இவற்றிற்கான களஞ்சியம் October, 2008

Oct 30 2008


CAPitalZ

இந்தியாவின் உத‌வி

ஐயா நான் அன்று தொட்டு இதைத் தான் சொல்லி வ‌ருகிறேன்.

த‌மிழீழ‌ உண‌ர்வை உண‌ராம‌ல் “உத‌வி” என்ப‌து உத‌விய‌ல்ல‌.

த‌மிழீழ‌ம் தான் வேண்டும். புலிக‌ள் தான் எங்க‌ள் அர‌சு. உண‌ர்ந்து செய்வ‌தே “உத‌வி” என‌ நினைக்க‌ப்ப‌டும். இல்லையேல் “துரோக‌ம்” என‌ [இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தில் ந‌ட‌ந்த‌து போ] நினைக்க‌ப்ப‌டும்.

என்ன‌ தான் த‌லை கீழாக‌ நின்றாலும், “த‌மிழீழ‌ம்” தான் முடிவாக‌ இருக்க‌ வேண்டும். இல்லையேல் யார் செய்வ‌தும் “உத‌வி” என்று க‌ண‌க்கில் எடுப‌டாது. இதுவே இப்ப‌டி என்றால், “Sri Lanka’s territorial integrity” என்று சொல்லி த‌மிழீழ‌த்தை த‌டுக்க‌ எடுக்கும் எந்த‌ சிறு செய‌லும் “துரோக‌ம்” என்றே எண்ண‌ப்ப‌டும்.

இது தான் அன்றும் ந‌ட‌ந்த‌து.

புலிக‌ள் எங்க‌ளின் வ‌லிமைமிக்க‌ ப‌டை. பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் த‌லைவ‌ர். த‌மிழீழ‌ம் த‌ருகிறோம் பிர‌பாக‌ர‌னைத் தாருங்க‌ள் என்று சொன்னால் கூட‌ தாரை வார்க்க‌த் த‌யாரில்லை. ஏனென்றால், நாங்க‌ள் ப‌ல‌முறை ஏமாந்து போனோம். இல‌ங்கையிட‌ம் க‌ண‌க்கில‌டங்கா முறையும், இந்தியாவிட‌ம் கூட‌ ஏமாந்து போனோம். இனி த‌லைவ‌ரைத் த‌விர‌ வேறெவ‌ரையும் ந‌ம்ப‌த் த‌யாரில்லை.

ச‌மாதான‌ கால‌ந்தொட்டு ப‌ன்னாட்டு த‌ன்னார்வ‌ நிறுவ‌ன‌ங்க‌ள் [NGOs] த‌மிழீழ‌ ம‌க்க‌ளுக்கு உத‌வி வ‌ருகின்ற‌ன‌. ப‌ல‌ நாடுக‌ள் த‌மிழீழ‌ ம‌க்க‌ளுக்கு அடைக்க‌ல‌ம் கொடுத்து எவ்வ‌ள‌வோ வ‌ச‌திக‌ள் செய்து த‌ருகின்ற‌ன‌. த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளிட‌ம் அதை விட‌ மேல‌திக‌மாக‌ எதிர்பார்க்கிறோம். வேற்றான் உத‌விய‌ அள‌வே ச‌கோத‌ர‌னும் உத‌வி செய்வ‌தென்றால், வேற்றானுக்கும் ச‌கோத‌ர‌னுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்?

எத்த‌னை வ‌ருட‌ங்க‌ள், எத்த‌னை இழ‌ப்புக்க‌ள், எத்த‌னை வ‌லிக‌ளைக் க‌ட‌ந்து வ‌ந்துவிட்டோம். இன்னும் சோறு அனுப்புகிறோம்; ஒன்றுப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் இருந்து சாப்பிடுங்க‌ள் என்றால் கோப‌ம் வ‌ராம‌ல் வேறு என்ன‌ வ‌ரும்?

சீன‌ க‌தை/ ப‌ழ‌மொழி: ஒருவ‌னுகு மீனைப் பிடித்துக் கொடுத்தால் அவ‌னுக்கு அன்று உண்வு. ஆனால், அதே ந‌ப‌ருக்கு மீன் பிடிக்க‌க் க‌ற்றுக்கொடுத்தால் வாழ் நாள் பூராவும் உண‌வு.

எத்த‌னை முறை இப்ப‌டியே சோறு த‌ந்து “உத‌வ‌ப்” போறீங்க‌ள். நாங்க‌ளாக‌ சோறு செய்ய‌ உத‌வுவ‌து தான் வேண்டும்.

சாதார‌ண‌மாக‌வே ஒருவ‌ன் நெருங்கிய‌ உற‌வின‌ர்க‌ளிட‌ம் அதிக‌மாக‌ எதிர்பார்ப்பான் ம‌ற்ற‌ய‌வ‌ர்க‌ளை விட‌. அதே போல் தான் த‌மிழீழ‌ ம‌க்க‌ளும் த‌மிழ் நாட்டிட‌ம் ம‌ற்ற‌ய‌ உல‌க‌ ந‌டுக‌ளை விட‌ அதிக‌மாக‌ எதிர்பார்க்கிறோம். ஆனால், மீண்டும் மீண்டும் இந்தியாவின் “ஒன்றுபட்ட‌ இல‌ங்கை” என்று சொல்லி எங்க‌ளுக்கு கோப‌த்தைத் தான் கூட்டுகிற‌து.

இவ்வ‌ள‌வு கால‌த்திற்கு பிற‌காவ‌து, த‌மிழீழ‌ம் கிடைக்கும் ம‌ட்டும் இவ‌ர்க‌ள் ஓய‌மாட்ட‌ர்க‌ள் என்ப‌தை உண‌ர‌வேண்டும். த‌மிழீழ‌ம் நிச்ச‌ய‌ம். இந்தியாவின் ச‌ம்ம‌த‌த்தோடோ (அ) இல்லாம‌லோ, த‌மிழீழ‌ம் ம‌ல‌ரும். அது இந்தியாவால் ம‌ல‌ர்ந்தால் எல்லோருக்கும் ந‌ல்ல‌து.

உண்மையில் உத‌வ‌ எண்ணினால், த‌மிழீழ‌ம் உருவாகுவ‌த‌ற்கு குர‌ல் கொடுங்க‌ள்.

No responses yet

Oct 27 2008


CAPitalZ

வ‌டிவேல் அர‌சிய‌லும், த‌மிழீழ‌மும்

  • த‌மிழ‌ர்க‌ளுக்குத் த‌மிழீழ‌ம் வேண்டும். இதை எதிர்ப்ப‌வ‌ர் எல்லோரும் எதிரிக‌ளாக‌த் தான் பார்க்க‌ப் ப‌டுவார்க‌ள்.
  • சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இல‌ங்கையைப் பிரிக்க‌ எத்த‌ணிக்கும் எவ‌ரும் எதிரிக‌ளாக‌ப் பார்க்கிறார்க‌ள்.
  • ஆனால் வ‌ர‌லாற்றில் இர‌ண்டும் வேறு வேறு நாடுக‌ளாக‌த் தான் இருந்த‌ன‌ என்ப‌தை சிங்க‌ள‌ அர‌சு க‌ண‌க்கிலெடுக்குதில்லை.

இத‌னால் தான் இந்திய‌ இராணுவ‌ம் இல‌ங்கை வ‌ந்த‌ போது, த‌மிழ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள், சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள். இறுதியில் எதிரியின் எதிரி ந‌ண்ப‌ன் என்ற‌ சூட்சும‌த்தைக் கையாண்டுவிட்டார்க‌ள்.

என்ன‌மோ ஏதோ, இந்தியா பொய்க் கார‌ண‌ங்க‌ளைச் சொல்லி த‌மிழீழ‌ம் அமைவ‌தைத் த‌டுப்ப‌தில் மூச்சாக‌ இருக்கிற‌து. வ‌ங்காள‌ தேச‌ம் அமைக்கும்போது இந்தியாவிலும் பிரிவினை வ‌ரும் என்று எண்ணாத‌ இந்தியா இப்போது ம‌ட்டும் ஏதோ க‌வ‌லைப்ப‌டுவ‌து போல் காட்டிக்கொள்கிற‌து. உண்மையில் அப்போது தான் இந்தியா பிரிவ‌த‌ற்கான‌ ப‌ல‌ கார‌ணிக‌ள் இருந்த‌ன‌. புதிதாக‌ உருவாகிய‌ இந்தியா, நாட்டு அர‌சிய‌ல் எப்ப‌டி இருக்கும் என்று தெரியாத‌ ப‌ல‌ தேச‌ங்க‌ள். இந்து முசுலிம் க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ கால‌ம்.
இல‌ங்கை அர‌சின் வாக்குறுதிக‌ளுக்கு ம‌ன‌ம் ஆறுதல‌டைய‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளைச் சொல்கிற‌து. 20 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ த‌மிழ‌க‌ மீனவ‌ர்க‌ளைக் கொல்ல‌மாட்டோம் என்று தான் இல‌ங்கை அர‌சு வாக்குறுதி கொடுத்துக்கொண்டு வ‌ருகிற‌து. அதை அப்ப‌டியே ந‌ம்பும்ப‌டி த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌ம் சொல்லுகிற‌து. அவ‌ர்க‌ளும் வ‌டிவேல் பாணியில் [அதாங்க‌, எவ்வ‌ள‌வு தான் அடிச்சாலும் என்ன‌ தான் ப‌ண்ணினாலும் க‌டையிசில் தான் பெரிய‌ ஆள், வெற்றி பெற்ற‌ மாதிரி ப‌ட‌ங்காட்டுற‌து] அர‌சிய‌ல் ப‌ண்ணுகிறார்க‌ள்.

த‌மிழீழ‌ம் அன்றி வேறேதும் தீர்வாகாது ஈழ‌த் த‌ம்ழ‌ருக்கு. இதை ஒத்துக்க‌ ம‌றுத்து க‌டும்போக்காக‌ வ‌ரும்போது த‌மிழ் நாட்டு ம‌க்க‌ள் கொதித்தெழுகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் த‌மிழீழ‌த்திற்கு ஆத‌ர‌வு த‌ரும்போது இந்தியா ம‌றுக்க‌, இந்தியாவிலிருந்து வேறுப‌ட்டு “த‌மிழ‌ன்” என்று த‌னித்து கோரிக்கை எழுப்ப‌, இந்தியா “பாத்தீங்க‌ளா, த‌மிழீழ‌ம் கிடைச்சால் பிற‌கு இந்தியாவிலும் பிரிவினை தான் என்று நான் சொன்னேன் தானே” என்று குண்டைத் தூக்கிப் போட்டு த‌மிழீழ‌ ம‌க்க‌ள் வாயில் ம‌ண்ணைப் போடுகிற‌து. க‌டைசியில் இந்தியாவின் எண்ண‌ம் ஈடேறுகிற‌து.

த‌மிழீழ‌ ம‌க்க‌ள் கேட்ப‌தெல்லாம் ஒன்று: “உத‌வி செய்யாவிட்டாலும் ப‌ர‌வாயில்லை, உவ‌த்திர‌மாவ‌து செய்யாதிருங்க‌ள்”.

த‌மிழீழ‌ம் பெற்றுத்த‌ராவிட்டாலும் ப‌ர‌வாயில்லை. [த‌மிழீழ‌ம் ஈழ‌த்த‌மிழ‌னால் ம‌ட்டுமே வென்றெடுக்க‌ முடியும் என்ப‌து த‌லைவ‌ரின் ந‌ம்பிக்கை]. எதிரிக்கு உத‌வாம‌லிருங்க‌ள் அதுவே போதும். கோடிக்க‌ண‌க்கில் வாரி வாரி இனாமாக‌ கொடுக்கிற‌து இந்திய‌ அர‌சு எதிரிக்கு. இராணுவ‌ உத‌வி கொடுக்க‌வில்லை என்று உத்தியோக‌பூர்வ‌ அறிக்கைக‌ள் விட்டு பின்ப‌க்க‌த்தில் இராணுவ‌ வீர‌ர்க‌ளையே கொடுக்கிற‌து. அப்போ த‌மிழ் நாட்டு அர‌சைக் கூட‌ இந்தியா க‌ண‌க்கிலெடுக்க‌வில்லை என்று தானே அர்த்த‌ம்?

இப்போ மீண்டும் இந்தியாவிலிருந்து வேறுப‌ட்டு “த‌மிழ‌ன்” என்ற‌ ரீதியில் த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் குர‌ல் கொடுக்க‌, இந்தியா “பிரிவினை” என்று சொல்லி மீண்டும் த‌மிழீழ‌ ம‌க்க‌ள் வாயில் ம‌ண்ணைப் போட்டு த‌ன் பாதையில் லாவ‌க‌மாக‌ ந‌ட‌ந்து போகிற‌து. மீண்டும் வ‌டிவேல் அர‌சிய‌ல் தான்.

அண்ணே வ‌டிவேல் அண்ணே, நீங்க‌ளாச்சும் அர‌சிய‌லுக்கு வ‌ந்து “த‌னித் த‌மிழீழ‌ம் தான் தீர்வு என்று சொல்லுங்க‌ண்ண‌.

“திருட‌னாய்ப் பார்த்து திருந்தாவிட்ட‌ல், திருட்டை ஒழிக்க‌ இய‌லாது” என்ற‌ பாட‌ல் தான் ஞாப‌க‌த்திற்கு வ‌ருகுது.

No responses yet

Oct 13 2008


CAPitalZ

இந்திய‌ த‌மிழ‌ர் அர‌சிய‌ல்

Filed under India, Politics, Tamil Nadu, Tamils

அமைதிக்காவும், ம‌னித‌நேய‌த்திற்காக‌வும் குர‌ல் கொடுப்போம்!

மேலே கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கோப்பு வாசிக்க‌ப் பெற்றேன்.

ப‌த‌வி ஆசை, குடும்ப‌ ந‌ல‌ம், க‌ட்சி இலாப‌ம், மேலோங்கி நிற்கிற‌து.

என‌க்கென்ன‌மோ, எந்த‌க் க‌ட்சி வ‌ந்தாலும் இது தான் நிலைமை என்று தோன்றுகிற‌து.

விஜ‌ய‌காந்த் கூட‌ க‌ட்சி அர‌சிய‌லில் தான் இப்போது சாய்கிறார் போலும் தெரிகிற‌து.

திமுக‌ கூட்டும் அனைத்துக் க‌ட்சிக் கூட்ட‌த்திற்கு போகாத‌த‌ற்கு கார‌ண‌ம் சொல்கிறார். அட‌ அர‌சிய‌ல் முக்கிய‌ம் இல்லை, த‌மிழ‌ர் பிர‌ச்சினை தான் முக்கிய‌ம் என்று நினைத்திருந்தால் சென்றிருப்பார்.

ம்ம்ம்… இந்தியாவில் ப‌த‌வி அர‌சிய‌ல் ம‌க்க‌ள் ந‌ல‌னை விட‌ முக்க‌மாக‌த் தான் தென்ப‌டுகிற‌து. சொல்வார்க‌ளே, அர‌சிய‌லில் சேரும் ந‌ல்ல‌வ‌ன் கூட‌ அர‌சிய‌ல் சாக்க‌டையில் சேர்ந்து விடுவான் என்று. அது இது தான் போலும்.

No responses yet


Video & Audio Comments are proudly powered by Riffly