இவற்றிற்கான களஞ்சியம் November, 2008

Nov 30 2008


CAPitalZ

[த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 4] தமிழ் நாடும் கேர‌ளாவும் 4 வித்தியாச‌ங்க‌ள்

த‌மிழ் ந‌ட்டில் த‌ரையிற‌ங்கி வெட்ப‌ த‌ட்ப‌ நிலையையும் உண‌ர்ந்த்தாச்சு. இனி என்ன‌ க‌ண்டேன் என்று பார்ப்போமா.

முன் இடுகைக‌ளில் இருந்து நான் பார்த்த‌ த‌மிழ் நாட்டைத் தான் சொல்கிறேன். க‌ன‌டாவில் கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ள் வாழ்ந்துவிட்டேன். ஆகையால், இல‌ங்கையில் இருந்து த‌மிழ் நாடு போகிற‌வ‌ரின் பார்வை என் பார்வையில் இருந்து நிச்ச‌ய‌மாக‌ வேறுப‌டும்.

எங்க‌ள் வ‌ண்டி மேல்ம‌ருவ‌த்தூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற‌து.

வாக‌ன‌ங்க‌ள் மிக‌ நெரிச‌ல்க‌ளாக‌ ப‌ய‌ணித்த‌ன‌. ப‌ய‌ண‌த்தில் ந‌வீன‌ த‌மிழ் நாடும், ஏழ்மை த‌மிழ் நாடும் மாறி மாறி வ‌ந்த‌ன‌. அது என்ன‌ அது? சில‌ க‌ட்டிட‌ங்க‌ள்/ இட‌ங்க‌ளைக் க‌ட‌க்கும்போது ந‌வீன‌ ம‌ய‌மாக்கிய‌தாக‌ இருக்கும். வ‌டிவாக‌, சுத்த‌மாக‌ இருக்கும். வீதியின் அருகாமையில், ஏதோ ஷெல் விழுந்து இடிந்து போன‌ க‌ட்டிட‌ங்க‌ள் போல் க‌ட்டிட‌ங்க‌ளையும் காண‌க்கூடிய‌தாக‌ இருந்த‌து. நான் நினைத்தேன் இவை என்ன‌ ந‌ம்ம‌ ஊரில் உள்ள‌ க‌ட்டிட‌ங்க‌ள் போல் அல்ல‌வா இருக்கிற‌து. ப‌ல‌ சிறிய‌ கோவில்க‌ள் கூட‌ த‌விக்க‌ விட்ட‌ நிலையில் இருந்த‌ன‌.  கட்டிடங்களுக்கு உள் செடி கொடிகள் வளர்ந்து பராமரிப்பற்றும் காணப்பட்டன.

வாக‌ன‌ம் ஓட்டுத‌ல் என்றால், ஏதோ ஒரு ம‌யிரிழை த‌ப்பினால், இடி என்ற‌ மாதிரித் தான் எல்லோரும் ஓட்டுவார்க‌ள். TATA SUMO வில் [க‌ன‌டாவில் SUV] இல் 10 பேர் போனோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்க‌ளேன். ஆமாம், முன்னுக்கு மூன்று பேர், ந‌டுவில் 3 பேர், பின்னுக்கு 4 பேர். Auto வில் கூட‌ ஓட்டுந‌ருட‌ன் ஒருவ‌ர், பின்னுக்கு மூன்று பேர், அதில் ஒருவ‌ர் ம‌டியில் இன்னுமொருவ‌ர் என்று 6 பேர் மொத்த‌மாக‌ [ஓட்டுந‌ரையும் சேர்த்து] செல்வோம். வாக‌ன‌ நெரிச‌லான‌ இட‌ங்க‌ளில், ஓட்டுவ‌து மிக‌வும் க‌டின‌மாக‌ என‌க்குத் தென்ப‌ட்ட‌து. ஒருவ‌ர் விட்டுத் த‌ருவார் என்று பார்த்துக்கொண்டிருந்தால், அவ‌ர் ஜென்ம‌த்திற்கு எடுக்க‌வே மாட்டார். 3 – Point Turn என்ப‌து, ஒருவ‌ர் எடுத்துக்கொண்டிருக்கையிலேயே முன்பும் பின்புமாக‌, ம‌ற்ற‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் பாட்டிற்கு ஏதும் ந‌ட‌க்காத‌து போல் போய்க் கொண்டிருப்பார்க‌ள். என்னைக் கேட்டால், இரு ச‌க்க‌ர‌ வ‌ண்டிக‌ளுக்கு என்றே த‌னி வீதி அமைத்தால் ந‌ல்ல‌து என்பேன். அவ‌ர்க‌ளும், மோட்டார் கார்க‌ளும் ஒன்றாக‌ப் போக‌த்தான் மிக‌வும் சிக்க‌லாக‌ இருக்கிற‌து. அட‌ இடிய‌ப்ப‌ச் சிக்க‌ல் என்பார்க‌ளே, அதைவிட‌ சிக்க‌லான‌துங்க‌. மாட்டு வ‌ண்டில்க‌ளும், மாடு இழுக்கும் ட‌ய‌ர் பூட்டிய‌ வ‌ண்டிக‌ளும் கூட‌ வீதிக‌ளில் க‌ண்டேன். இவ்வ‌ள‌வு சிக்க‌லுக‌ளுக்கிடையில், பொது ம‌க்க‌ளும் ஏதோ த‌ன் சொந்த‌ வீட்டில் ந‌ட‌ப்ப‌து போல், மிக‌வும் லாவ‌க‌மாக‌ வீதியைக் க‌ட‌ப்பார்க‌ள். ஆனால், என்ன‌ ஆச்ச‌ரிய‌ம், இவ்வ‌ள‌வு ம‌யிரிழை இடைவெளியில் ஓடினாலும் கூட‌, ஒரு சின்ன‌ கீற‌ல் கூட‌ விளாம‌ல் ஓடுகிறார்க‌ள் என்ப‌து உண்மையில் கெட்டித்த‌ன‌ம் தான்.

இப்ப‌டியே ஒரு காட்சியையும் க‌ண்டேன். ஒரு மிக‌வும் ஏழ்மையான‌ குடும்ப‌மா (அ) ப‌ல‌ குடும்ப‌ங்க‌ளிலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ளா என்று தெரிய‌வில்லை. அவ‌ர்க‌ள் ஒரு பெரிய‌ குப்பை மேட்டை ச‌ல்ல‌டை போட்டுக்கொண்டிருக்கிறார்க‌ள். வாக‌ன‌த்தில் போகும்போதே நாற்ற‌ம் தாங்க‌ முடிய‌வில்லை. என‌து த‌மிழ்நாட்டுப் ப‌ய‌ண‌த்தில் நான் க‌ண்ட‌ மிக‌வும் ஏழ்மையான‌ காட்சி இது தான். என் மூளையில் அந்த‌ நொடியில் உதித்த‌ சிந்த‌னைக‌ள். அடுத்த‌ வ‌ல்ல‌ர‌சு, IT இல் வ‌ள‌ர்ந்து விட்டோம் என்று எவ்வ‌ள‌வோ சொன்னார்க‌ள்… அட‌ எங்க‌ள் நாட்டில் [பிர‌ச்சினை பெரிதாவ‌த‌ற்கு முன்] கூட‌ இப்ப‌டிக் க‌ண்ட‌தில்லையே. க‌வ‌னிப்பார‌ற்ற‌ க‌ட்டிட‌ங்க‌ளும், குப்பையைக் கிள‌ரும் ஏழைக‌ளும் இப்போது இங்கு இருக்கிறார்க‌ளாயின், எங்க‌ள் நாடு பிர‌ச்சினைக்கு முன் இப்போதைய‌ த‌மிழ் நாட்டை விட‌ ந‌ன்றாக‌ இருந்திருக்கிற‌தே. இப்போதைய‌ த‌மிழீழ‌ம் போல் இருக்கிற‌தே த‌மிழ் நாடு என்று யோசிச்சேன். பிற‌கு, அட‌ இங்கு ஏழைக‌ளும், ப‌ண‌க்கார‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். அங்கு இப்போதைக்கு ஏழைக‌ள் ம‌ட்டும் தான் இருக்கிறார்க‌ள். க‌ன‌டாவில் கூட‌ குப்பையைக் கிள‌றுப‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். ஆனால், த‌மிழ் நாட்டில் பார்க்கும்போது ஏதோ ம‌ன‌து க‌டின‌மாக‌ இருந்த‌து.

நாங்க‌ள் வ‌ந்த‌ பெருஞ்சாலையில் [highway] இடையில் குறுக்காக‌ ஏதோ ஒரு தானிய‌ விதை வ‌கை செடிக‌ளை ப‌ர‌ப்பி விட்டிருக்கிறார்க‌ள். போகும் வாக‌ன‌ங்க‌ள் எல்லாம் அத‌ன் மேல் ஏறி மிதித்துக்கொண்டு தான் போக‌வேண்டும். அட‌ அது என்ன‌ண்டாவாம், இப்ப‌டி ந‌டு ரோட்டில் போட்டுத் தான் அதை உடைப்பார்க‌ளாம். கிட்ட‌த்த‌ட்ட‌ த‌விடு த‌ட்டுவ‌து போல். இப்ப‌டியும் ச‌ன‌ம் ஏழ்மையான‌ வாழ்க்கையில் த‌ங்க‌ள் தொழிலை செய்து வ‌ருகிறார்க‌ள்.

இப்ப‌டியே வீடு வ‌ந்து சேர்ந்தோம். க‌டைக‌ள், விருந்தின‌ர் வீடு என்று எல்லாம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ போய் வ‌ந்தோம்.

நான் பார்த்த‌தில். த‌மிழ் நாடு வ‌ற‌ண்ட‌ பிர‌தேச‌மாக‌வே தென்ப‌டுகிற‌து. ஆறுக‌ள் எல்லாம் வ‌ற‌ண்டு, ம‌ண‌லாக‌வும் க‌ல்லாக‌வும் தெரிகிற‌து. அந்த‌ இட‌த்தில் குடிசை போட்டுக் கூட‌ ஆட்க‌ள் வாழ்கிறார்க‌ள். மிக‌ப் பெரிய‌ ஆறுக‌ளுக்கு குறுக்காக‌ க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ பால‌ங்க‌ள் எல்லாம் waste ஓ என்று எண்ணும‌ள‌விற்கு அங்கு த‌ண்ணீர் வ‌ந்த‌ த‌டைய‌த்தையே காண‌வில்லை. ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் கூட‌ ம‌ர‌ங்க‌ள் சோலையாக‌ ப‌ச்சைப் ப‌சேலென்று இல்லை. வ‌ற‌ண்ட‌ பிர‌தேச‌த்தில் வ‌ள‌ர‌க்கூடிய‌ முற்செடிக‌ள் போன்ற‌ ம‌ர‌ங்க‌ள் தான் அதிக‌மாக‌த் தென்ப‌டுகின்ற‌ன‌.

எனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்த விடயம். தமிழ் நாட்டில் தமிழ் சாகுது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அப்போது தான் நேரில் பார்த்தேன். எந்த வியாபார நிலையம் கூட தமிழில் பெயர் பலகையைக் கொண்டிருக்கவில்லை என்பது மிகவும் கவலையான விடயமாக இருந்தது. அப்ப என்னதில இருக்கும்? “பர்னிச்சர் ஸ்டோர்” “கிருஷ்ணன் ஹோட்டல்”, “மார்க்க‌ட்”, “கோர்ப‌ரேட் ஸ்டோர்” என்று இப்படி ஆங்கிலத்தை தமிழில் எழுதி தான் சகல பெயர்ப்பலகைகளும் இருந்தன. இதை விட இங்கு கனடாவில் தமிழ் வாழுது என்று சொல்லலாம். அட கடைக்கு மட்டுமா இப்படி. ஊர்களுக்கும் இப்படி எல்லா பெயர் வைக்கிறார்கள்: “T. த‌ர்ம‌புர‌ம்”, “I.O.B. நக‌ர்”, என்று இப்ப‌டி ப‌ல‌ ஊர்க‌ள். முத‌லில், என்ன‌டா இது ஊர்க‌ளுக்கும் initial வைத்திருக்கிறார்க‌ளோ என்று அதிர்ந்து போனேன்.

பிற‌கு திருச்சியில் இருந்து கேர‌ளா சென்று வ‌ந்தோம். திருச்சியில் இருந்து வெளிக்கிட்டு, குருவாயூர் கோயிலுக்குப் போனோம்.

திருச்சியில் இருந்து கேர‌ளா போகும் பாதை நெடிய‌ ப‌ழ‌ வ‌கைக‌ள் வைத்து வித்துக்கொண்டிருந்தார்க‌ள். என‌க்கு நாங்க‌ள் இல‌ங்கையில் க‌ண்டிக்குப் போன‌ ஞாப‌க‌ம் தான் வ‌ந்த‌து.

கேர‌ளா எல்லை வ‌ந்த‌து. அத‌ற்குப் பிற‌கு ப‌ழ‌ங்க‌ள் ஏதும் வீதியோர‌ங்க‌ளில் விற்க‌ப்ப‌ட‌வில்லை. கேர‌ள‌ காவ‌ல்துறையிட‌ன் ப‌ண‌ம் க‌ட்டி சீட்டு எடுக்க‌ வேண்டும், அவ‌ர்க‌ள் மாநில‌த்திற்கு வாக‌ன‌ம் செல்வ‌தால். அது ப‌ர‌வாயில்லை. ஆனால், அந்த‌ காவ‌ல்துறைக்கு ரூ. 50 ல‌ஞ்ச‌மாக‌வும் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. ச‌ட்ட‌த்தைச் செய்வ‌த‌ற்கும் ல‌ஞ்ச‌மா என்ற‌ க‌ம‌ல் ஹாச‌னின் “இந்திய‌ன்” ப‌ட‌ கேள்வி ஞாப‌க‌த்திற்கு வ‌ந்த‌து. கோபிக்காதீங்க, பிற‌கு திரும்பி த‌மிழ் நாட்டுக்க‌ வ‌ரேக்க‌ த‌மிழ் நாடு காவ‌ல்துறை ச‌ளைத்த‌வ‌ர்க‌ள் அல்ல‌ என்று அவ‌ர்க‌ளும் ப‌ண‌ம் வாங்கினார்க‌ள்.

இப்ப‌டியே குருவாயூர் கோயிலுக்குப் போனோம். அன்று தான் கேர‌ளாவில் “ஓண‌ம்” ப‌ண்டிகை. அப்போது தான் எங்க‌ளுக்குத் தெரிந்த‌து. ச‌ன‌க் கூட்ட‌ம் நிற‌ம்பி வ‌ளிந்த‌து. சாமி த‌ரிச‌ன‌த்திற்கு மிக‌ நீண்ட‌ வ‌ரிசை காத்திருந்த‌து. நாங்க‌ளும் காத்திருந்து உள்ளே போனால், அங்கு ஏதோ ஆடு மாட்டைக் க‌லைப்ப‌து போல் துர‌த்துகிறார்க‌ள் உள் வேலை செய்யும் ஆட்க‌ள். வேக‌மாக‌ச் செல் என்று பில‌த்துக் க‌த்தி கூச்ச‌லிடுகிறார்க‌ள் [ம‌லையாள‌த்தில்]. போதாதுக்கு, க‌ம்பிக‌ளிலும், த‌க‌ர‌ங்க‌ளிலும் அடித்து ஒலி எழுப்புகிறார்க‌ள். நாங்க‌ளும், ஆட்டு ம‌ந்தைக‌ள் போல் ஒரு க‌ம்பிக‌ளால் வ‌குக்க‌ப்ப‌ட்ட‌ பாதையில் மிக‌ வேக‌மாக [கும்பிட‌க் கூட‌ நேர‌ம் கிடைக்காம‌ல்] க‌ட‌வுளைக் க‌ண்டால் போதும் என்று போனோம். என‌க்கு கோயில் வெறுத்துப் போன‌து. என‌க்கு வேறு கோயில்க‌ளிலும் இப்ப‌டிப்ப‌ட்ட‌ அனுப‌ம் கிடைத்த‌து. ஆனால், பிற‌கு சிந்தித்துப் பார்க்கையில், அவ்வ‌ள‌வு ச‌ன‌ம் வ‌ந்தால் அவ‌ர்க‌ளும் என்ன‌ செய்வ‌து. அத‌னால‌, இந்தியாவில் எந்த‌க் கோயிலுக்கும் எந்த‌ ஒரு விசேட‌ தின‌ங்க‌ளிலும் செல்லாதீர்க‌ள். நிதான‌மாக‌ சாமி கும்பிட‌ வேண்டுமா?, எந்த‌ ஒரு விசேட நாளாக‌ இல்லாத‌‌ நாளாக‌ப் பார்த்துப் போங்க‌ள்!

ஆனால், ஒன்றை நினைத்து ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டேன். மேல் ம‌ருவ‌த்தூர் அம்ம‌ன் கோவிலில் மூல‌ஸ்தான‌த்திற்குள் செல்ல‌வே எங்க‌ளை அனும‌தித்தார்க‌ள். மூல‌ஸ்தான‌ விக்கிர‌க‌த்தை சுற்றி வ‌ந்தோம். த‌மிழில் பூசை வைத்தார்க‌ள். என்ன‌ தான் நான் த‌மிழ் ப‌ற்றாள‌னாக‌ இருந்தால் கூட‌ கோவிலில் எப்போதும் ச‌ம‌ஸ்கிருத‌ ம‌ந்திர‌த்தைக் கேட்டுக் கேட்டு, த‌மிழில் கேட்கும் போது ஏதோ ஒரு வித‌ அந்த‌ர‌மாக‌வே இருந்த‌து. ஒரு த‌லைமுறை இப்ப‌டி த‌மிழில் கோவிலில் பூசை செய்து பார்த்து ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டு விட்டால், பிற‌கு ச‌ரியாகிவிடும் என்று நினைக்கிறேன். திருச்சியில் கூட‌ மேல்வ‌ருவ‌த்தூருக்கு என்று ஒரு சிறிய‌ அம்ம‌ன் கோவில் இருக்கிற‌து. அங்கும் த‌மிழில் பூசை வைத்தார்க‌ள். திருச்சியில் இருக்கும், உச்சிப் பிள்ளையார் கோவிலிலும் அர்ச்ச‌னை செய்ப‌வ‌ர்க‌ளை, உள்ளே மூல‌ஸ்தான‌த்திற்கு அருகாமையில் அழைக்கிறார்க‌ள். நான் ம‌லேசியாவில், ப‌த்து ம‌லை முருக‌ன் கோவிலுக்கு ம‌லை ஏறி இருக்கிறேன். உச்சிப் பிள்ளையார் கோவில், ப‌த்து ம‌லை முருக‌ன் கோவிலுக்கு ஏறும் ப‌டிக‌ளை விட‌க் குறைவாக‌வே என‌க்குத் தென்ப‌ட்ட‌ன‌.

(1)  கேர‌ளாக்குள் எங்கு பார்த்தாலும் ப‌ச்சைப் ப‌சேலென்று ம‌ர‌ங்க‌ள். ஆறு குள‌ங்க‌ள் எல்லாம் நிற‌ம்பி இருந்த‌ன‌. போதாத‌த‌ற்கு, வீடுக‌ளுக்கு முன்னால் குள‌ம் குள‌மாக‌ த‌ண்ணீர் நின்ற‌து. அதில் தாம‌ரைப் பூக்க‌ள் கூட‌ இருந்த‌ன‌. தென்னை ம‌ர‌ம் இல்லாத‌ காணி இல்லை என்று சொல்லும‌ள‌விற்கு தென்னை ம‌ர‌ங்க‌ளாக‌ இருந்த‌ன‌. வ‌ழி நெடுக‌ “க‌ள்” என்று ம‌லையாள‌த்தில் [ஆனால், "க‌" த‌மிழ் க‌ மாதிரியே இருந்த‌து] எழுதி இருந்தார்க‌ள். என்ன‌ ஆச்ச‌ரிய‌ம் இள‌நீர் மிக‌ச் சில‌ இட‌ங்க‌ளிலேயே விற்க‌ப்ப‌ட்ட‌ன‌. ப‌ச்சை இள‌நீர் தான் கூடுத‌லாக‌ விற்றார்க‌ள். செவ்விள‌நீர் வெறும் குரும்பையாக‌ இருந்த‌து. என்றாலும், ஆசைக்கு வாங்கிக் குடித்தேன். என்ன‌ இருந்தாலும், இல‌ங்கையின் இள‌நீருக்கு அடிக்காது.

அப்ப‌டியே கோவ‌ள‌ம் க‌ட‌ற்க‌ரைக்குச் சென்றோம். நாங்க‌ள் ச‌ற்று க‌ட‌ல் நீரில் குழித்தோம். க‌ருங்க‌ல் ம‌ண் அதிக‌மாக‌ இருந்த‌தால், க‌ட‌ற்க‌ரை க‌றுப்பாக‌, ஒளிப்பாக‌ இருந்த‌து. ஆனால், க‌ட‌ல் குளிக்க‌ இங்கே செல்லாதீர்க‌ள். க‌ட‌ல் அலை மிக‌வும் அகோர‌மாக‌ பாய்வ‌தால், ச‌ரியாக‌ க‌ட‌ல் குளிக்க‌வே அங்குள்ள‌ life guards விட‌மாட்டார்க‌ள். உண்மையில் ஆப‌த்தான‌தாக‌க் கூட‌ இருந்த‌து.

பிற‌கு House Boat இல் ஏறினோம். ஒரு த‌ர‌க‌ர் மூல‌மாக‌வே ஏறினோம். இதில் இன்னுமொரு த‌ர‌க‌ருக்கும் எம‌து வாக‌ன‌ ஓட்டுந‌ருக்கும் த‌க‌ராறு ஏற்ப‌ட்டு விட்ட‌து. எங்க‌ள் வாக‌ன‌ சார‌தி த‌மிழில் பேசுகிறார். ம‌ற்ற‌ய‌வ‌ர், ம‌லையாள‌த்தில் பேசுகிறார். எங்க‌ள் சார‌தி, “இஞ்ச‌ வாங்க‌ சார், இஞ்ச‌ வாங்க‌ சார்” என்று கூப்பிட்டு கூப்பிட்டு பேசுகிறார். எங்க‌ள் எல்லோருக்கும் குலை ந‌டுக்க‌ம். வேற்று பிர‌தேச‌த்தில் வ‌ந்து சண்டை பிடிக்கிறார். எல்லோரும் சேர்ந்து மொத்தி [அடித்து] விட்டார்க‌ள் என்றால்? இல‌ங்கையில் இப்ப‌டி எல்லாம் செய்ய‌ முடியுமா? சிங்க‌ள‌ ஊரில் த‌மிழில் ச‌ண்டை பிடித்தால், முத‌லில் “புலி” என்று தான் உள்ளே போடுவார்க‌ள். அட‌ த‌மிழ‌ன் சிங்க‌ள‌த்தில் கூட‌ ச‌ண்டை பிடிக்க‌ முடியாதுங்க‌. ஒரு ப‌க்க‌த்தில் ப‌ய‌மாக‌ இருந்தாலும், ம‌று ப‌க்க‌த்தில் அந்த‌ சுத‌ந்திர‌ம் ச‌ந்தோச‌த்தைக் கொடுத்த‌து. [இப்ப‌டி க‌ர்நாட‌காவில் செய்ய‌லாமா என்று என‌க்குத் தெரியாது]. இது ம‌ட்டும‌ல்ல‌, த‌மிழ் நாட்டில் கூட‌ வேற்று மொழிக்கார‌ர்க‌ள் மிக‌வும் சுத‌ந்திர‌மாக‌ த‌ங்க‌ள் மொழியை ச‌ன‌ நெரிச‌லான‌ இட‌ங்க‌ளில் கூட‌ பேசுகிறார்க‌ள். எங்க‌ளுக்கு என்றால், சிங்க‌ள‌வ‌ன் எங்க‌ளைக் க‌ண்டு பிடிச்சிடுவானோ என்று ப‌ய‌ந்து ப‌ய‌ந்து தான் இருந்திருப்போம். இந்த‌ சுத‌ந்திர‌ம் மிக‌வும் விய‌ப்பாக‌, ஆனால் ஆரோக்கிய‌மாக‌ இருந்த‌து. இதைத் தான் “ச‌ன‌நாய‌க‌ம்” என்று சொல்வார்க‌ளோ?

ஆனால், அந்த‌ House Boats இருக்கும் இட‌த்திற்குப் போனால், ஏராள‌மான‌வை நிற்கின்ற‌ன‌. அங்கு போய் பார்த்து விருப்ப‌மான‌தை பேர‌ம் பேசி ஏறியிருக்க‌லாம். சில‌வ‌ற்றில் satellite எல்லாம் பூட்டி இருந்தார்க‌ள். ஆனால், house boat இல் சுத்த‌ம் இல்லை என்று குறை கூறும‌ள‌விற்கு இல்லை. மிக‌வும் ந‌வீன‌மாக‌த் தான் உள்ளுக்குள் இருந்த‌ன‌. ஏதோ ஒரு ந‌ல்ல‌ hotel இல் இருப்ப‌து போல் தான் இருந்த‌து. ஆனாலும், இர‌வு வ‌ந்த‌வுட‌ன் ஒரு ப‌ய‌ம். அட‌டே, பெண்க‌ள் எல்லாம் இருக்கிறார்க‌ள், ந‌கைக‌ளைக் கொள்ளைய‌டிக்க‌ திருட‌ன் வ‌ருவானா? (அ) க‌ப்ப‌லில் ஓட்டுப‌ரே திருடாவாரா என்று. எங்க‌ளுட‌ன் 3 பேர், க‌ப்ப‌ல் ஓட்டுந‌ர், ச‌மைய‌ல் கார‌ர், உத‌வியாள‌ர், என்று கூட‌வே இருப்பார்க‌ள். இர‌வில் க‌ப்ப‌லை ஒரு ஓர‌மாக‌ க‌ட்டுவார்க‌ள். ஆனால், அந்த‌ ஓர‌மாக‌ வாளும் ம‌க்க‌ள் அந்த‌ கும் இருட்டிலும் ந‌ட‌மாடிக் கொண்டிருப்பார்க‌ள். அவ‌ர்க‌ள் வ‌ந்து திருடி விடுவார்க‌ளா என்று கூட‌ ப‌ய‌மாக‌ இருக்கும். இப்ப‌டி house boat இல் போகிற‌வ‌ர்க‌ள் நகைக‌ளைப் போடாதீர்க‌ள். ஒரு சில‌ருட‌னோ/ த‌னியாக‌வோ செல்லாதீர்க‌ள். க‌ன‌ பேர் போனால் தான் ப‌ய‌ம் ச‌ற்று குறைவாக‌ இருக்கும். ப‌டுக்கும்போது க‌ண்ணாடி ச‌ன்ன‌லை துணி போட்டு ம‌றைத்து விட்டுத் தான் ப‌டுத்தோம். ஏனென்றால், அருகாமையில் குடியிருக்கும் ம‌க்க‌ள் எங்க‌ள் க‌ப்ப‌லுக்கு ப‌க்க‌மாக‌த் தான் ந‌ட‌ந்து திரிகிறார்க‌ள்.

ம‌லையாள‌த்திற்கும், த‌மிழிற்கும் பெரிய‌ வித்தியாச‌ம் கிடையாது. இதில் இன்னும் வேடிக்கை என்ன‌வென்றால், நாங்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் உப‌யோகிக்கும் சொற்க‌ளை ம‌லையாள‌த்தில் உப‌யோகிக்கிறார்க‌ள். “உண்டு” “கிடையாது” என்று சொல்லும்போது என‌க்கு ச‌ந்தோச‌மாக‌ இருந்த‌து. அட‌ இட‌ம் கூட‌ யாழ்ப்பாண‌த்தைப் போல் தான் ப‌ச்சைப் ப‌சேலென்று இருந்த‌து. அங்க‌த்தே நினைப்பைக் கூட்டிய‌து கேர‌ளா தான். (2)  போதாத‌ற்கு, வீடுக‌ள் கூட‌ யாழ்ப்பாண‌ வீடுக‌ள் மாதிரி விசால‌மாக‌ இருந்த‌ன‌. த‌மிழ் நாட்டில் கொழும்பு வீடுக‌ள் போல், முற்ற‌ம் மிக‌ச் சிறிதாக‌வே இருக்கும். ஆனால், கேர‌ளாவில் வீடுக‌ளுக்கு முற்ற‌ம் யாழ்ப்பாண‌ வீடுக‌ள் போல் மிக‌ப் பெரிதாக‌ இருந்த‌து. வீதி வாச‌லில் இருந்து வீட்டு வாச‌லுக்கு வெகு தூர‌ம் இருந்த‌து.

(3)  இதை விட‌ வேறு ஒரு வித்தியாச‌த்தையும் க‌ண்டேன். நான் த‌மிழ் நாடுக்கு வ‌ரும்போது என் எதிர்பார்ப்பு எங்கும் சினிமாவாக‌த் தான் இருக்கும் என்று இருந்த‌து. ஆனால், த‌மிழ் நாட்டில் எங்கும் அர‌சிய‌ல் poster க‌ளாக‌த் தான் இருந்த‌து. இது என‌க்குக் கிடைத்த‌ மிக‌ப் பெரிய‌ அதிர்ச்சி.  மேல்ம‌ருவ‌த்தூரில் இருந்து திருச்சி வ‌ரும் ம‌ட்டும், “திருமாவ‌ள‌வ‌ன்”, “கேப்டன் விஜ‌ய‌காந்த்” என்று கொட்டை எழுத்துக‌ளில் சுவ‌ர்க‌ளில் எழுதி இருந்தார்க‌ள். அசிங்க‌மாக‌ அல்ல‌, அச்ச‌டித்தாற் போல் இருந்த‌து. திருச்சியில் ச‌ற்று க‌ருணாநிதிக்கும், ம‌க‌ன் “தளபதி மு.க‌. ஸ்டாலின்”  இற்கும் இருந்த‌து. ஆனால், வ‌ழி நெடுக‌ இப்ப‌டி ஏதோ ஒன்று இருந்த‌து. ஆனால், கேர‌ளாவில் ம‌ருந்துக்குக் கூட‌ அர‌சிய‌ல் poster க‌ள் இருக்க‌வில்லை. ஆக‌க் கூடி ஊருக்கு ம‌த்தியில் இருக்கும் ச‌ந்தி [downtown] யில் ம‌ட்டும் சில‌ அர‌சிய‌ல் poster க‌ள் இருந்த‌ன‌. ம‌க்க‌ள் அர‌சிய‌ல் த‌ங்க‌ள் சுவ‌ர்க‌ளை அழுக்காக்க‌ இட‌ம் கொடுக்க‌வில்லை என்ப‌து தெட்ட‌த் தெளிவாக‌த் தெரிந்த‌து.

கேர‌ள‌ கோவில் குருவாயூராக‌ இருக்க‌ட்டும் வேறு ஹிந்துக் கோவிலாக‌ இருக்க‌ட்டும், அவைக்கு கோபுர‌ம் இருக்க‌வில்லை. த‌மிழ் கோவில்க‌ள் போல் கோபுர‌ம் அற்று சீன‌ கோவில்க‌ள் போல் தான் கூரைக‌ள் இருந்த‌ன‌. த‌மிழ‌ருக்கே ஆன‌ த‌னிச் சிற‌ப்போ கோபுர‌ங்க‌ள் என்ற‌ கேள்வியை இவை எழுப்பின‌?

(4) த‌மிழ் நாடு முழுவ‌தும் சில‌ தூர‌ங்க‌ளுக்கு இடையில் ஒரு கோவில் காண‌ப்ப‌டும். கால் மிதித்த‌ இட‌மெல்லாம் கோவில்‌க‌ள் என்று கூட‌ சொல்ல‌லாம். போதாத‌த‌ற்கு புதுக் கோவில்க‌ளும் க‌ட்டுகிறார்க‌ள். ஆனால், கேர‌ளாவில் கோவில்க‌ள் மிக‌ மிக‌ அரிதாக‌வே தென்ப‌ட்ட‌ன‌. கேர‌ள‌ ப‌ய‌ண‌த்தில் 2 கோவில்க‌ளும் 5 ப‌ள்ளிவாச‌ல்க‌ளும் க‌ண்டேன்.

House boat போய் முடிய‌ அதே இட‌த்தில், speed boat ஏறி ஓடினோம். அதாவ‌து ஒரு வ‌ள்ள‌த்தில் engine பூட்டி கையால் பிடித்து திருப்ப‌து. அதில் தான். என‌து மாம‌னாருக்கு மிக‌வும் ஆசையாக‌ இருந்த‌தால் ஓடினோம். அட‌ நான் ஓட்ட‌வில்லை. வ‌ள்ள‌ சொந்த‌க் கார‌ன் ஓட்டி சிறிது தூர‌ம் சென்ற‌ பின் என‌து மாம‌னார் ஓட்டினார். நாங்க‌ள் ஓடிய‌து 40 horse power engine ஆம். மாம‌னார் சொன்னார் தாங்க‌ள் ஊரில் 180 horse power இல் எல்லாம் ஓடினார்க‌ளாம் [கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்]. இது பெரிதாக‌ இல்லை என்று ச‌லித்துக் கொண்டார். என‌க்கெண்டால் இந்த‌ 40 horse power ஏ வேக‌மாக‌த் [ப‌ய‌மாக‌] தான் இருந்த‌து.

கேர‌ள‌ ப‌ண்டிகையான‌ ஓண‌ம் நேர‌த்தில் நாங்க‌ள் சென்ற‌தால், ப‌ல‌ க‌டைக‌ளில் சாப்பாட்டிற்கு 2 ம‌ணித்தியால‌ங்க‌ள் வ‌ரை காக்க‌ வேண்டி இருந்த‌து. எல்லோரும் விடுமுறையில் போய் விட்டார்க‌ளாம். இறால், ந‌ண்டு கூட‌ பிடிக்க‌ ஒருவ‌ரும் போகாத‌தால், hotel க‌ளில் அது கூட‌ இல்லை. 5 நாட்க‌ளுக்கு விடுமுறையாம். கேர‌ளா போகிற‌வ‌ர்க‌ள் ஓண‌ம் ப‌ண்டிகை நேர‌த்தில் போகாதீர்க‌ள். எங்கு பார்த்தாலும் சோட‌னையாக‌வும், கோல‌ங்க‌ளாக‌வும் இருக்க‌வில்லை. ஒரு சில‌ இட‌ங்க‌ளில் பிள்ளையாரை பூக்க‌ளால் சோடித்து இருந்தார்க‌ள்.

பிற‌கு அப்ப‌டியே, குற்றாள‌ம் வ‌ந்து குளித்தோம். வ‌ரும் வ‌ளியில் ம‌துரை மீனாட்சி கோயிலுக்குப் போக‌லாம் என்று ஒரு ம‌திய‌ம் 2 ம‌ணி போல் போனோம், ஆனால் கோவில் பூட்ட‌ப்ப‌ட்டு இருந்த‌து. மீண்டும் 4 ம‌ணிக்குத் தான் துற‌ப்பார்க‌ளாம். நாங்க‌ள் நிற்காமல் வ‌ந்துவிட்டோம்.

ஆனால் ம‌துரையில் ஒன்றைக் க‌ண்டேன். ஒரு பெரிய‌ ச‌துர‌ குளிக்குள் ந‌டுவில் கோவில் இருக்கிற‌து. நான் நினைக்கிறேன் அந்த‌க் குழி முன்பு குள‌மாக‌ இருந்திருக்க‌ வேண்டும் என்று. இப்போது வ‌ற்றிவிட்ட‌தால் கீழே கிரிக்கெட் விளையாடுகிறார்க‌ள். ஆனால், அந்த‌ இட‌ம் ஏதோ ம‌ந்திர‌ப் ப‌ட‌ங்க‌ளில் வ‌ருவ‌து போல் ஒரு பிர‌மிப்பாக‌வே இருந்த‌து. நாலா ப‌க்க‌மும் மிக‌ப் பெரிய‌ அக‌ழி. சின்ன‌ அக‌ழி அல்ல‌. ஒரு உதைப‌ந்தாட்ட‌ திட‌ல் அள‌வு பெரிய‌து.  ஆழம் கூட ஒரு 7/ 8 பேர் ஆழ்ப்பம்.  ந‌டுவில் கோவில். ஆனால், ம‌துரை திருச்சியை விட‌ சுத்த‌ம் குறைந்த‌ ஏழை இட‌மாக‌வே தென்ப‌டுகிற‌து. த‌ட்டில் குடிசை போட்டுக் கூட‌ ஆட்க‌ள் வாழ்கிறார்க‌ள். வீதிக‌ள் அக‌ல‌ம் குறைந்த‌ன‌வையாக‌வே தென்ப‌ட்ட‌ன‌.

இவை விட‌, சாக்க‌டை என்று த‌மிழ்ப் ப‌ட‌ங்க‌ளில் சொல்வார்க‌ளே அத‌ற்குப் ப‌க்க‌த்திலேயே சாப்பாட்டுக் க‌டை வைத்திருப்பார்க‌ள். ச‌மைத்து ச‌மைத்து குப்பையை அப்ப‌டி கையால் எத்தி விட்டால் அது சாக்க‌டையில் விழும். ஆனால், அந்த‌ தாங்க‌முடியாத‌ நாத்த‌த்திலும் [என‌க்கு, அவ‌ர்க‌ளுக்கு அல்ல‌] மேசை போட்டு வெட்ட‌ வெளியில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்க‌ள். இப்ப‌டி ம‌ட்டும‌ல்ல‌, அந்த‌ குடிசையும் கோபுர‌மும் என்று சொல்வ‌து போல், மிக‌ ந‌ல்ல‌ மாடி க‌ட்டிட‌ சாப்பாட்டுக் க‌டை கூட‌ ஒரு நாத்த‌ம் தாங்க‌ முடியாத‌ சாக்க‌டைக் காணிக்கு அருகாமையில் இருக்கும். நானும் அப்ப‌டி ஒரு க‌டைக்குப் போய்ச் சாப்பிட்டிருக்கேன். க‌ன‌டாவின் Tim Horton’s போல் ஒரு க‌டையும் ஊத்த‌ச் சாப்பாட்டுக் க‌டையும் அருக‌ருகாமையிலேயே இருப்ப‌தையும் க‌ண்டிருக்கிறேன்.

ஆனால், ஒன்று த‌மிழ் நாடு முன்னேறுகிற‌து என்ப‌தை ம‌றுப்ப‌த‌ற்கில்லை. எங்கு பார்த்தாலும் வீதி போடுகிறார்க‌ள். பெருஞ்சாலை [highway] க‌ட்டி ந‌டுவில் பூ ம‌ர‌ம் எல்லாம் ந‌ட்டிருக்கிறார்க‌ள். க‌ன‌டாவில் கூட‌ பெருஞ்சாலைக‌ளில் பூ ம‌ர‌ம் இல்லை. புதிது புதிதாய் க‌ட்டிட‌ங்க‌ள் க‌ட்டிக்கொண்டிருக்கிறார்க‌ள். என‌து மாமி சொன்னா, தான் முன் வ‌ந்த‌த‌ற்கும் [அதாவ‌து 1 வ‌ருட‌த்திற்கு முன்] இப்ப‌வுமே ந‌ல்ல‌ வீதிக‌ள் ப‌ல‌ போட்டுவிட்டார்க‌ள் என்றார். நாங்க‌ள் த‌ங்கி இருந்த‌ வீட்டின் அருகாமையில் இருந்த‌ ம‌ண் வீதியைக் கூட‌ தார் வீதியாக‌ மாற்றுகிறார்க‌ள். ஆனால், தார் வீதி போடுவ‌த‌ற்கு செம்ம‌ண் உப‌யோகிக்கிறார்க‌ள். நான் நினைத்தேன், அட‌டே விவ‌சாய‌ ம‌ண்ணை ஏன் இத‌ற்கு உப‌யோகிக்கிறார்க‌ள் என்று.

என‌க்கு த‌மிழ் நாட்டில் மிக‌வும் பிடித்த‌து: ப‌ழ‌ர‌ச‌ம்.
க‌ன்டாவில் Fresh Fruit Juice என்று சொல்லி குளிர்பான‌ப் பெட்டியில் இருந்த‌ சாறைத் த‌ருவார்க‌ளே. அங்கே உண்மையான‌ ப‌ழ‌த்தை எங்க‌ள் க‌ண் முன் அரைத்து juice எடுத்துத் த‌ருவார்க‌ள். முந்திரிய‌ப் ப‌ழ‌ம், மாதுள‌ம் ப‌ழ‌ம், சாத்துக்குடி [Orange மாதிரி, ஆனால் இனிக்கும்], அன்னாசி, ச‌போடா, Lemon, ம‌ற்றும் சுத்த‌மான‌ பால், என்று எல்லாம் மிக‌வும் ஆசைப்ப‌ட்டுக் குடித்தேன்.

எந்த‌க் க‌டையிலும் சைவ‌ சாப்பாடு அந்த‌ மாதிரி இருக்கும். நெய் தோசை என்ன‌, பூரி என்ன, இட்ட‌லி என்ன‌‌ எல்லாம் “கிய‌ல‌ வ‌ட‌க் நானே” [சிங்க‌ள‌ம்: சொல்லி வேலை இல்லைய‌ல்லோ]. அசைவ‌ சாப்பாடு என‌க்கெண்டால் பிடிக்க‌வில்லை. ஆனால், பிற‌கு ஆட்க‌ள் சொன்னார்க‌ள் செட்டிநாட்டுக் க‌டைக‌ளில் அசைவ‌ச் சாப்பாடு ந‌ன்றாக‌ இருக்கும் என்று. மிக‌ப் பெரிய‌ hotel க‌ளில் சாப‌பாடு ந‌ன்றாக‌த் தான் இருக்கும். Chicken 65 உண்மையில் ந‌ன்றாக‌த் தான் இருந்த‌து. Chicken 65 என்றால், கோழி முட்டையில் இருந்து பொரித்து 65வ‌து நாள் அதை வெட்டி க‌றி ச‌மைத்தால் தான் அது உண்மையில் Chicken 65.

தெளிவாக‌, நான் த‌மிழ் நாடு முழுக்கப்‌ பார்க்க‌வில்லை. ஆனால், இவ்வ‌ள‌வு இட‌ங்க‌ளுக்குப் போகும் வழியில் ப‌ல‌ ஊர்க‌ளைக் க‌ட‌ந்து சென்றேன். என்னைப் பொறுத்த‌ வ‌ரையில் இந்தியா ஒரு சுற்றுலா இட‌மாக‌க் க‌ருதி போகாதீர்க‌ள். உங்க‌ள் ப‌ழைய‌ நினைவுக‌ளை அசை போட‌, “எங்க‌ள் ஊர் எப்ப‌டி” என்று மீண்டுமொருமுறை அனுப‌விக்க‌, இய‌ற்கையை ர‌சிக்க‌ செல்லுங்க‌ள்.  சறமும், shorts  உம் மறக்காமல் கொண்டு செல்லுங்கள்.

முற்றும்.

4 responses so far

Nov 25 2008


CAPitalZ

த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னின் வீடு

Filed under LTTE, Tamil Eelam

பிர‌பாக‌ர‌னின் வீடு

இது தாங்க‌ த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் வே. பிர‌பாக‌ர‌னின் வீடு. இப்ப‌டித் தான் இறுதியாக‌ வ‌ந்த‌ ச‌மாதான‌ கால‌த்தில் இருந்த‌து.

என்ன‌ ஆச்ச‌ரிய‌ம், எத்த‌னை பேரின்ரை வீடு த‌ரைம‌ட்ட‌ம் ஆக்க‌ப்ப‌ட்டிருந்தாலும், த‌லைவ‌ரின்ரையை விட்டு வைத்திருக்கிறார்க‌ள். [பெயின்ற் இப்போது அடித்த‌து, ஆனால், க‌ட்டிட‌ம் ப‌ழைய‌ க‌ட்டிட‌மே].

த‌லைவ‌ர் முத‌ன் முத‌லில் சிங்க‌ள‌ இராணுவ‌ம் வீடு தேடி வ‌ந்த‌போது ஒளிந்திருந்த‌ ம‌ர‌மும் தெரிகிற‌து.

என‌து பெற்றோர் ச‌மாதான‌ கால‌த்தில் த‌மிழீழ‌ம் சென்றிருந்த‌ போது அவ‌ர்க‌ள் போய்ப் பார்த்தார்க‌ள்.

இதில் இன்னும் விசேட‌ம் என்ன‌ தெரியுமா? ச‌மாதான‌ கால‌த்தில், சிங்க‌ள‌ ஊர்க‌ளில் இருந்து பேரூந்து சுற்றுலா வ‌ந்து எல்லாம் பார்த்தார்க‌ளாம். சில‌ர் போகும்போது ஒரு பிடி ம‌ண் எடுத்துக்கொண்டும் சென்றார்க‌ளாம்.

எதிர் கால‌த்தில் இந்த‌ வீடு ஒரு பெரும் சுற்றுலா த‌ல‌மாக‌ வ‌ந்தாலும் வ‌ரும், த‌மிழீழ‌ம் கிடைத்த‌ பின்.

த‌லைவ‌ரைப் போல் இந்த‌ வீடும் என்றும் சாயாது இருக்க‌ வேண்டும்.

2 responses so far

Nov 23 2008


CAPitalZ

மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ள் என்று சொல்வ‌து ச‌ரியா?

Filed under LTTE, Tamil Eelam, Tamils

மாவீர‌ர்க‌ளை நினைவுகூற‌‌ வேண்டும் என்று மாவீர‌ர் வார‌மாக‌ ந‌வ‌ம்ப‌ர் 21 முத‌ல் 27 வ‌ரை க‌டைப்பிடிக்க‌ப் ப‌டும் என்று த‌ல‌வ‌ர் இந்திய‌ இராணுவ‌ ஆக்கிர‌மிப்பின் நேர‌த்தில் வெளியிட்டார். அப்போது நானும் த‌மிழீழ‌த்தில் இருந்தேன். அது ப‌ற்றிய‌ என‌து ப‌திவை இங்கே ப‌டிக்க‌லாம்.

நேன்று நான் இருந்த‌ தொட‌ர் மாடிக் க‌ட்டிட‌ வ‌ளாக‌த்தில் மாவீர‌ர் நாள் க‌டைப்பிடிக்க‌ப் ப‌ட்ட‌து. ஒரு 75 பேர் அள‌வில் வ‌ந்திருந்தார்க‌ள். 6:30 ம‌ணிக்கு தொட‌ங்கும் என்று அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. 7 ம‌ணிக்கு க‌த‌வு பூட்ட‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் பின் வ‌ந்த‌வ‌ர்க‌ள் எவ‌ரும் உள் அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை, மாவீர‌ர் க‌ல்ல‌றைக்கு தீப‌ங்க‌ள் எல்லோரும் ஏற்றி முடியும் வ‌ரை.

வ‌ழ‌மை போல் எல்லாம் ந‌டைபெற்ற‌து. நான் இங்கு ப‌திவு போட‌க் கார‌ண‌ம் அது அல்ல‌. இந்த‌ நிக‌ழ்வை ந‌ட‌த்திய‌வ‌ர், மாவீர‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்று அடிக்க‌டி உறுதி கொண்டார்.

இப்ப‌டி த‌லைவ‌ர் எதையும் சொன்ன‌து இல்லை. மாவீர‌ர்க‌ளுக்கு அஞ்ச‌லி செலுத்த‌ வேண்டும் என்று சொன்ன‌து ம‌ட்டுமே. இன்னும் சொல்ல‌ப் போனால், ச‌ம‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ எதுவுமே இய‌க்க‌ ந‌டைமுறைக்குள் வ‌ர‌க்கூடாது என்ப‌தில் முடிவாக‌ இருப்ப‌வ‌ர். தீப‌ம் ஏற்றுத‌ல் என்ப‌து கூட‌ த‌மிழ் முறை என்ப‌தாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌தே ஒளிய‌ ச‌ம‌ய‌ ச‌ம்ப‌ந்த‌மாக‌ அல்ல‌. த‌லைவ‌ர் இந்துவாக‌ இருந்தால் கூட‌ இற‌ந்த‌வ‌ர்க‌ளை எரிக்காம‌ல், விதைத்து க‌ல்ல‌றை க‌ட்டினார். த‌ன் ம‌க‌னுக்கு த‌ன‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னான‌ சாள்ஸ் அண்ட‌னி என்று பெய‌ர் வைத்தார். த‌லைவ‌ரின் மூல‌ சிந்த‌னை, எந்த‌ ச‌ம‌ய‌ எந்த‌ வ‌ழித்தோன்ற‌ல் என்ற‌ பாகுபாடின்றி “த‌மிழ‌ன்” என்ற‌ ஒரு குடையின் கீழ் எல்லோரையும் இணைக்க‌வே போராடி வ‌ருகிறார். ஆரிய‌ரா திராவிட‌ரா என்ற‌ கேள்வியே இல்லாம‌ல், பூச‌க‌ராக‌ இருந்தால் கூட‌ த‌மிழ‌ன் என்று தான் பார்க்க‌ப்ப‌டுகிற‌து. நீ எந்த‌ ச‌ம‌ய‌, எந்த‌ வ‌ழித்தோன்ற‌லாக‌ இருப்ப‌து என்ப‌து முக்கிய‌ம் அல்ல‌, நீ த‌மிழ‌னாக‌ இரு. முசுலிம்க‌ள் தாங்க‌ள் “த‌மிழ‌ர்” அல்ல‌ “முசுலிம்” என்ற‌ வேறுப‌ட்ட‌ இன‌ம் என்று இல‌ங்கையில் பிரிந்து நின்ற‌ப‌டியால் [இந்தியாவில் அப்ப‌டி அல்ல‌] தான் ப‌ல‌ விரும்ப‌த்த‌காத‌ நிக‌ழ்வுக‌ள் ந‌ட‌ந்தேறின‌. ச‌ரி அந்த‌ சிக்க‌லான‌ விட‌ய‌த்தைப் ப‌ற்றிய‌து அல்ல‌ என‌து ப‌திவு.

நேற்று ந‌ட‌ந்த‌ மாவீர‌ர் நாள் நிக‌ழ்வில், மாவீர‌ர்க‌ள் காவ‌ல் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்று சொல்வ‌தை நான் வ‌ன்மையாக‌க் க‌ண்டிக்கிறேன். நான் இறைவ‌னைத் த‌விர‌ உருவ‌ (அ) ப‌ட‌ வ‌ழிபாட்டில் ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌னாக‌ இருந்து, நான் மாவீர‌ர்க‌ளை வ‌ழிப‌ட‌ மாட்டேன் என்று சொன்னால், என்னை த‌மிழீழ‌த்திற்கு எதிரான‌வ‌ன் என்ற‌ ப‌ட்டிய‌லிலா போடுவீர்க‌ள்? அல்ல‌து நான் ஒரு உருவ‌ (அ) ப‌ட‌ வ‌ழிபாட்டிற்கு எதிரான‌ ஒரு ச‌ம‌ய‌த்தில் இருந்தால், இப்ப‌டி மாவிர‌ர்களை வ‌ழிப‌ட‌ மாட்டேன் என்று சொன்னால்? ஞாப‌க‌மிருக்க‌ட்டும், ந‌ம‌து த‌மிழீழ‌ போராட்ட‌த்தை ஒரு இந்து/ சைவ‌ ம‌க்க‌ளின் போராட்ட‌ம் ம‌ட்டுமே என்று மாற்றாதீர்க‌ள். இது ச‌ம‌ய‌ங்க‌ளுக்கு அப்பாற்ப‌ட்டு ஒன்றுப‌ட்ட‌ “த‌மிழ‌னின்” போராட்ட‌ம்.

நான் மாவீர‌ர்க‌ளை ம‌திக்கிறேன். அவ‌ர்க‌ளின் தியாக‌ம் அள‌ப்ப‌ரிய‌து. அவ‌ர்க‌ளுக்கு விள‌க்கேற்றி அஞ்ச‌லி செலுத்துகிறேன். அவ‌ர்க‌ளின் வேட்கை நிறைவேற‌ நான் வ‌ழிப‌டும் க‌ட‌வுளிட‌ம் பிராத்திக்கிறேன். ஆனால், நான் என‌து இறைவ‌னைத் த‌விர‌ வேறு எவ‌ரையும் (அ) எதையும் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌ட‌ மாட்டேன்.

குறிப்பு:
நான் ஒரு ப‌ல‌ தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்கும் இந்து. என‌க்காக‌ இதை எழுத‌வில்லை. இப்ப‌டி ஆத‌ங்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை நாங்க‌ள் ஒதுக்கிவிட‌க் கூடாது என்ற‌ ஆத‌ங்க‌த்தில் எழுதுகிறேன்.

No responses yet

Nov 22 2008


CAPitalZ

[த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 3] த‌மிழ்த் தாய் நாட்டில் என் முத‌ல் பாத‌ம்

Filed under India, Tamil Nadu

எத‌ற்கும் த‌யாராக‌ த‌மிழ் நாட்டிற்கு கிள‌ம்பிவிட்டேன்.

சென்னை விமான‌ நில‌ய‌த்தில் இறங்கிய‌து ந‌ம‌து Jet Airways. விமான‌த்திற்கு வெளியில் வ‌ந்து அந்த‌ ந‌டை ஓடையினுள் ந‌ட‌க்கும் போதே சாடையான‌ வெட்கை தொட‌த் தொட‌ங்கிய‌து. அம்மாவிற்கு wheelchair book ப‌ண்ணி இருந்த‌னாங்க‌ள். விமான‌த்தின் க‌த‌விற்கு வெளியே நின்றிருந்தார்க‌ள். wheelchair ஐப் பார்த்தாலே ப‌ய‌மாக‌ இருந்த‌து. அட‌ அம்மா அதிலிருந்து த‌வ‌றி விழுந்து விடுவாரோ என்று தான். கை வைப்ப‌த‌ற்கு இரு ம‌ருங்கிலும் ஒரு த‌டைக‌ளும் கிடையாது. ஒரு ப‌க்க‌ம் ச‌ரிஞ்சால், அப்ப‌டியே வ‌ழுக்கி விழ‌ வேண்டிய‌து தான்.

ஏதோ ஏறிக்கொண்டு போனோம். wheel chair இற்கு என்று த‌னியான‌ custom counter. எந்த‌ பிர‌ச்சினையும் இல்லாம‌ல், மிக‌ குறுகிய‌ நேர‌த்திலேயே bag எடுக்கும் இட‌த்திற்கு வ‌ந்து விட்டோம். ஏதோ போற‌ணைக்குள் இருப்ப‌து போல் ஒரு சாடையான‌ உண‌ர்வு. என‌து ம‌னைவிக்கு விய‌ர்க்க‌த் தொட‌ங்கி விட்ட‌து. என‌க்கு இன்ன‌மும் விய‌ர்க்க‌வில்லை. என் உட‌ம்பு வெட்கையை, குளிரை விட‌ விரும்புவது, என்ப‌தாலோ என‌க்கு விய‌ர்க்க‌வில்லை.

ஆனால், என‌க்குள் ஏதோ ஒரு விப‌ரிக்க‌ முடியாத‌ ச‌ந்தோச‌ம். என் நாட்டில் வ‌ந்து இற‌ங்கிய‌து போல் இருந்த‌து. த‌மிழில் பெய‌ர்ப்ப‌ல‌கைக‌ள் க‌ண்டேன். வேலை செய்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் த‌மிழ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். ஆனால் எல்லோரும் இளைஞ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள். நினைத்துக் கொண்டேன், வேலை எடுக்க‌க் க‌டின‌ம் என்ப‌தால் கிடைத்த‌ வேலையை செய்கிறார்க‌ள் என்று.

விமான‌த்தில் இருக்கும் போதே எல்லோரும் க‌ழிவ‌றைக்குப் போனார்க‌ள். நான் இற‌ங்கிப் போக‌லாம் என்று இருந்தேன். அப்போது ம‌னைவி சொன்னார், விமான‌ நில‌ய‌ க‌ழிவ‌றை செல்லும்ப‌டியாக‌ இருக்காது என்று. அப்ப‌வே ஒரு ஆசை. அந்த‌க் க‌ழிவ‌றைக்கு நான் போயே தீர‌வேண்டும். ஏன்? அட‌ அப்ப‌ தானே என‌து ப‌திவில் அதைப் ப‌ற்றியும் எழுத‌லாம். இற‌ங்கி அத‌ற்குள் போனேன். அட‌டா தாங்க‌ முடிய‌லைங்க‌. அவ்வ‌ள‌வு நாற்ற‌ம். நில‌ம் முழுக்க‌ ஈர‌மாக‌ [எப்ப‌டி என்று கேட்காதீர்க‌ள்?!] இருந்த‌து. அட‌ நாட்டின் முத‌ல் தொட‌ர்பு இட‌மாக‌, வ‌ர‌வேற்பு இட‌மாக‌ உள்ள‌ விமான‌ நிலைய‌த்திலேயே இப்ப‌டி க‌வ‌னிக்காம‌ல் இருந்தால் எப்ப‌டி சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வ‌ருவார்க‌ள் என்று யோசித்துக்கொண்டேன். ஆனால் ஒன்று ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. பிற‌கு க‌ன‌டா திரும்பும் போது விமான‌ நிலைய‌த்தில் க‌ழிவ‌றைக்குப் போனேன். அது கொஞ்ச‌ம் ப‌ர‌வாயில்லையாக‌ இருந்த‌து. போகும்போது ந‌ல்லா க‌வ‌னிக்கிறார்க‌ளோ?

எல்லாம் முடிந்து, விமான‌ நில‌ய‌த்திற்கு வெளியே வ‌ந்தேன். இன்னும் கூட‌ வெட்கையாக‌ இருந்த‌து. அப்போது தான் என‌க்கு இடித்த‌து. நாங்க‌ள் வெளியில் வ‌ந்த‌து அங்க‌த்தே நேர‌ப்ப‌டி அதி காலை 1:30. அட‌ அந்த‌ நேர‌த்திலேயே இப்ப‌டி வெட்கை என்றால், ம‌த்தியான‌த்தில் என்ன‌ நில‌மை என்று யோசித்தேன், ச‌ற்றுப் ப‌ய‌மாக‌ இருந்த‌து. ஆ, ஒருகை பார்த்து விடுவோமே.

வெளியில் ஒரே ச‌ன‌க்கூட்ட‌மாக‌வே இருந்த‌து. இந்த‌ ந‌டு ராத்திரியில் கூட‌ ரீ/ க‌ட‌லை என்று எல்லாம் கையில் கொண்டு விற்றுக்கொண்டிருந்தார்க‌ள். ஆட்க‌ள் சும்மா த‌ரையில் இருந்தும் ப‌டுத்தும், இருந்தார்க‌ள். க‌ன‌டாவில் என்றால், அசிங்க‌ம் என்று எண்ண‌த் தோன்றியிருக்கும். ஆனால், என‌க்கு ஏதோ ஒரு “ந‌ம்ம‌ இன‌ம்” “ந‌ம்ம‌ ச‌ன‌ம்” நம்ம மண் என்று ஆன‌ந்த‌மாக‌வே தோன்றிய‌து.

நான் இந்திய அர‌சை எவ்வ‌ள‌வு வெறுத்தேனோ, அதை விட‌ என் ஆன‌ந்த‌ம் அதிக‌ மாக‌ இருந்த‌து. பிற‌கு சின்ன‌ நெருட‌ல். அட‌டே, இப்ப‌டி என் ச‌ன‌மும் இருக்கும் நாள் எப்போது.

இந்தியாவில் இருந்த‌ என‌து ம‌னைவியின் அப்ப‌ப்பாவும், அப்ப‌ம்மாவும் வாக‌ன‌ம் பிடித்து வ‌ந்திருந்தார்க‌ள். அதில் ஏறினோம். இர‌ண்டு வேலை ஆட்க‌ள் கொண்டு bag குக‌ளை வாக‌ன‌த்தின் பின்னும், மேலும் க‌ட்டினோம். அவ்வ‌ள‌விற்கு சாமான், 6 பேர் அல்ல‌வா. என‌து தாயார், நான், ம‌னைவி, ம‌னைவியின் த‌ம்பி, த‌ந்தை, தாய் என்று எல்லோரும் க‌ன‌டாவில் இருந்து வ‌ந்து சேர்ந்தோம்.

வ‌ண்டியில் போகும்போதே இடையில் ஒரு இட‌த்தில் ச‌ல‌ம் போவ‌த‌ற்காக‌ நிற்பாட்டினார்க‌ள். இது தான் என் தமிழ் நாட்டுப் பயணத்தில் ம‌ற‌க்க‌ முடியாத‌ ச‌ம்ப‌வ‌ம். ந‌ல்ல‌ இர‌வு,  மூன்று பக்கம் துறந்த ஒரு தட்டி போட்ட க‌டை.   த‌ட்டி போட்டு அடுப்பு வைத்து சுட்டுக்கொண்டிருந்தார்க‌ள். ஈ, கொசு எல்லாம் த‌ங்க‌ள் ராய்ச்சிய‌ம். மேசை எல்லாம் clean என்ற‌ வார்த்தை அறியாத‌வைக‌ளாக‌ இருந்த‌ன‌. ஆனாலும் என‌க்குள் இங்கு உண்ண‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம். ப‌சித்த‌து என்ப‌து தான் உண்மை. ப‌ரோட்டா ரொட்டியும் சாம்பார், ப‌ருப்பு, வேறு ஏதோ ச‌ம்ப‌ல் என்று சாப்பிட்டோம். அட‌ நானும் என‌து ம‌ச்சானும் ம‌ட்டுமே உண்டோம். ஒரு ரொட்டி காணாது என்று இன்னுமொரு பரோட்டா கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன்.  இப்படி ஒரு பராட்டோ ரொட்டியை பிறகு நான் எங்கும் உண்ண‌வில்லை.  எல்லோருமாக Tea குடித்தோம். அதையும் சொல்ல‌ வேண்டும். Tea cup இங்கு க‌ன‌டாவில் போல் பெரிய‌ அள‌வு இல்லை. இங்க‌த்தே அள‌வின் 1/3 ப‌ங்காக‌வே இருக்கும். அவ்வ‌ள‌விற்கு மிக‌ச் சிறிய‌ அள‌வில் தான் அங்கு எந்த‌க் க‌டையிலும் Tea த‌ருவார்க‌ள்.ஆனால் என்னமோ, ருசியாகத்தான் இருக்கும்.  அட சலம் கழிக்க அல்லவா நிற்பாட்டினோம்.  அதையும் கடைக்கு அருகாமையில் ஒருஓரமாக,காற்றோட்டமாக கழித்தோம்.  அந்த நாள் ஞாபகம நெஞ்சிலே வந்ததே என்று பாடவேண்டும் போல் இருந்தது.

தமிழ் நாடு எப்படி என்று அடுத்த இடுகையில் பார்போமா.

4 responses so far

Nov 14 2008


CAPitalZ

[த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 2] இந்தியா போகும்போது எடுத்துச்செல்ல‌ வேண்டிய‌வை

Filed under India, Tamil Nadu

ஒரு வ‌ழியாக‌ இந்திய‌ விசா திக்கித் திண‌றி க‌டைசி நேர‌த்தில் எடுத்தாச்சு.

இந்தியா முத‌ல் முறை செல்கிறேனே, அங்கு ஏதாவ‌து வ‌ருத்த‌ங்க‌ள் வ‌ந்துவிட்டால். உட‌னே வைத்திய‌ரிட‌ன் போனேன். டெங்கு காச்ச‌லுக்கு ஊசி நான் வேண்டிக் கொடுக்க‌ ம‌ருத்துவ‌ர் அடித்தார். Tetnus shot உம் அடித்தார். இது 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு தாக்குப் பிடிக்குமாம். பிற‌கு Travel Clinic இற்குப் போகும்ப‌டி சொன்னார். ச‌ரி முத‌ன் முத‌லில் போகிறேனே அதையும் செய்வ‌மே. அவ‌ருக்கு fees $85. அவ‌ர் சொன்ன‌து இவை தான். த‌ண்ணீர் போத்த‌லை வாங்கிக் குடி. ந‌ன்றாக‌க் காய்ச்சாத‌ எதையும் சாப்பிடாதே. அப்ப‌வே யோசித்தேன், அப்ப‌டியாயின் “கையேந்தி ப‌வ‌னில்” சாப்பிட‌லாம். அது ந‌ல்லா ச‌மைச்ச‌து தானே. shell foods எதையும் சாப்பிடாதே. அதாங்க‌, ந‌ண்டு, றால், ம‌ட்டி இப்ப‌டி. என‌க்கு தொபக்கடீர் எண்டுச்சு. அட‌ இத‌ல்லாம் சாப்பிட‌க்கூடாதா. ஆ, டாக்ட‌ர் கிட‌ந்தார், ம‌ன‌துக்குள் யோசிச்சுக் கொண்டேன். க‌ன‌டாவில் ந‌ல்ல‌ உண‌வின்றி நா வ‌ற‌ண்டு போய்க் கிட‌க்குது. த‌மிழ் நாடு போய் எங்க‌ள் ஊரில் போல் எல்லாம் இருக்கும் அதை ஒரு வ‌ழி பாக்காவிட்டால் பிற‌கேன் த‌மிழ் நாடு போய்?

அவ‌ர் சொன்ன‌ ஒரே ந‌ல்ல‌ விச‌ய‌ம், அந்த‌ நுள‌ம்பு வ‌லை வேண்டிக் கொண்டு போக‌ச் சொன்ன‌து. இதை விட‌, நுள‌ம்புக்கு தோலில் அடிக்க‌, துணிக்கு அடிக்க‌, வ‌யிற்றுப் போக்கிற்கு என்று வித‌ம் வித‌மா என்கிட்ட‌ spray/ குழுசை எல்லாம் வித்தார‌ப்பா. ம‌லேரியா காச்ச‌லுக்கு என்று குழுசையும் வாங்க‌ச் சொல்லி அதுவும் ஒரு $100 மேல் வாங்கிப் போன‌னான்.

இந்தியா போகிற‌வ‌ங்க‌, நுள‌ம்பு வ‌லையைத் த‌விர‌ வேறு ஏதையும் வாங்கிக்காதீர்க‌ள். ஓ, ம‌ற்ற‌து வ‌யிற்றுப் போக்கிற்காக‌ Gastric trouble இற்கு என்று ஒரு குழுசை box விற்குது [Imodium Advantage - Rapid Relief of Diarrhea]. அதை ம‌ற‌க்காம‌ல் வாங்கிப் போங்கோ.  இந்தியாவில், வெகு தூர‌ம் ப‌ய‌ணிக்க‌ வேண்டி வ‌ந்தால், இந்த‌க் குழுசை ஒன்றை காலையிலேயே போட்டுவிட்டால், அன்று பூராவும் ம‌ல‌ம் க‌ழிக்க‌ வேண்டி வ‌ராது. இதைத் தான் நாங்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தினோம். இந்தியாவில் உங்க‌ள் வீட்டையும், விலை அதிக‌மான‌ Hotel ஐயும் த‌விர‌ வேறு எங்கும் ம‌ல‌ ச‌ல‌ம் க‌ழிக்க‌ ஆண்க‌ளுக்கே கொஞ்ச‌ம் அருவ‌ருப்பாக‌த் தான் இருக்கும். பெண்க‌ளுக்குச் சொல்ல‌வே தேவையில்லை. இடையில் வாக‌ன‌த்தை நிறுத்தி உண‌வு உண்ணும் Restaurant க‌ளில் ம‌ல‌ ச‌ல‌ம் க‌ழிப்ப‌து என்ப‌து மிக‌வும் அருவ‌ருப்பான‌ வேலை. Contact Lens பாவிப்ப‌வ‌ர்க‌ள், Contact Lens liquid வாங்கிக் கொண்டு போங்க‌ள்.அங்கு அதை வாங்க‌லாம். ஆனால், போய் இற‌ங்கியே க‌டைக்கு போவ‌தைத் த‌விர்க்க‌லாம் இல்லையா. இந்திய‌ காசும் கொஞ்ச‌ம் மாற்றிக் கொண்டு போங்க‌ள். போய் இற‌ங்கி, விமான‌ நில‌ய‌த்தில் மாற்றினீர்க‌ள் என்றால், மிக‌க் கூடிய‌ க‌ழிவு கொடுத்தே மாற்ற‌ வேண்டி இருக்கும். வ‌ய‌து போன‌வ‌ர்க‌ளுட‌ன் போகிறீர்க‌ள் என்றால், விமான‌ சீட்டை ப‌திவு செய்யும்போதே wheelchair assistance தேவை என்று ம‌ற‌க்காம‌ல் ப‌திவு செய்து விடுங்க‌ள். அவ‌ரைச் சாட்டி நீங்க‌ளும் எதிலும் முத‌லுரிமை எடுத்துக்கொள்ள‌லாம். மிக‌ப் பெரிய‌ வ‌ரிசைக‌ளில் எல்லாம் நீங்க‌ள் நிற்க‌த் தேவையில்லை. customs checking கூட‌ உங்க‌ளுக்கு என்று த‌னியாக‌ இருக்கும், இல‌குவாக‌க் கூட‌ இருக்கும்.

என் ம‌னைவி என்னைப் பார்த்து சிரிப்ப‌தா அழுவ‌தா என்று யோசித்தார். அவ‌ ஒரு 6 த‌ட‌வை இந்தியா போய் வ‌ந்துவிட்டார். அவ‌ ஒரு குழுசையையும் எடுத்துக்கொண்டு வ‌ர‌வில்லை. நான் கிலோ க‌ண‌க்கில் குழுசையுட‌ன்.

Jet Airways இல் இந்தியா போக‌ப் புற‌ப்ப‌ட்டோம். நெடுந்தூர‌ப் ப‌ய‌ண‌ம். இடையில் பெல்ஜிய‌த்தில் சிறிது நேர‌ம் [2 ம‌ணித்தியால‌ங்க‌ள்] நின்ற‌து. க‌ன‌ நேர‌மாக‌வே தெரிய‌வில்லை. விமான‌த்தில் உப‌ச‌ரிப்புக‌ளும் ந‌ன்றாக‌வே இருந்த‌து. Singapore Airline குப்பை என்று என‌து மாமா மாமி சொன்னார்க‌ள். அட‌ இந்தியாவிற்குப் போகும் விமான‌த்தில் இந்திய‌ர்க‌ள் குடித்துவிட்டு பெண்க‌ளுட‌ன் சேட்டையும் கிண்ட‌லுமாக‌த் தான் இருக்குமாம்.

விமான‌த்தில் ப‌ய‌ணிக்கும்போதே, நான் த‌மிழ் நாட்டு நேர‌த்தைக் க‌ண‌க்கிட்டு அங்கு எப்போது இர‌வாகுமோ, அப்போது தான் நித்திரை கொண்டேன். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எல்லோரும் க‌ன‌டா நேர‌த்திற்கு நித்திரை கொண்டிருந்த‌ வேளையிலும் நான் ப‌ட‌த்தைப் பார்த்துக்கொண்டு முட்ட முட்ட முளித்திருந்தேன்.

அடுத்து த‌மிழ் நாட்டில் த‌ரை இற‌ங்குவோமா…

2 responses so far

Nov 10 2008


CAPitalZ

[த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 1]: க‌ன‌டாவில் இந்திய‌ விசா விண்ண‌ப்பிப்போர்க்காக‌

Filed under India, Tamil Nadu

இந்திய‌ இராணுவ‌த்துட‌னான‌ என‌து அனுப‌வ‌ங்க‌ள் மிக‌வும் க‌ச‌ப்பான‌வையாக‌ இருந்த‌ன‌. இத‌னாலேயே நான் இந்திய‌ அர‌சாங்க‌த்தை மிக‌வும் எதிர்ப்ப‌வ‌னாக‌ இருக்கிறேன்.

அத‌ற்காக‌ இந்தியாவே போக‌மாட்டேன் என்று பிடிவாத‌ம் பிடிக்க‌வில்லை.

என‌து திரும‌ண‌ம் நிச்ச‌யிற்க‌ப்ப‌ட்ட‌ போது, இந்தியாவிற்கு நாங்க‌ள் செல்ல‌ வேண்டும் அங்கு ஒரு reception வைக்க‌ப்ப‌டும் என்று முடிவெடுக்க‌ப்ப‌ட்ட‌து. என‌து ம‌னைவியின் அப்ப‌ப்பா, அப்ப‌ம்மா ம‌ற்றும் சித்திமார்க‌ள் த‌மிழ் நாட்டில் இருக்கிறார்க‌ள்.

என‌க்கும் மிக‌வும் குதூக‌ல‌மாக‌ இருந்த‌து. அட‌ என‌க்கும் த‌மிழ் நாடு போற‌துக்கு ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் என்று. க‌ன‌டா வ‌ந்து கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ளாக‌ நான் இந்த‌ நாட்டை விட்டு வெளியில் போக‌வில்லை. அதுவும் “த‌மிழ்” நாட்டுக்குப் போகிறேன் என்ற‌ எண்ண‌ம் என்னை பூரிக்க‌ வைத்த‌து. என் த‌மிழ் உருவான‌ இட‌த்திற்கு, தாய்த் த‌மிழ் நாட்டிற்குப் போக‌ப் போகிறேன் என்ற‌ உண‌ர்வு. ச‌ரி ச‌ரி மேல‌ சொல்லுற‌ன்.

த‌மிழ் நாட்டுக்குப் போக‌வேண்டும் என்றால் இந்திய‌ விசா எடுக்க‌ வேண்டுமே. என்ன‌ க‌ன‌டா சிட்டிச‌ன் என்றாலும் இந்திய‌ விசா எடுக்க‌ வேண்டுமா? ஏன்? அது தான் இந்திய‌ நாட்டின் பாலிசி. அதாவ‌து, இந்திய‌னுக்கு வேற்று நாட்டில் என்ன‌ ச‌ட்ட‌திட்ட‌மோ, அதே தான் அந்த‌ நாட்டுக்கார‌னுக்கு இந்தியாவில். இதை நான் மிக‌வும் வ‌ர‌வேற்கிறேன். இந்திய‌ன் க‌ன‌டா செல்ல‌ விசா எடுக்க‌ வேண்டும் என்ப‌தால், க‌ன‌டாக்கார‌ன் இந்தியா செல்ல‌வும் விசா எடுக்க‌ வேண்டும் என்ப‌து இந்திய‌ ஆணை.

என‌து தாயார் ஆறு மாத‌ங்க‌ளுக்கு முன் தான் த‌மிழ் நாடு சென்று திரும்பியிருந்தார். ஆனால் அவ‌ரின் விசா‌ கிட்ட‌டியில் தான் காலாவ‌தியாகி இருந்த‌தால், நானும் அம்மாமும் விசா‌ விண்ண‌ப்ப‌த்தை த‌பாலில் அனுப்பினோம். இது தான் க‌ன‌டாவில் இந்திய‌ விசா எடுக்க‌ வேண்டும் என்றால் செய்ய‌வேண்டிய‌து. உங்க‌ள் க‌ட‌வுச் சீட்டு, விண்ண‌ப்ப‌ப் ப‌டிவ‌ம், இல‌ங்கையில் பிற‌ந்த‌வ‌ர் என்ப‌தால் மேலுமொரு விண்ண‌ப்ப‌ப் ப‌டிவ‌ம், க‌ட்ட‌ண‌ம் [ஒவ்வொருவ‌ருக்கும் த‌னித் த‌னியாக‌], Self addressed prepaid envelope [விசா குத்தி எங்க‌ள் க‌ட‌வுச் சீட்டை மீண்டும் எங்க‌ளுக்கே அனுப்புவ‌த‌ற்கு], எல்லாம் வைத்து அனுப்ப‌ வேண்டும். அவ‌ர்க‌ள் 4 வார‌ கால‌த்திற்குள் விசா குடுத்து (அ) நிராக‌ரித்து அனுப்பி வைப்பார்க‌ள்.

ச‌ரி, நானும் அம்மாவும் அனுப்பி சில‌ கிழ‌மைக‌ளில் என‌க்கு விசா குத்தி வ‌ந்துவிட்ட‌து. ஆனால், அம்மாவிற்கு வ‌ர‌வில்லை. ச‌ரி வ‌ர‌ட்டும் என்று காத்திருந்து 6 கிழ‌மைக‌ளும் தாண்டிவிட்ட‌து. என‌க்கு திரும‌ண‌மும் ஆகிவிட்ட‌து, வ‌ருகிற‌ ச‌னிக்கிழ‌மை ப‌ய‌ண‌ம் இன்னும் விசா வ‌ர‌வில்லை. தொலை பேசியில் அழைத்துப் பார்த்தோம். அவ‌ர்க‌ள் எதையும் தொலைபேசியில் சொல்ல‌ மாட்டோம், நேர‌டியாக‌ வ‌ர‌ச்சொன்னார்க‌ள். திங்க‌ட் கிழ‌மை காலையிலேயே சென்றோம்.

அட‌ங்க் கொய்யாலே, அங்கே ஒரு 150 பேருக்கு மேற்ப‌ட்ட‌ ச‌ன‌ம். அந்த‌ விறாந்தையில் 150 மேல் அனும‌திக‌க் கூடாது என்று ப‌ல‌கை வேறு போட‌ப்ப‌ட்டு இருந்த‌து. ச‌ரி என்று வ‌ரிசையில் இருந்து முன்னுக்கு க‌வுண்ட‌ரில் இருந்த‌வ‌ரிட‌ம் எங்க‌ள் பிர‌ச்சினையைச் சொன்னோம். கேட்டார், 4 கிழ‌மை ஆகிவிட்ட‌தா என்று. நானும் சொன்னேன் 6 கிழ‌மையே தாண்டிவிட்ட‌து என்றேன். எங்கே பிற‌ந்த‌வ‌ர் என்று கேட்டார். நானும் மலேசியாவில் என்றேன். என் அம்மா மலேசியாவில் தான் பிறந்தவர். இந்தியாவில் reception வைக்க‌ இருக்கிறோம் என்று வேறு சொன்னோம். ச‌ரி என்று என‌து அம்மாவின் பெய‌ரை ஒரு சிறு துண்டு க‌ட‌தாசியில் எழுதினார். இல்லைங்க‌, என‌க்கு மாத்திர‌ம் இல்ல‌, அங்க‌ வ‌ந்த‌ எல்லாருக்கும் இதே க‌தி தான்.

பெய‌ர் கூப்பிடும் வ‌ரை க‌திரையில் உட்கார்ந்திருந்தோம். கொஞ்ச‌ நேர‌த்தில் கூப்பிட்டார். அட‌ வேக‌மாக‌ போகுதே என்று ச‌ந்தோச‌த்தில் நானும், வேறு கொஞ்ச‌ப் பேரும் அவ‌ர் பின் போனோம். உள்ளே ஒரு அறையில் வேறு ஒரு “ஆபீச‌ரு” இருந்தாரு. அங்கே நாங்க‌ள் மீண்டும் வ‌ரிசையில் உட்கார்ந்தோம். அதிலும் வேக‌மாக‌ பார்த்து அனுப்பிக்கொண்டிருந்தார். நாங்க‌ளும் எங்க‌ள் பிர‌ச்சினையைச் சொன்னோம். நான் சொன்னேன், என‌து தாயாருக்கு 65 வ‌ய‌துக்கு மேல் தாண்டிவிட்ட‌து, ம‌ற்றும் அவ‌ர் ஏற்க‌ன‌வே இப்போ போன‌ வ‌ருட‌ம் தான் இந்தியா சென்று திரும்பியிருந்தார். அவ‌ருக்கு ஏன் இவ்வ‌ள‌வு தாம‌திக்குது என்று தெரிய‌வில்லை. இவ‌ரிட‌மும் சொன்னேன், என‌து தாயார் ம‌லேசியாவில் பிற‌ந்த‌வ‌ர் என்று. இந்தியாவில் reception வைக்க‌ இருக்கிறோம் என்று வேறு சொன்னோம். அவ‌ரும் ஒரு சிறு துண்டில் பெய‌ரை எழுதி விட்டு வெளியில் காத்திருக்க‌ச் சொன்னார்.

அம்மா தீவிர‌வாதி என்று நினைக்க‌ அவ‌ருக்கு வ‌ய‌தும் இல்லை, இல‌ங்கையில் பிற‌க்க‌வும் இல்லை. என்னை நினைத்திருந்தாலாவ‌து ந‌ம்பும்ப‌டியாக‌ இருந்திருக்கும். ஒரே envelope இல் என‌தையும், அம்மாவையும் அனுப்பிய‌ ப‌டியால், ஏன் ஒருவ‌ருக்கு விசா கொடுத்து ம‌ற்ற‌வ‌ருக்கு த‌ர‌ ம‌றுக்கிறார்க‌ள் என்று என‌க்குள் குழ‌ப்ப‌ம்.

வெளியில் மீண்டும் வ‌ந்து காத்திருப்பு. அதில் அருகிலிருந்த‌வ‌ர்க‌ளுட‌ன் உரையாடினேன். அவ‌ர்க‌ள் க‌தையும் சோக‌க் க‌தையாக‌வே இருந்த‌து. நாங்க‌ள் இல‌ங்கைக் கார‌ங்க‌ள் என்ப‌தால் அல்ல‌, இந்திய‌ர்க‌ளுக்குக் கூட‌ இதே நில‌மை தான் என்ப‌தில் என‌க்குள் ஏதோ ஒரு ச‌ந்தோச‌ம். அப்ப‌டியோ, “நான் த‌னியாள் இல்ல‌”.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவ‌த‌ற்கு முன் பிற‌ந்த‌ ஒருவ‌ர் இந்திய‌ சிட்டிச‌ன் எடுப்ப‌த‌ற்காக‌ க‌ட‌ந்த‌ 5 மாத‌ங்க‌ளாக‌ அலைகிறாராம். ஒவ்வொரு முறையும் ஏதாவு இல்லை அதைக் கொண்டுவா இதைக் கொண்டுவா என்று திருப்பி விடுவார்க‌ளாம். தான் கேட்ட‌னானாம், மொத்த‌மாக‌ச் சொன்னால், தான் ஒரேய‌டியாக‌வே கொண்டுவ‌ந்து விடுவேனே என்று. அத‌ற்கு அதிகாரி சொன்னாராம், இல்லை ஒவ்வொருமுறையும் தான் சொல்லுவோம் என்று. அவ‌ர் வேறும் ஒன்று சொன்னாராம்: “So you thought it was easy to get out of India” ஹிந்தியில் சொன்னாராம். அத‌ன் அர்த்த‌ம் என்ன‌வென்றால், இந்தியாவை விட்டு வெளியேறுவ‌தே க‌டின‌ம் [exit visa என்று எல்லாம் எடுக்க‌ வேண்டும்]. ஆனால், அதை விட‌ மீண்டும் இந்தியாவிற்கு வ‌ருவ‌து மிக‌வும் க‌டின‌ம். ஓ சொல்ல‌வே ம‌ற‌ந்திட்ட‌னே, அவ‌ர் ஒரு த‌மிழ் நாட்டுக்கார‌ர். ஆனால், டெல்லியில் தான் வ‌ள‌ர்ந்த‌து. அவ‌ரால் என‌து த‌மிழை [இல‌ங்கைத் த‌மிழை] விளங்க முடிய‌வில்லை.

ச‌ரி இப்ப‌டியே நேர‌ம் போய்ச்சு. வேறு ஒரு இலங்கைத் த‌மிழ‌ர். அவ‌ர் வ‌ணிக‌ விசா [business visa] அவ‌ர் வேலை பார்க்கும் நிருவ‌ன‌த்தினூடாக‌ எடுக்க‌ அனுப்பியிருந்தாராம். அவ‌ருக்கும் ஒன்றும் வ‌ர‌வில்லை. நாங்க‌ள் காத்திருந்து காத்திருந்து, 1:30 pm ஆகிவிட்ட‌து. கொஞ்ச‌ப் பேர் தான் இருந்தார்க‌ள். ம‌திய‌ உண‌வு உண்ணும் நேர‌ம் எல்லோரும் வெளியேறுங்க‌ள் என்றார்க‌ள். அட‌ நீங்க‌ள் உள்ளே சாப்பிடுவ‌த‌ற்கு நாங்க‌ள் ஏன் வெளியேற‌ வேண்டும்? நாங்க‌ள் க‌ழ‌வெல்லாம் எடுக்க‌ மாட்டோம் என்று பேசினேன். அட‌ அது பொய்யுங்க‌. நான் பேச‌லை, அங்க‌ வ‌ந்த‌ வேற‌ ஹிந்திக் கார‌ங்க‌ள் பேசி, ஹிந்தியில‌ கூட‌ ச‌ண்டை எல்லாம் போட்டார்க‌ள். நாங்க‌ள், அமைதியாக ந‌ல்ல‌ பிள்ளை போல் இருந்தோம். நீங‌க‌ வேற‌, ஏதாவ‌து சொல்ல‌ப் போக‌, விசாவை நிராக‌ரிச்சிட்டாண்ணா?

ச‌ரி வெளியில் விட்டு க‌தைப் பூட்டி 2:00pm திற‌ப்ப‌ம் எண்டார்க‌ள். வேறு ஒருவ‌ர் 2:30 pm என்றும் என்னொருவ‌ர் 3:00 pm என்றும் சொன்னார்க‌ள். வெளியில் ப‌ல‌கையில் 3:00 pm தான் திற‌க்க‌ப் ப‌டும் என்று board இருந்த‌து. என‌க்கு ஏதோ அப்ப‌ தான் திற‌ப்பாங்க‌ எண்டு ம‌ன‌ம் சொல்லிச்சு. ச‌ரி கொஞ்ச‌ நேர‌ம் தானே எண்டு காத்திருந்தா, பெயர் கூப்பிடுறாங்க‌. எங்க‌ பெயர் இல்லை. வேறு பெயர்கள். ஆனா, ஆட்க‌ள் எல்லாம் வெளியில‌. இது என்ன‌டா கொடுமை என்றாகிய‌து. ஆட்க‌ளை வெளியேற‌ச் சொல்லிவிட்டு உள்ளுக்குள் பெய‌ர் கூப்பிடுறாங்க.

நாங்க‌ள் போய் ம‌திய‌ உண‌வு சாப்பிட்டிட்டு வ‌ந்தோம். இப்போ ச‌ன‌ம் கூடீட்டுது. பிற‌கும் உள்ளுக்குள்ள‌ திரும்ப‌ வ‌ரிசையில் நின்று திரும்ப‌ பெய‌ர் கொடுத்து, திரும்ப‌ அவ‌ர் எழுதினார் ஒரு சிறு துண்டில். என‌க்கு என்ன‌மோ முன்னுக்கு இருப்ப‌வ‌ருக்கு எங்க‌ள் விச‌ய‌ம் ப‌ற்றித் தெரியும், இருந்தும் ஒன்றும் சொல்கிறார் இல்லை என்று தோன்றிற்று.

இல‌ஞ்ச‌ம் வாங்க‌த் தான் இவ்வ‌ள‌வு இழுத்த‌டிப்போ என்று வேறு எண்ணினேன். ஆனால், இல‌ஞ்ச‌ம் குடுக்கும‌ள‌விற்கு ம‌றைவாக‌ அமைய‌வில்லை. சில‌ரை உள்ளுக்குள் வேலை செய்யும் ந‌ப‌ர் வ‌ந்து specific ஆக‌ கூப்பிட்டு எதோ க‌தைத்து அலுவ‌ல் பார்த்து விடுகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் அனேக‌மாக‌ “சிங்” ஆக்க‌ளாக‌ இருந்தார்க‌ள்.

இப்ப‌டி இருந்து இருந்து ஒண்டும் ந‌ட‌க்கேல்லை. அடிக்க‌டி அவ‌ரிட்டை போய் ஞாப‌க‌ப் ப‌டுத்திக்கொண்டு இருந்தோம். அந்த‌ வ‌ணிக‌ விசா கேட்டு வ‌ந்திருந்த‌வை ஒரு கிழ‌மையால் வ‌ரும்ப‌டி சொல்ல‌, அவ‌ருக்கு கோவ‌ம் வ‌ந்து, இது வ‌ணிக‌ விசா, இந்தியாவிற்கு வ‌ணிக‌ம் செய்ய‌ நான் வேலை பார்க்கும் நிறுவ‌ன‌ம் அனுப்புது, நீங‌க‌ள் விசா த‌ராவிட்டால், நிறுவ‌ன‌ம் அனுப்பாம‌ல் விட்டுவிடும் என்றார். அத‌ற்கு அவ‌ர் மிக‌வும் லாவ‌க‌மாக‌ “if you don’t go, its OK” என்றார். இப்ப‌டிச் செய்தால் இந்தியாவிற்குத் தானே ந‌ட்ட‌ம் என்று ம‌ன‌திற்குள் சிந்தித்துக்கொண்டேன். எங்க‌ள் ஆக்கினை தாங்க‌ முடியாம‌லோ என்ன‌வோ, எங்க‌ளை புத‌ன் கிழ‌மை வ‌ர‌ச்சொன்னார். நான் கேட்டேன், ச‌னிக்கிழ‌மை பிர‌யாண‌ம், க‌ட்டாய‌ம் த‌ருவீர்க‌ளா என்றேன்? அவ‌ரும் க‌ட்டாய‌ம் என‌ வாக்குறுதி கொடுத்தார்.

மீண்டும் புத‌ன் கிழ‌மை போய் மீண்டும் வ‌ரிசையில் நிண்டு அண்டைக்கு வ‌ந்த‌தை ஞாப‌க‌ப் ப‌டுத்தி, பெய‌ர் எழுதி கூப்பிடுற‌ன் என்றார். மீண்டும் காத்திருந்து, அடிக்க‌டி ஞாப‌க‌ப் ப‌டுத்தினேன். அப்போது மேல‌திகாரி ஒருவ‌ரும் வ‌ந்து பிர‌ச்சினைக‌ளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவ‌ரிட‌ம் முறையிட்டேன். தாய் 65 வ‌ய‌தைத் தாண்டிவிட்டா, ம‌லேசியாவில் பிற‌ந்த‌வ‌, சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் தான் இந்தியா சென்று திரும்பின‌வ‌, reception வேறு வைத்திருக்கிறோம் என்று. இப்ப‌டிச் சொல்லிக்கொண்டிருக்கேக்கிள்ளையே, அந்த‌ முத‌லாம் ந‌ப‌ர், தான் எங்க‌ளைக் க‌வ‌னிப்ப‌தாக‌வும் அதை எடுத்துக்கொண்டுவ‌ந்து தான் கொடுப்ப‌தாக‌வும் சொன்னார்.

ச‌ரி எண்டு பார்த்தால், சில‌ நிமிட‌ங்க‌ளில் அவ‌ர் க‌ட‌வுச்சீட்டுட‌ன் வ‌ந்தார். எங்க‌ளுக்கு மிக‌வும் ஆன‌ந்த‌ம். எடுத்து முத‌லில் பார்த்த‌து, விசா குத்தியிருக்கா இல்லையா எண்டு. என்ன‌ தெரிஞ்ச‌து?

அட‌ நாங்க‌ள் விசாவிற்கு விண்ண‌ப்பித்து அனுப்பி 2ம் நாள் விசா குத்த‌ப்ப‌ட்டு இருக்கு. அட‌ங்கொயாலே, 7 கிழ‌மையாக‌ அதை வைத்திருந்து, எங்க‌ளையும் இப்ப‌டி இர‌ண்டு நாட்க‌ள் இழுத்த‌டித்து… ஏன் .. ஏன்? வெளியில் நிண்ட‌ ஒரு இந்திய‌ரிட‌ம் சொன்னேன் என் க‌தையை, அவ‌ர் இப்ப‌வாச்சும் த‌ந்தாங்க‌ளே எண்டு சந்தோச‌ப்ப‌டச்சொன்னார்.

ஆக‌வே, இந்தியா போக‌ விசா விண்ண‌ப்பிக்கும் க‌ன‌டாக் கார‌ருக்கு:
ஒரே envelope இல் எல்லாருடைய‌ விசா விண்ண‌ப்ப‌த்தை அனுப்பாதீர்க‌ள். வேறு சில‌ருக்கும் இப்ப‌டி ஒன்றாக‌ அனுப்பினால், எல்லோருக்கும் கொடுத்து அதில் ஒருவ‌ரைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறார்க‌ளாம்.
அத‌னால், த‌னித் த‌னியாக‌ ஏலுமெண்டால் ஒன்றை அனுப்பி ஒரு கிழ‌மைக்குப் பின் அடுத்த‌தை அனுப்புங்க‌ள்.

அப்பாடியோவ், ஒரு மாதிரி இந்திய‌ விசா எடுத்தாச்சு. ப‌ய‌ணிப்போமா த‌மிழ் நாட்டிற்கு

One response so far

Nov 06 2008


CAPitalZ

த‌ல‌ [அஜித்] இனி down தான்

Filed under Tamil Nadu, Tamils

என்ன‌ த‌ல‌ நான் உன் அதீத‌ ர‌சிக‌ன். என்னைக் கூட‌ ஏமாத்திட்டியே.
நீ உண்ணாவிர‌த‌த்திற்கு வ‌ர‌மாட்டாய் என்று செய்தி வாசித்த‌ பின்னும், இல்லை த‌ல‌ வ‌ரும் என்று ந‌ம்பிக்கையோடு இருந்த‌ன்.

நீ சுப்ப‌ர் ஸ்டார் ஆ வ‌ர‌வேணும், அந்த‌ தூங்கு மூஞ்சி விஜ‌ய் வ‌ர‌க்கூடாது எண்டு க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக் கொண்ட‌ல்லோ இருந்த‌ன். நீ உண்ணாவிர‌த்திற்கு வ‌ர‌மாட்ட‌ன் என்று சொல்லி எங்க‌ உன் ம‌வுசு குறைஞ்சிடுமோ என்று ப‌ய‌ந்து கொண்டிருந்த‌ன். பிற‌கு வார‌ன் எண்டு அறிவிச்சா. அப்பாடியோவ், ஒரு நிம்ம‌தியா இருந்த‌து.

ச‌ரி வ‌ந்து “த‌மிழ‌ருக்கு த‌மிழீழ‌ம் கொடுப்ப‌து தான் ச‌ரியான‌ தீர்வு” எண்டு சொல்லி உல‌க‌த் த‌மிழ‌ரைக் குளிர‌வைப்பாய் எண்டு பார்த்த‌ன். உன் ப‌ட‌ங்க‌ள் உல‌க‌மெங்கும் அமோக‌மா வ‌ர‌வேற்க‌ப்ப‌ட்டிருக்கும். சும்மா ஒரு வார்த்தை தானே த‌ல‌. நீயா பிரிச்சுக் குடுக்க‌ப் போற‌? நீ கேட்காம‌லே சூப்ப‌ர் ஸ்டார் ப‌த‌வி உன்ன‌ தேடி வ‌ந்திருக்குமே. ந‌ளுவ‌ விட்டியே த‌ல‌. என‌க்கு ரொம்ப‌வுமே க‌டின‌மா இருக்கு. உன‌க்கு ஐடியா கொடுக்க‌ ஆளே இல்லையா? (அ) நீ ஒருத்த‌ரிண்டை ஐடியாவையும் கேட்கிற‌தே இல்லையா?

நான் எதிர்பார்த்தேன், ர‌ஜினி தான் கொஞ்ச‌ம் எதிர்ப்பா சொல்லுவாரு எண்டு. அட‌ அந்த‌ ஆளே த‌மிழ‌ருக்கு சார்பா பேசேக்க‌, நீ என்ன‌ த‌ல‌ ப‌ண்ணின‌?

“என் உட‌ல் ம‌ண்ணுக்கு, உயிர் த‌மிழுக்கு” என்ன‌ இது? ச‌ரி இப்ப‌டி நீ சொன்ன‌திற்கும், நீ ந‌ட‌ந்துகிட்ட‌துக்கும் ஏதாவ‌து தொட‌ர்பு இருக்கா சொல்லு? த‌மிழ‌ருக்காக‌ உண்ணாவிர‌த‌ம் இருக்கிறாங்க‌. ச‌ரி சொல்லுவாங்களே‌, இட‌ம‌றிந்து ந‌ட‌ந்துகொள்ளுத‌ல் என்று. அட‌ அப்ப‌டியாச்சும் ந‌ட‌ந்தியா. இல்லையே த‌ல‌. அடுத்த‌ வ‌ச‌ன‌மே நீ என்ன‌ சொன்ன‌ “சினிமாவ‌ சினிமாவா இருக்க‌ விடுங்க‌ please” என்று சொல்லி உரையையே முடிச்சிட்டியே. என்ன‌ ஒரு 20 நொடிக‌ள் பேசியிருப்பியா? எரியில‌ நெருப்பில‌ நெய்ய‌ இல்ல‌ ஊத்தீட்ட‌ த‌ல‌. இதுக்கு நீ வ‌ராம‌, வைத்திய‌சாலையில‌ ப‌டுத்திருக்க‌லாமே, ப‌ட‌ங்க‌ளில‌ காட்டிற‌மாதிரியே.

போ த‌ல‌, உன் ப‌த‌வி விஜ‌யிக்கு போகுது பார் உன் க‌ண்முன்னால‌யே.

இனி த‌ல‌ “குனிஞ்சிட்டுது”.

முக‌த்தில‌ ஒரு ஏதோ வேண்டா வெறுப்பா வ‌ந்த‌ மாதிரியே இருந்திச்சு. என்ன‌ ந‌டிக்கிறியா? உண்மையில‌ நீ த‌மிழீழ‌த்திற்கு எதிர் எண்டா அப்ப‌டி “த‌ல‌” ய‌ நிமிர்த்தி நான் த‌மிழீழ‌த்திற்கு எதிர்ப்பு தான், அத‌னால‌ இந்த‌ உண்ணாவிர‌த்தில‌ உட‌ன்ப‌டிக்கை இல்லை எண்டு சொல்லி இருக்க‌லாமெல்லேடா? இப்ப‌ கூட‌ ஒண்டும் கெட்டுப் போக‌ல‌, ஏதாவ‌து ஒரு ப‌ட‌த்தில‌ த‌மிழீழ‌ம் வேணும் எண்டு சொல்லு. உன் ம‌வுசு எழந்து சும்மா ஜ‌ம்முன்னு நிக்குமே. இல்லாட்டி க‌வ‌லைக்கிட‌மா தான் இருக்க‌ப் போகுது. விஜ‌ய் தான் சூப்ப‌ர் ஸ்டார்.

இதோ அஜித் “பேசிய‌” மேடைப் பேச்சு:

[kml_flashembed movie="http://www.youtube.com/v/80a0Gbbp3FY" width="425" height="350" wmode="transparent" /]

3 responses so far


Video & Audio Comments are proudly powered by Riffly