இவற்றிற்கான களஞ்சியம் 'LTTE' வகை

Jun 29 2009


CAPitalZ

தமிழீழ அரசு நோக்கிய பயணம்

Filed under LTTE, Tamil Eelam, Tamils

சில‌ர் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் இய‌க்க‌த்திற்கும், த‌மிழ் ம‌க்க‌ளுக்கும் உள்ள‌ ப‌ல‌த்த‌ நேய‌த்தைப் பிரிக்கும் வித‌மாக‌ ப‌ல‌ ச‌ந்தேக‌ குத‌ர்க்க‌ங்க‌ளை க‌ட்டுரையாக‌ எழுதுகிறார்க‌ள். இதை எழுதுப‌வ‌ர்க‌ளும், வாசிப்ப‌வ‌ர்க‌ளும் த‌லைவ‌ர் சொன்னால் தான் செய்ய‌வேண்டும் என்று சொல்லிக்கொண்டு மேலும் மேலும் த‌மிழ‌ர்க‌ளைப் பிரிக்கிறார்க‌ள். இப்படியான கட்டுரைகளை தயவுசெய்து எழுதாதீர்கள்.  புதினம் இணையத்தளம் புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளம்; TamilNet.com ஆங்கிலத்திலும், புதினம் தமிழிலும்.

தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்று ஆராய்வதை விடுங்கள்.  அவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் வழிகாட்டிய பாதையை நாம் செவ்வனே செய்யவேண்டும். இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்… இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்… தான் தமிழ்த்தேசியம் உருவாகுவதைத் தடுக்கும் சக்திகளுக்கு அல்வா சாப்பிடுவது போன்றதாகும்.  இதைத் தான் இல‌ங்கை/  இந்திய அரசு எதிர்பார்த்து நிற்கிறது.  நீங்களும் இந்திய “றோ” பிரிக்கும் வலையில் விழுந்துவிடாதீர்கள்; மற்றவர்களையும் விழுத்தாதீர்கள். நீங்க‌ள் த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்று ந‌ம்புவ‌ராக‌ இருக்க‌லாம்; அல்ல‌து அவ‌ர் உண்மையில் இற‌ந்துவிட்டார் என்று ந‌ம்புவ‌ராக‌ இருக்க‌லாம். உங்க‌ள் ந‌ம்பிக்கை எதுவாயினும் த‌ற்போது த‌மிழீழ‌ம் வென்றெடுக்க‌ தேவையான‌ க‌ட‌மைக‌ளை நீங்க‌ள் செய்யாம‌ல் சோர்ந்து போகாதீர்க‌ள். த‌லைவ‌ரின் வ‌ழிகாட்ட‌லில் தான் எல்லாமே ந‌ட‌ந்த‌ன‌, இப்போதும் அவ‌ரின் வ‌ழிகாட்ட‌லில் தான் எல்லாமே ந‌ட‌ந்துகொண்டிருக்கின்ற‌ன‌. நாம் செய‌ற்ப‌டுவ‌து தான் நாம் த‌லைவ‌ருக்கு செய்யும் க‌ட‌ன். எல்லாம் முடிந்துவிட்ட‌து இனிமேல் ஒன்றும் செய்ய‌ இய‌லாது என்று சோர்ந்து போய்விடாதீர்க‌ள்.

செல்வராசா பத்மநாதன், தலைவர் உயிருடன் இருக்கும்போதே நியமிக்கப்பட்டவர். த‌லைவ‌ர் நிய‌மித்த‌வ‌ரை நாம் அவ‌தூராக‌ பேசுவ‌து த‌லைவ‌ரின் சொல்லுக்கு நாம் ம‌திப்புக்கொடுக்க‌வில்லை என்று தானே அர்த்த‌ம்.  அவரை பிடித்துத் தரச்சொல்லி இன்னும் இலங்கை மற்றய அரசாங்கங்களை வற்புறுத்தி வருகிறது.  பத்மநாதன் அவர்களுக்கு இலங்கையில் ஒரு மந்திரி பதவி கொடுத்து இலங்கை காவல் காக்கவில்லை; கருணாவைப் போல்.

புலிகளின் அரசியல் பிரிவு, புலனாய்வுப் பிரிவு என்பன, தலைவர் இருக்கும் காலத்திலும் தாமாக அறிக்கைகள் விட்டவை தான்.  இது தமிழ்நாட்டு தமிழர்களுக்கு புதியவையாக இருக்கலாம்.  ஆனால், ஈழத்தமிழர்களுக்கு இவை புதியவை அல்ல.  புலிகளின் பல அங்கங்களிலிருந்து அறிக்கைகள் அவ்வப்போது வருவனவே.  அர‌சிய‌ல் துறை, பேச்சாள‌ர், கடற்புலி த‌ள‌ப‌தி, வரலாற்று ஆசிரியர், படைத்தளபதிகள், இராணுவ‌ப் பேச்சாள‌ர் என்று பலர் அவ்வப்போது அறிக்கைகள் விட்டவர்கள் தான்.  தலைவர் தான் தான் அறிக்கை விடவேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு போடாமல் புலிகளின் எல்லாத் துறையும் நன்று வளரவேண்டும் என்று விரும்பியவர்.

பத்மநாதன் காசு வேண்டி விட்டார்; பொய் சொல்லிவிட்டார்; ஏமாற்றிவிட்டார்; இலங்கை அரசால் வாங்கப்பட்டுவிட்டார்; இந்திய அரசால் வாங்கப்பட்டுவிட்டார் என்று ஏதாவது சொல்லி தற்போதைய காலத்தின் கட்டாய வேலைப்பாடுகளை குலையவைக்கவே தமிழ்த்தேசியத்திற்கு எதிரான சக்திகள் விரும்புகின்றன.  தமிழர்கள் ஒற்றுமையாக தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கும் முயற்சியில் இறங்கவேண்டுமே தவிர, செய்யப்படும் முயற்சிகளை குழப்பி, திசைதிருப்பி, பிரிப்பதாக இருக்கக் கூடாது.

தலைவர் மேதகு வே. பிரபாகன் ஒரு மகத்தான தலைவர் என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை.  அவர் ஒரு தீர்க்கதரிசி.  இவ்வளவு காலமும் அவர் என்ன செய்தாலும், அதில் ஏதோ ஒரு முறையான காரணம் இருக்கும் என்று நம்பியவர்கள், இப்போது மட்டும் ஏன் முரணாக பேசுகிறீர்கள்.  மகத்தான தலைவரின் கட்டளைகளை சிரமேற் கொண்டு செய்துமுடித்தவர்களின் நம்பிக்கை இப்போது மட்டும் வீணாகாது.  தலைவரின் செய‌ல்க‌ள் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் த‌வ‌றான‌தாக‌த் தெரிந்தாலும் அத‌ன் உட்க‌ருத்து மிக‌ ஆள‌மாக‌ இருக்கும். அதை எதிர்த்து முன்னுக்குப் பின் முர‌ணாக‌க் க‌தைத்த‌ல் என்ப‌து துரோக‌த்திற்கு ஒத்த‌ செய‌ல்.

த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார், ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பொய் சொல்லுகிறார்க‌ள் என்று எண்ண‌த் தெரிந்த‌ உங்க‌ளுக்கு, த‌லைவ‌ர் தான் இற‌ந்தால் அடுத்து என்ன‌ செய்ய‌வேண்டும் என்று ஒரு செய‌ற்திட்ட‌ம் போடாம‌லா இருந்திருப்பார் என்று எண்ண‌த்தோன்ற‌வில்லை. த‌லைவ‌ரின் க‌ட்ட‌ளைக‌ளுக்கு கொடுத்த‌ அதே ம‌திப்பை இப்போதும் நாம் கொடுக்க‌க் க‌ட‌மைப்ப‌ட்டுள்ளோம். அவ‌ரின் ஆலோச‌னைக‌ளின் ப‌டிதான் ப‌த்ம‌நாத‌ன் முத‌ற்கொண்டு, புல‌னாய்வுத் துறை வ‌ரை செய‌ற்ப‌டுகின்ற‌‌ன‌. த‌மிழீழ‌ம் உருவாகுவ‌த‌ற்கு அடுத்த‌ க‌ட்ட‌ நக‌ர்வை த‌லைவ‌ர் வ‌குத்துக்காட்டிய‌ வ‌ழியில் தான் ப‌த்ம‌நாத‌ன் முன்னெடுக்கிறார். அதைத் தான் புலிக‌ளின் புல‌னாய்வுத் துறையும், த‌ற்போது ப‌த்ம‌நாத‌ன் எடுக்கும் முய‌ற்சிக்கு கைகொடுங்க‌ள் என்று கேட்டிருக்கிறார்க‌ள். த‌லைவ‌ரே நேரில் வ‌ந்து என‌க்காக‌ இதைச் செய்யுங்க‌ள் என்று கேட்க‌வேக‌ண்டும் என்று எதிர்பார்ப்ப‌வ‌ர்க‌ள், த‌லைவ‌ர் எப்போதுமே நேரில் கோரிக்கை விட்ட‌து கிடையாது என்ப‌தை ம‌ற‌ந்துவிட்டார்க‌ள். த‌லைவ‌ர் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மூல‌மாக‌த் தான் த‌ன் செய‌ற்திட்ட‌த்தை ந‌டைமுறைப்ப‌டுத்தியுள்ளார்.

த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்று ந‌ம்புவ‌ர்க‌ள், வ‌ருகிற‌ மாவீர‌ர் நாள் த‌லைவ‌ர் க‌தைப்பார் என்று எதிர்பார்த்து இருக்கிறார்க‌ள். த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்தால் கூட‌ மாவீர‌ர் நாளில் த‌லைவ‌ர் வெளிவ‌ர‌மாட்டார், நாம் த‌லைவ‌ர் சொன்ன‌ செய‌ற்பாட்டை செய்து அவ‌ர் வெளியில் வ‌ர‌ ஏதுவான‌ சூழ‌லை உருவாக்காவிட்டால். த‌லைவ‌ர் கொடுத்த‌ வேலையை செய்தால் தானே த‌லைவ‌ர் வெளியில் வ‌ர‌த்த‌க்க‌ சூழ‌ல் உருவாகும். அத‌ன்பிற‌கு தானே அவ‌ர் வெளியில் வ‌ர‌லாம். நீங்க‌ள் த‌லைவ‌ர் சொன்னால் தான் செய்வேன் என்று கிட‌ப்பில் கிட‌ந்தால், அந்த‌ சூழ‌ல் உருவாக‌ப்போவ‌தில்லை; அவ‌ரும் வ‌ர‌முடியாம‌ல் த‌விக்க‌வேண்டிய‌து தான். இதில் க‌வ‌னிக்க‌வேண்டிய‌ ஒரு வ‌ர‌லாற்றுத் த‌க‌வ‌ல் என்ன‌வென்றால், இந்தியா முன்பு த‌லைவ‌ரைக் கொன்றுவிட்டோம் என்று சொல்லி அறிவித்திருந்த‌து, இந்திய‌ இராணுவ‌ ஆக்கிர‌மிப்பின் போது. அப்போது கூட இல்லை நான் உயிருட‌ன் தான் இருக்கிறேன் என்று அறிக்கை ஒன்றும் விட‌வில்லை. இன்னும் சொன்ன‌ப்போனால், மூன்று வ‌ருட‌ங்க‌ளின் பின் தான் த‌லைவ‌ர் வெளிவ‌ந்‌தார்.

நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு உருவாக்க‌வேண்டும் என்ற‌ செய‌ற்திற‌னை எல்லோரும் ஒட்டுமொத்த‌மாக‌ செய்வோம். இனி வ‌ரும் செய‌ற்திட்ட‌ங்க‌ளையும், முழும‌ன‌துட‌ன் ந‌ட‌த்திக்காட்டுவோம். த‌லைவ‌ரின் வ‌ழிகாட்ட‌லை நாம் செய்து த‌லைவ‌ரின் ந‌ம்பிக்கையை நாம் கைவிடாம‌ல் காப்பாற்றுவோமாக‌.

No responses yet

Apr 24 2009


CAPitalZ

புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா?

புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போகவில்லை. அவர்களால் இயன்ற அளவு தாக்குகிறார்கள். அவர்களும் மக்களுடன் தான் இருக்கிறார்கள். இருந்த்தாலும் பலதரப்பட்ட உதவிகளுடன் இலங்கை இராணுவம் தாக்கி முன்னேறுகிறது.

அயல் நாடு இந்தியா கடற்படை நிறுத்தி புலிகளைக் கண்காணிக்குது, அமெரிக்கா சட்டலைட்டில் உடனுக்குடன் படமெடுத்து எந்த அசைவையும் இலங்கைக்குத் தெரியப்படுத்துகிறது. ஆளில்லா வேவு விமானம் அனுப்பி வடிவாக காணொழி மாதிரி மேலிருந்து பார்த்து குண்டுகளை அடிக்கிறது இலங்கை. இந்தியா கொடுத்த இரசாயனக் குண்டுகளைப் போட்டு ஒரேயடியாக பல நூறு பேரைக் கொன்று இலகுவாக்குகிறது இலங்கை. உணவு பொருட்களுக்கு அனுமதி இல்லை. மருந்த்துப் பொருட்களுக்கு அனுமதி இல்லை. தன்னார்வ உதவி செய்யும் குழுக்களுக்கும் அனுமதி இல்லை. பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி இல்லை. புலிகளை அனேகமான பலம் பொருந்திய வெளிநாடுகள் தடைசெய்திருக்கிறது.

இவ்வளவையும் எதிர்த்து எப்படி ஐயா வெல்வது?

புலிகள் இயக்கத்திற்குள்ளேயே, போராடுபவர்களுக்கு மட்டும் தானாம் இரண்டு நேரச் சாப்பாடு. மற்றய அனைவருக்கும் [அரசியல் துறை, பத்திரிகைத் துறை, கட்டளைத் தளபதிகள், வாக ஓட்டுநர்கள் & etc.]ஒரு நேரச் சாப்பாடாம்.

No responses yet

Apr 20 2009


CAPitalZ

தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா? – பா – 2

Filed under India, LTTE, Politics, Tamil Nadu, Tamils

கருணாநிதி இப்போ சொல்லி இருக்கிறார் “பிரபாகரன் தன் நண்பர்” என்று.

சில வாரங்கள் முன், பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, அவர் சக இயக்கங்களை அழித்ததிலிருந்தே எனக்கு அவரைப் பிடிக்காது என்று சொன்னவர். [பார்க்க தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?]

எப்படி ஐயா இதெல்லாம் முடியுது?

உண்மையில் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அடி முட்டாள்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

No responses yet

Feb 09 2009


CAPitalZ

ராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு?

Filed under India, LTTE, Tamil Nadu

இந்த ராஜீவ் காந்தியின் கொலையை வைத்து தமிழர்களை பழிவாங்கிக்கொண்டே இருக்குதப்பா இந்த “இந்தி”யா.

உண்மையில் காங்கிரசிற்கும், அதன் கூட்டணி அமைப்பிற்கும், மற்றும் பினாமிகளுக்கும், ராஜீவ் காந்தியின் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றால், இந்த விசாரணையை ஸ்கொட்லாண்ட் யார்ட் இடமோ, அல்லது வேறு ஒரு உலக விசாரணை நடத்தக்கூடிய ஒரு அமைப்பிடமோ கொடுத்து விசாரணை செய்யச் சொல்லுங்கள்.

தமிழக காங்கிரஸ் தலைமையோ, கூட்டணி தலைமையோ [ஜெயலலிதா], அன்று ராஜீவுடன் இல்லை. ஏன் என்ற சந்தேகத்தை மூடி மறைத்து, சும்மா புலி கொண்டுட்டு புலி கொண்டுட்டு என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா எப்போதுமே தமிழர்களின் பக்கம் இல்லை. எங்கே இதை வேறு யாரும் விசாரணை நடத்தினால், உள் குட்டு உடைந்து விடும் என்ற பயத்தில் ராஜீவ் காந்தியை புலிகள் தான் கொலை செய்தார்கள் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.

எல்லோரும் சொல்வது/ நினைப்பது போல் உண்மையில் புலிகள் தான் செய்திருந்தார்கள் என்று ஆணித்தரமாக எண்ணினால், கொடுத்துப் பார்க்கட்டுமேன் இப்படியான ஒரு உலக விசாரணை நடத்தும் அமைப்பிடம். ஏன் மறுக்குறார்கள்?

One response so far

Nov 25 2008


CAPitalZ

த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னின் வீடு

Filed under LTTE, Tamil Eelam

பிர‌பாக‌ர‌னின் வீடு

இது தாங்க‌ த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னின் வீடு. இப்ப‌டித் தான் இறுதியாக‌ வ‌ந்த‌ ச‌மாதான‌ கால‌த்தில் இருந்த‌து.

என்ன‌ ஆச்ச‌ரிய‌ம், எத்த‌னை பேரின்ரை வீடு த‌ரைம‌ட்ட‌ம் ஆக்க‌ப்ப‌ட்டிருந்தாலும், த‌லைவ‌ரின்ரையை விட்டு வைத்திருக்கிறார்க‌ள். [பெயின்ற் இப்போது அடித்த‌து, ஆனால், க‌ட்டிட‌ம் ப‌ழைய‌ க‌ட்டிட‌மே].

த‌லைவ‌ர் முத‌ன் முத‌லில் சிங்க‌ள‌ இராணுவ‌ம் வீடு தேடி வ‌ந்த‌போது ஒளிந்திருந்த‌ ம‌ர‌மும் தெரிகிற‌து.

என‌து பெற்றோர் ச‌மாதான‌ கால‌த்தில் த‌மிழீழ‌ம் சென்றிருந்த‌ போது அவ‌ர்க‌ள் போய்ப் பார்த்தார்க‌ள்.

இதில் இன்னும் விசேட‌ம் என்ன‌ தெரியுமா? ச‌மாதான‌ கால‌த்தில், சிங்க‌ள‌ ஊர்க‌ளில் இருந்து பேரூந்து சுற்றுலா வ‌ந்து எல்லாம் பார்த்தார்க‌ளாம். சில‌ர் போகும்போது ஒரு பிடி ம‌ண் எடுத்துக்கொண்டும் சென்றார்க‌ளாம்.

எதிர் கால‌த்தில் இந்த‌ வீடு ஒரு பெரும் சுற்றுலா த‌ல‌மாக‌ வ‌ந்தாலும் வ‌ரும், த‌மிழீழ‌ம் கிடைத்த‌ பின்.

த‌லைவ‌ரைப் போல் இந்த‌ வீடும் என்றும் சாயாது இருக்க‌ வேண்டும்.

2 responses so far

Nov 23 2008


CAPitalZ

மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ள் என்று சொல்வ‌து ச‌ரியா?

Filed under LTTE, Tamil Eelam, Tamils

மாவீர‌ர்க‌ளை நினைவுகூற‌‌ வேண்டும் என்று மாவீர‌ர் வார‌மாக‌ ந‌வ‌ம்ப‌ர் 21 முத‌ல் 27 வ‌ரை க‌டைப்பிடிக்க‌ப் ப‌டும் என்று த‌ல‌வ‌ர் இந்திய‌ இராணுவ‌ ஆக்கிர‌மிப்பின் நேர‌த்தில் வெளியிட்டார். அப்போது நானும் த‌மிழீழ‌த்தில் இருந்தேன். அது ப‌ற்றிய‌ என‌து ப‌திவை இங்கே ப‌டிக்க‌லாம்.

நேன்று நான் இருந்த‌ தொட‌ர் மாடிக் க‌ட்டிட‌ வ‌ளாக‌த்தில் மாவீர‌ர் நாள் க‌டைப்பிடிக்க‌ப் ப‌ட்ட‌து. ஒரு 75 பேர் அள‌வில் வ‌ந்திருந்தார்க‌ள். 6:30 ம‌ணிக்கு தொட‌ங்கும் என்று அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. 7 ம‌ணிக்கு க‌த‌வு பூட்ட‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் பின் வ‌ந்த‌வ‌ர்க‌ள் எவ‌ரும் உள் அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை, மாவீர‌ர் க‌ல்ல‌றைக்கு தீப‌ங்க‌ள் எல்லோரும் ஏற்றி முடியும் வ‌ரை.

வ‌ழ‌மை போல் எல்லாம் ந‌டைபெற்ற‌து. நான் இங்கு ப‌திவு போட‌க் கார‌ண‌ம் அது அல்ல‌. இந்த‌ நிக‌ழ்வை ந‌ட‌த்திய‌வ‌ர், மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்று அடிக்க‌டி உறுதி கொண்டார்.

இப்ப‌டி த‌லைவ‌ர் எதையும் சொன்ன‌து இல்லை. மாவீர‌ர்க‌ளுக்கு அஞ்ச‌லி செலுத்த‌ வேண்டும் என்று சொன்ன‌து ம‌ட்டுமே. இன்னும் சொல்ல‌ப் போனால், ச‌ம‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ எதுவுமே இய‌க்க‌ ந‌டைமுறைக்குள் வ‌ர‌க்கூடாது என்ப‌தில் முடிவாக‌ இருப்ப‌வ‌ர். தீப‌ம் ஏற்றுத‌ல் என்ப‌து கூட‌ த‌மிழ் முறை என்ப‌தாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌தே ஒளிய‌ ச‌ம‌ய‌ ச‌ம்ப‌ந்த‌மாக‌ அல்ல‌. த‌லைவ‌ர் இந்துவாக‌ இருந்தால் கூட‌ இற‌ந்த‌வ‌ர்க‌ளை எரிக்காம‌ல், விதைத்து க‌ல்ல‌றை க‌ட்டினார். த‌ன் ம‌க‌னுக்கு த‌ன‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னான‌ சாள்ஸ் அண்ட‌னி என்று பெய‌ர் வைத்தார். த‌லைவ‌ரின் மூல‌ சிந்த‌னை, எந்த‌ ச‌ம‌ய‌ எந்த‌ வ‌ழித்தோன்ற‌ல் என்ற‌ பாகுபாடின்றி “த‌மிழ‌ன்” என்ற‌ ஒரு குடையின் கீழ் எல்லோரையும் இணைக்க‌வே போராடி வ‌ருகிறார். ஆரிய‌ரா திராவிட‌ரா என்ற‌ கேள்வியே இல்லாம‌ல், பூச‌க‌ராக‌ இருந்தால் கூட‌ த‌மிழ‌ன் என்று தான் பார்க்க‌ப்ப‌டுகிற‌து. நீ எந்த‌ ச‌ம‌ய‌, எந்த‌ வ‌ழித்தோன்ற‌லாக‌ இருப்ப‌து என்ப‌து முக்கிய‌ம் அல்ல‌, நீ த‌மிழ‌னாக‌ இரு. முசுலிம்க‌ள் தாங்க‌ள் “த‌மிழ‌ர்” அல்ல‌ “முசுலிம்” என்ற‌ வேறுப‌ட்ட‌ இன‌ம் என்று இல‌ங்கையில் பிரிந்து நின்ற‌ப‌டியால் [இந்தியாவில் அப்ப‌டி அல்ல‌] தான் ப‌ல‌ விரும்ப‌த்த‌காத‌ நிக‌ழ்வுக‌ள் ந‌ட‌ந்தேறின‌. ச‌ரி அந்த‌ சிக்க‌லான‌ விட‌ய‌த்தைப் ப‌ற்றிய‌து அல்ல‌ என‌து ப‌திவு.

நேற்று ந‌ட‌ந்த‌ மாவீர‌ர் நாள் நிக‌ழ்வில், மாவீர‌ர்க‌ள் காவ‌ல் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்று சொல்வ‌தை நான் வ‌ன்மையாக‌க் க‌ண்டிக்கிறேன். நான் இறைவ‌னைத் த‌விர‌ உருவ‌ (அ) ப‌ட‌ வ‌ழிபாட்டில் ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌னாக‌ இருந்து, நான் மாவீர‌ர்க‌ளை வ‌ழிப‌ட‌ மாட்டேன் என்று சொன்னால், என்னை த‌மிழீழ‌த்திற்கு எதிரான‌வ‌ன் என்ற‌ ப‌ட்டிய‌லிலா போடுவீர்க‌ள்? அல்ல‌து நான் ஒரு உருவ‌ (அ) ப‌ட‌ வ‌ழிபாட்டிற்கு எதிரான‌ ஒரு ச‌ம‌ய‌த்தில் இருந்தால், இப்ப‌டி மாவிர‌ர்களை வ‌ழிப‌ட‌ மாட்டேன் என்று சொன்னால்? ஞாப‌க‌மிருக்க‌ட்டும், ந‌ம‌து த‌மிழீழ‌ போராட்ட‌த்தை ஒரு இந்து/ சைவ‌ ம‌க்க‌ளின் போராட்ட‌ம் ம‌ட்டுமே என்று மாற்றாதீர்க‌ள். இது ச‌ம‌ய‌ங்க‌ளுக்கு அப்பாற்ப‌ட்டு ஒன்றுப‌ட்ட‌ “த‌மிழ‌னின்” போராட்ட‌ம்.

நான் மாவீர‌ர்க‌ளை ம‌திக்கிறேன். அவ‌ர்க‌ளின் தியாக‌ம் அள‌ப்ப‌ரிய‌து. அவ‌ர்க‌ளுக்கு விள‌க்கேற்றி அஞ்ச‌லி செலுத்துகிறேன். அவ‌ர்க‌ளின் வேட்கை நிறைவேற‌ நான் வ‌ழிப‌டும் க‌ட‌வுளிட‌ம் பிராத்திக்கிறேன். ஆனால், நான் என‌து இறைவ‌னைத் த‌விர‌ வேறு எவ‌ரையும் (அ) எதையும் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ மாட்டேன்.

குறிப்பு:
நான் ஒரு ப‌ல‌ தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்கும் இந்து. என‌க்காக‌ இதை எழுத‌வில்லை. இப்ப‌டி ஆத‌ங்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை நாங்க‌ள் ஒதுக்கிவிட‌க் கூடாது என்ற‌ ஆத‌ங்க‌த்தில் எழுதுகிறேன்.

No responses yet

Oct 30 2008


CAPitalZ

இந்தியாவின் உத‌வி

ஐயா நான் அன்று தொட்டு இதைத் தான் சொல்லி வ‌ருகிறேன்.

த‌மிழீழ‌ உண‌ர்வை உண‌ராம‌ல் “உத‌வி” என்ப‌து உத‌விய‌ல்ல‌.

த‌மிழீழ‌ம் தான் வேண்டும். புலிக‌ள் தான் எங்க‌ள் அர‌சு. உண‌ர்ந்து செய்வ‌தே “உத‌வி” என‌ நினைக்க‌ப்ப‌டும். இல்லையேல் “துரோக‌ம்” என‌ [இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தில் ந‌ட‌ந்த‌து போ] நினைக்க‌ப்ப‌டும்.

என்ன‌ தான் த‌லை கீழாக‌ நின்றாலும், “த‌மிழீழ‌ம்” தான் முடிவாக‌ இருக்க‌ வேண்டும். இல்லையேல் யார் செய்வ‌தும் “உத‌வி” என்று க‌ண‌க்கில் எடுப‌டாது. இதுவே இப்ப‌டி என்றால், “Sri Lanka’s territorial integrity” என்று சொல்லி த‌மிழீழ‌த்தை த‌டுக்க‌ எடுக்கும் எந்த‌ சிறு செய‌லும் “துரோக‌ம்” என்றே எண்ண‌ப்ப‌டும்.

இது தான் அன்றும் ந‌ட‌ந்த‌து.

புலிக‌ள் எங்க‌ளின் வ‌லிமைமிக்க‌ ப‌டை. பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் த‌லைவ‌ர். த‌மிழீழ‌ம் த‌ருகிறோம் பிர‌பாக‌ர‌னைத் தாருங்க‌ள் என்று சொன்னால் கூட‌ தாரை வார்க்க‌த் த‌யாரில்லை. ஏனென்றால், நாங்க‌ள் ப‌ல‌முறை ஏமாந்து போனோம். இல‌ங்கையிட‌ம் க‌ண‌க்கில‌டங்கா முறையும், இந்தியாவிட‌ம் கூட‌ ஏமாந்து போனோம். இனி த‌லைவ‌ரைத் த‌விர‌ வேறெவ‌ரையும் ந‌ம்ப‌த் த‌யாரில்லை.

ச‌மாதான‌ கால‌ந்தொட்டு ப‌ன்னாட்டு த‌ன்னார்வ‌ நிறுவ‌ன‌ங்க‌ள் [NGOs] த‌மிழீழ‌ ம‌க்க‌ளுக்கு உத‌வி வ‌ருகின்ற‌ன‌. ப‌ல‌ நாடுக‌ள் த‌மிழீழ‌ ம‌க்க‌ளுக்கு அடைக்க‌ல‌ம் கொடுத்து எவ்வ‌ள‌வோ வ‌ச‌திக‌ள் செய்து த‌ருகின்ற‌ன‌. த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளிட‌ம் அதை விட‌ மேல‌திக‌மாக‌ எதிர்பார்க்கிறோம். வேற்றான் உத‌விய‌ அள‌வே ச‌கோத‌ர‌னும் உத‌வி செய்வ‌தென்றால், வேற்றானுக்கும் ச‌கோத‌ர‌னுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்?

எத்த‌னை வ‌ருட‌ங்க‌ள், எத்த‌னை இழ‌ப்புக்க‌ள், எத்த‌னை வ‌லிக‌ளைக் க‌ட‌ந்து வ‌ந்துவிட்டோம். இன்னும் சோறு அனுப்புகிறோம்; ஒன்றுப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் இருந்து சாப்பிடுங்க‌ள் என்றால் கோப‌ம் வ‌ராம‌ல் வேறு என்ன‌ வ‌ரும்?

சீன‌ க‌தை/ ப‌ழ‌மொழி: ஒருவ‌னுகு மீனைப் பிடித்துக் கொடுத்தால் அவ‌னுக்கு அன்று உண்வு. ஆனால், அதே ந‌ப‌ருக்கு மீன் பிடிக்க‌க் க‌ற்றுக்கொடுத்தால் வாழ் நாள் பூராவும் உண‌வு.

எத்த‌னை முறை இப்ப‌டியே சோறு த‌ந்து “உத‌வ‌ப்” போறீங்க‌ள். நாங்க‌ளாக‌ சோறு செய்ய‌ உத‌வுவ‌து தான் வேண்டும்.

சாதார‌ண‌மாக‌வே ஒருவ‌ன் நெருங்கிய‌ உற‌வின‌ர்க‌ளிட‌ம் அதிக‌மாக‌ எதிர்பார்ப்பான் ம‌ற்ற‌ய‌வ‌ர்க‌ளை விட‌. அதே போல் தான் த‌மிழீழ‌ ம‌க்க‌ளும் த‌மிழ் நாட்டிட‌ம் ம‌ற்ற‌ய‌ உல‌க‌ ந‌டுக‌ளை விட‌ அதிக‌மாக‌ எதிர்பார்க்கிறோம். ஆனால், மீண்டும் மீண்டும் இந்தியாவின் “ஒன்றுபட்ட‌ இல‌ங்கை” என்று சொல்லி எங்க‌ளுக்கு கோப‌த்தைத் தான் கூட்டுகிற‌து.

இவ்வ‌ள‌வு கால‌த்திற்கு பிற‌காவ‌து, த‌மிழீழ‌ம் கிடைக்கும் ம‌ட்டும் இவ‌ர்க‌ள் ஓய‌மாட்ட‌ர்க‌ள் என்ப‌தை உண‌ர‌வேண்டும். த‌மிழீழ‌ம் நிச்ச‌ய‌ம். இந்தியாவின் ச‌ம்ம‌த‌த்தோடோ (அ) இல்லாம‌லோ, த‌மிழீழ‌ம் ம‌ல‌ரும். அது இந்தியாவால் ம‌ல‌ர்ந்தால் எல்லோருக்கும் ந‌ல்ல‌து.

உண்மையில் உத‌வ‌ எண்ணினால், த‌மிழீழ‌ம் உருவாகுவ‌த‌ற்கு குர‌ல் கொடுங்க‌ள்.

No responses yet

Feb 23 2008


CAPitalZ

வே. பிரபாகரன் இறைவனின் அவதாரம்!

ஆண்டாண்டு காலமாக யுத்தமெனும் சாபம் பிடித்து அலைகிறது இலங்கை.
ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது.

ஒருவர் சரியான சாமி பக்தனாம்.  அவர் வாழ்ந்த ஊரில் வெள்ளம் வந்ததாம்.  அவர் தன்னைக் காப்பாற்ற கடவுள் வருவார் என்று நம்பினாராம்.  ஊரார் வெளியேறும் போது அவரை கூட்டிச்செல்கிறோம் என்று கேட்க அவர் இல்லை என்னை காப்பாற்ற கடவுள் வருவார் என்று சொன்னாராம். வெள்ளம் பெருகிவிட்டது. பிறகு ஒரு சிறு வள்ளத்தில் ஒருவர் வந்து வாருங்கள் இதில் தப்பிப் போகலாம் என்றாராம்.  அதற்கும் அந்த நபர், இல்லை கடவுள் வந்து என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னாராம்.  பிறகு உலங்குவானூர்தியில் [helicopter] வந்து இறுதி அழைப்பு இதில் ஆவது தப்பி வாருங்கள் என்று கூப்பிட அவர் மறுத்து இல்லை இல்லை என்னைக் காப்பாற்ற கடவுள் வருவாராம் என்று சொன்னாராம்.  சரி வெள்ளம் பெருகி மோசமாகி அவர் அதில் மூழ்கி மாண்டுவிட்டாராம்.

மேலே ஆவியாய் போய் இறைவனிடம் சேர்ந்தார்.  இவர் இறைவனைக் கேட்டாராம், நான் உன் அதீத பக்தன் என்னை ஏன் நீ காப்பாற்ற வரவில்லை என்று.  அதற்கு அவர் சொன்னாராம், அட முட்டாளே நான் உன்னைக் காப்பாற்ற மூன்று முறை வந்தேன், நீ தான் வர மறுத்துவிட்டாய் என்றாராம்.

இறைவன் இப்படித் தான் ஏதாவது ஒரு வளியில் தான் உதவுவார்.  தலைவர் வே. பிரபாகரன் இறைவரனின் அவதாரம்!

2 responses so far

Feb 23 2008


CAPitalZ

தமிழர்களுக்கு ஏன் இந்தத் துரோகம், இந்தியா?

 மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயிற்கு ஆதரவளித்து தூண்டிவிட்ட ‘வீர’ சாவர்க்கன் {RSS தலைவர்} இன் படம் இந்திய நாடாளுமன்றத்தில் தொங்கவிட்டிருக்கிறீர்கள்.

இந்திரா காந்தியைக் கொன்ற புயன் சிங் இற்கு இன்றும் நினைவு நாள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் {இந்திரா காந்தி கொல்லப்பட்ட நாளான 18ந் திகதி}.  அவருடை பிள்ளைகளை உருத்துவாரா பிரபஞ்சக் கமிட்டி தத்தெடுத்து வளர்த்து வருகிறது.  மிக அண்மையில், சத்வந் சிங், கேகர் சிங் ஐ சீக்கிய தேசத்தின் {Sikh Nation} தியாகசீலர்கள் என்று அறிவித்து விழாக் கொண்டாடினார்கள்.  நாங்கள் தனுவிற்கு விழா எடுத்தோமா?

http://www.youtube.com/watch?v=WpCk9d0gtbc

http://www.youtube.com/watch?v=o2p24Qe5a0E

http://www.youtube.com/watch?v=8oLftqnO8-E

http://www.youtube.com/watch?v=jg1BkoyhiH8

http://www.youtube.com/watch?v=hasE1peFrd4

http://www.youtube.com/watch?v=Npb1c8Hcv_4

4 responses so far

Nov 18 2007


CAPitalZ

Eelam and Indian Security

Part I:  Eelam and Indian Security: Averting a Catastrophe

“What is precarious is that the isolation of the LTTE and active assistance for a military option against it by the International Community, may lead the LTTE and the people backing it with no option other than facing the situation. The repercussions are sure to threaten Indian security for a long time to come.”

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=23786

============================================================

Part II:  Eelam and Indian Security: Need for policy alternatives

“It is not a secret that ever since the beginning of the liberation struggle of the Tamils of Sri Lanka, a small but influential group of individuals worked against it in India. People from opinion making sections of the society, i.e., journalists, professors, diplomats, former diplomats, bureaucrats, and officers of the armed and intelligence services were in this group. They were the main advisors of the government. Their words carried more weight than the public opinion.

In a way, by its near total dependence on the Dravidian politics of Tamil Nadu to garner India’s support, the Sri Lankan Tamil movement has failed to address and convince the Indian elite of its larger dimensions of liberation politics and its worthiness to regional stability and security.

Everybody knows what is meant by the phrase ‘International Community’ today. The Sri Lankan Tamil militancy has not committed any offence to USA or EU. It is a local freedom struggle….

Yet, many may wonder the kind of vengeful ferocity shown towards the LTTE and along with it towards the Tamil cause in Sri Lanka, by the so-called International Community.

It is not that the IC doesn’t know that the terrorism they speak of is a counter-product of genocide. The real reason for their wrath is the refusal of the LTTE to sell out the struggle to the strategic and economic interests of the International Community, where as the Sinhala polity is prepared to give away everything to have the Tamils exterminated as a nation.

Collaboration with the IC against the interests of the Tamils will boomerang on India in the long run.

The history of the past sixty years has brought us to a point that makes separation a necessary condition to renegotiate a union on an equal basis.

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=23795

No responses yet

பழைய இடுகைகள் »


Video & Audio Comments are proudly powered by Riffly