப‌ற்றி அவ‌ர் சொன்னார். அவ‌ரின் பாதுகாப்புக் க‌ருதி அதை இங்கே கூற‌வில்லை.

அங்கு எல்லோரும் இப்போது புலிக‌ளுக்குத் தானாம் ஆத‌ர‌வாம். பிள்ளையானின் அட்ட‌காச‌ங்க‌ளால் மிக‌வும் வெறுத்துப் போய் இருக்கிறார்க‌ளாம். ஆனால் எல்லோரும் தாங்க‌ள் பிள்ளையான் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் என்று தான் சொல்லிக்கொள்கிறார்க‌ளாம், பிள்ளையானுக்குப் ப‌ய‌ந்து. பிள்ளையான் குழுவில் சேர்ந்த்த‌வ‌ர்க‌ள் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்கிறார்க‌ளாம். அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ங்கிக் க‌ண‌க்கில் கோடிக்க‌ண‌க்கான‌ ப‌ண‌ம் சேர்க்ப‌ட்டு இருக்கிற‌தாம்.

அவ‌ர் இன்னும் ஒன்று சொன்னார். என்னை மிக‌வும் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌து. தான் இங்கு [க‌ன‌டாவில்] த‌ங்க‌வில்லை; தான் மீண்டும் போக‌ப்போகிறேன் என்றார்.  அங்க‌த்தை வாழ்க்கை ஒரு thrilling ஆக‌ இருக்கு என்றார்.

One response so far

பழைய இடுகைகள் »