Apr 24 2009
புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா?
புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போகவில்லை. அவர்களால் இயன்ற அளவு தாக்குகிறார்கள். அவர்களும் மக்களுடன் தான் இருக்கிறார்கள். இருந்த்தாலும் பலதரப்பட்ட உதவிகளுடன் இலங்கை இராணுவம் தாக்கி முன்னேறுகிறது.
அயல் நாடு இந்தியா கடற்படை நிறுத்தி புலிகளைக் கண்காணிக்குது, அமெரிக்கா சட்டலைட்டில் உடனுக்குடன் படமெடுத்து எந்த அசைவையும் இலங்கைக்குத் தெரியப்படுத்துகிறது. ஆளில்லா வேவு விமானம் அனுப்பி வடிவாக காணொழி மாதிரி மேலிருந்து பார்த்து குண்டுகளை அடிக்கிறது இலங்கை. இந்தியா கொடுத்த இரசாயனக் குண்டுகளைப் போட்டு ஒரேயடியாக பல நூறு பேரைக் கொன்று இலகுவாக்குகிறது இலங்கை. உணவு பொருட்களுக்கு அனுமதி இல்லை. மருந்த்துப் பொருட்களுக்கு அனுமதி இல்லை. தன்னார்வ உதவி செய்யும் குழுக்களுக்கும் அனுமதி இல்லை. பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி இல்லை. புலிகளை அனேகமான பலம் பொருந்திய வெளிநாடுகள் தடைசெய்திருக்கிறது.
இவ்வளவையும் எதிர்த்து எப்படி ஐயா வெல்வது?
புலிகள் இயக்கத்திற்குள்ளேயே, போராடுபவர்களுக்கு மட்டும் தானாம் இரண்டு நேரச் சாப்பாடு. மற்றய அனைவருக்கும் [அரசியல் துறை, பத்திரிகைத் துறை, கட்டளைத் தளபதிகள், வாக ஓட்டுநர்கள் & etc.]ஒரு நேரச் சாப்பாடாம்.
No responses yet