இவற்றிற்கான களஞ்சியம் September, 2006

Sep 28 2006


CAPitalZ

உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன்

Filed under Internet, Thamizh

ஒரு நல்ல கருத்துடைய இணைய தள முகவரி ஒன்று கூருங்களேன். நான் புதிதாக ஒரு இணையத்தளம் பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன்.

எனது எல்லா பதிவுகளையும் ஒரு முகவரிக்குக் கீழ் கொண்டுவர உத்தேசம். அதாவது

http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1paththiram.wordpress.com/
http://1about.wordpress.com/
http://1seythi.wordpress.com/
http://1letter.wordpress.com/
http://1padam.wordpress.com/

இதில் “wordpress” என்னும் சொல்லுக்குப் பதிலாக தான் எனக்கு சொல் தேவை. கட்டாயம் மொழி பெயர்ப்பாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
எதாவது ஒரு தமிழ் சொல்லாக, சிறிய சொல்லாக, நல்ல பரந்த கருந்துடைய சொல்லாக இருந்தால் நலம்.

எனக்குத் தோன்றியவை, ஆனால் எனதாக்க முடியாதவை.
aalam.com – ஆல மரம்
naan.com – நான்
naam.com – நாம்
viidu.com – வீடு – ஆனால், இரண்டு ‘i’ மிக நெருக்கமாக இருப்பதால், முகவரியை பிழையாக விளங்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
veeli.com – வேலி
_____
CAPital

சேர்க்கப்பட்டது I: 2006/10/12 @ 3:28 PM [GMT -5]

vaasal.com
vaasam.com
vaanam.com
vanam.com
naadu.com
auvai.com – ஔவை
manam.com
seeval.com – சேவல்
kanavu .com – கனவு
kural.com – குரல்
muram.com – முறம்
murram.com – முற்றம்
vanakkam.com
naathan.com
nathan.com
muham.com
mukam.com
ammaa.com
amma.com
sirahu.com
siraku.com
tamils.com
aham.com – அக‌ம்
puram.com – புறம்
suvadi.com – சுவடி
suvadu.com – சுவடு
theesam.com – தேசம்
tiger.com
tigers.com
dadi.com – டா, டி [அப்பா அல்ல]
koolam.com
sooru.com – சோறு
yaroo.com – யாரோ
idam.com – இடம்
nanri.com – நன்றி
santhi.com
santhy.com
valai.com – வலை
valaivaasal.com – வலைவாசல்
kudil.com
karuththu.com – கருத்து
thodarpu.com – தொடர்பு
valai.com   -   வலை
valy.com   -   வலை
vali.com   -   வலை

சும்மா ஒரு வீம்புக்கு இதை முயற்சிசெய்து பார்த்தேன்.
ltte.com
tamileelam.com
அட அந்த இணைய முகவரியை பதிவு செய்யவே இயலாதாம்!

12 responses so far

Sep 26 2006


CAPitalZ

வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான்!

Filed under India, LTTE, War of Tamil Eelam

இன்று திலீபன் நினைவு நாள்.

கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்து சில நாட்களில் களவாக ஆரேஞ் ஜூஸ் குடிப்பது போல் இல்லாமல், உண்மையிலேயே ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், உயிரை மாய்த்துக்கொண்ட நெஞ்சழுத்தக் காரன். குளிக்கும் போது கூட வாயிற்குள் தண்ணீர் போகாமல் பார்த்துக்கொண்டவன்.

ஒரு முறை தான் இருந்தான், மறுமுறை இருந்து விடுவானோ என்று பயத்தில், அனுப்பி விட்டார்கள். காந்தி எத்தனையோ முறை உண்ணாவிரதம் இருந்தார். ஒவ்வொரு முறையும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது (அ) சம்பந்தப்பட்ட பிரமுகர்கள் சந்தித்து வாக்குமூலம் கொடுக்கப்பட்டது. அது வெள்ளைக்காரன். ஒரு முறை கூட, இவரை விட்டால் மீண்டும் மீண்டும் இருப்பார் என்று, சாக விடவில்லை. காந்தியை சாக விடக்கூடாது என்று தான் கட்டளையாகவே இருந்ததாம்.

அகிம்சையை உலகுக்கு எடுத்துக்காட்டிய காந்தி பிறந்த தேசம், அகிம்சாவாதிகள் என்று மார் தட்டிக் கொள்பவர்கள், அகிம்சையாக இருந்த திலீபனுடன் வந்து கதைக்கக் கூட இல்லை.

உயிர் பிரிந்த பின், வருத்தப்படுகிறோம், கவலைப்படுகிறோம்; அறிக்கைகள்.

என்ன இருந்தாலும், வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான்.

______
CAPital

No responses yet

Sep 23 2006


CAPitalZ

தமிழ் ஒருங்குறி ?! – 16

- ஒருங்குறியின் மேன்மை
- பிற மொழிகள் இடம்பெற்ற முறை
- தமிழ் மொழிக்கு உள்ள இடம்
- தமிழ் அறிஞர்கள் செய்யத் தவறிய செயல்
- தமிழுக்கு உள்ள சிக்கல் / அதனால் தமிழுக்குரிய பாதிப்பு
- தமிழுக்குக் கிடைக்க வேண்டிய இடம்
- தமிழை உயர்த்த செய்ய வேண்டிய பணிகள்
- போன்ற கருத்துகளுடன் நான் எடுத்துக் காட்ட விரும்பும் செயல் திட்டம் போன்றவற்றை பவர் பொய்ன்றில் கொடுத்துள்ளேன்.

ஒருங்குறியும் தமிழும்

மேலே உள்ள சுட்டியை தட்டி பவர் பொய்ன்றை தரையிறக்கிக் கொள்ளவும்.
______
CAPital

பி.கு. :-
பவர் பொய்ன்றில் தமிழ் சரியாகத் தெரியாதவர்கள் TSCu_Paranar.ttf எழுத்துருவை தரை இறக்கி நிறுவிப் பார்க்கவும். ஒருங்குறிக்கே இந்த நிலமையா! :(

TSCu_Paranar

தரையிறக்கியவுடன் TSCu_Paranar.txt என்னும் கோப்பின் பெயரை TSCu_Paranar.ttf என்று மாற்றுக.

பாகம் – 17 >>

<< பாகம் – 15

8 responses so far

Sep 22 2006


CAPitalZ

கனடாவின் வளர்ச்சி

இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஆயுத தளபாடங்களை பிரித்தானியாவிற்குத் தான் விற்றது. இதனால் தான் அமெரிக்கா அசுர வளர்ச்சி அடைந்தது, மற்றவர்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கையில். கவனிக்கவேண்டிய விடயம், பிரித்தானிய உரிமையாளர் அமெரிக்காவில் தொழில் தொடங்கி ஆயுதங்கள் செய்யப்படவில்லை.

இன்றைய கால கட்டத்தில், வெளி நாட்டு வியாபாரிகள் இந்தியாவிலோ (அ) வேறு நாடுகளில் தங்கள் தொழிலைத் தொடங்கி அவர்கள் காசு கறக்கிறார்கள். இதனால் உள்நாட்டு வியாபாரி பெரிதும் போட்டி போட முடியாமல் இருக்கிறது.

வெளிநாட்டு வியாபாரம் நம் நாட்டிற்குள் வருவதால் தொழில் வாய்ப்பு கிடைக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால், வெளிநாட்டவன் நம்மை வைத்து, நம் நாட்டிலேயே உழைக்கிறான் என்பதும் உணமை தான்.

கேள்வி நம் நாடு முன்னேறுகிறதா? நம் நாட்டு மக்கள் முன்னேறுகிறார்களா?

அதற்காக நம்மவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று நல்லா தானே முன்னேறி வாழ்கிறார்கள் என்று சொல்லாதீர்கள். இது நம் நாட்டின் வளர்ச்சி அல்ல. நம் நாட்டு மக்களின் முன்னேற்றம் இல்லை. இது நம் நாட்டின் மனித வளம் வெளியேற்றம். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு மனிதனின் செலவாணிப் பங்கு குறைந்து விட்டது. அதே நேரத்தில், வெளிநாட்டில் இருப்பவர் பணத்தை சொந்த நாட்டிற்கு அனுப்பினால் சொந்த நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. இப்படித் தான் இலங்கைத் தமிழர்கள் [அரசில் பதிந்த வியாபாரி மூலம்] அனுப்பும் பணம் இலங்கை அரசுக்கு உதவி செய்கிறது.

ஏன் வெளிநாடுகள் திறைமைசாலிக்கு அதிக சம்பளம், சலுகை என்று கொடுத்து தம் நாட்டுக்கு எடுக்கிறார்கள்? அவரின் மேல் உள்ள மனிதாபிமான அக்கறையா? இல்லவே இல்லை. இவரால் தம் நாடு முன்னேறும் என்பதால்.

கனடாவில், குடும்பத்தை அழைத்துக்கொள்ளலாம் [sponser]. ஏன் இப்படி செய்கிறார்கள்? குடும்பமும் இங்கே வந்து விட்டால், இவர் தன் தாய் நாட்டுக்குத் திரும்பிப் போகவேண்டும் என்ற எண்ணம் மிகக் குறைவாகிவிடும். குடும்பத்திற்கு என்று இந்த நாட்டிலிருந்து வெளியேறும் கனடாப் பணம் இல்லாதொழிந்து விடும். ஆகவே கனடாப் பணம் கனடாவிற்குள்ளேயே நிற்கும்.

ஏன் சும்மா இருக்க பணம் கொடுக்கிறார்கள்? [welfare] பாவம் என்று பார்த்தா? இல்லை. பணம் இல்லையாயின் இவன் அதைத் தேடி வேறு நாட்டிற்கு போய்விடுவான். அப்படி அவன் போகாவிட்டாலும், நாட்டில் பஞ்சம் அதிகரித்து விடும். இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு தான் பிரச்சனை. இந்தக் காசை எடுப்பவன் என்ன செய்கிறான்? அவ்வளவத்தையும் இந்த நாட்டுக்குள்ளேயே செலவழிக்கிறான். ஆகவே, தன்னை அறியாமலேயே அவன் இந்த நாட்டு பொருளாதாரத்தை உருட்டிக்கொண்டிருக்கிறான். பொருளாதாரம் தாழ்ந்துவிடக்கூடாது என்று தான் அரசாங்கமும் சும்மா இருக்கப் பணம் கொடுக்கிறது.

பல்கலைக்கழகத்தில் படிக்க இங்கு இலவசம் அல்ல. இருந்தாலும், அரசாங்கம் வட்டி இல்லாமல் பணத்தை கடனாக உதவி செய்யும். ஏன், பாவம் படிக்கட்டும் என்றா? படித்து வருபவர்கள் பணக் கஷ்டத்தால் படிக்காமல் விட்டால் நாட்டில் அறிவாளிகள் குறைந்து விடுவார்கள். பிறகு வெளிநாட்டிலிருந்து அறிவாளிகளை வாங்க வேண்டி ஏற்படும்.

மேலே சொல்லப்பட்டவை பொதுவுடமை சிந்தனையாகத் தான் தெரிகிறது.

கனடாவை ஒரு குழந்தை என்பார்கள். ஏனெனில் மற்றய நாடுகள் போல் கனடாவிற்கு ஒரு நீண்ட வரலாறு ஏதும் இல்லை. கனடா என்று உருவாகியே சில வருடங்கள் தான் [மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது]. தன்னை வளர்த்துக்கொள்ள கனடா இப்படி சலுகைகள் கொடுக்கிறது. முன்பு சும்மா இருக்க பணம் கொடுக்கும் முறையில் [welfare] அதிக பணம் கொடுத்தார்கள். வேறு பல சலுகைகள், உதவிகள் என்று பல. இப்போது அவை குறைந்து விட்டன. ஏனெனில், கனடாவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. பணம் இல்லை என்றில்லை. தேவை குறைகிறது. முன்பு குடும்பத்தாரை அழைக்க கட்டணமாக $500 கட்டவேண்டி இருந்தது [அதற்கு முதல் என்ன என்று எனக்குத் தெரியாது]. இப்போது $1,500 கட்ட வேண்டி உள்ளது. மூன்று மடங்காக உயர்ந்து விட்டது. தேவை குறைகிறது. வட்டி இல்லாமல் பணம் கொடுத்து அறிவாளிகளை இங்கேயே உருவாக்குகிறார்கள். அதனால், வெளிநாடுகளிலிருந்து அறிவாளியை கொண்டுவரவேண்டிய கட்டாயம் குறைகிறது.

இதை இன்னொரு விதமாகவும் எடுக்கலாம். அதாவது உள்நாட்டு மக்களை முன்னேற வழி சமைக்கிறது. வெளிநாட்டவர் படிக்க பல்கலைக்கழகங்களின் கட்டணமாக மூன்று மடங்கிற்கு மேல் கட்ட வேணும்
, உள்நாட்டவரை விட.

மொத்தமாக பார்த்தால், நாட்டின் வளர்ச்சிக்காக பல சலுகைகள் செய்து வெளிநாடுகளிலிருந்து மனித வளம் மற்றும் பொருளாதரத்தை இறக்குமதி செய்தார்கள். அதே வேளையில், நாட்டில் இருப்பவர்களையும் பாதுகாத்து அவர்களை முன்னேற்றவும் செய்கிறார்கள். எதிர்காலத்தில், நாட்டில் இருப்பவர்களை மட்டும் பார்த்தால் போதும். வெளிநாட்டு உதவி தேவை இல்லை.

வேடிக்கை என்னவென்றால், இங்கு என் நாடு கனடா என்று சொல்லி மார்தட்டி பிதட்டிக்கொள்பவர்கள் எவருமில்லை. எலும்பே உறைந்து போகுமளவிற்கு குளிர். சூறாவளி என்பதுபோல், இங்கு பனிச் சூறாவளி அனேகமாக ஒவ்வொரு பனிக்காலமும் எங்காவது வந்துவிடும். வருடத்தில் 4 மாதங்கள் தான் வெக்கை காலம். வீதியில் விழுந்த பனியை அகற்றுவதற்கே கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். இவ்வளவு இயற்கை அனர்த்தங்களுக்கும் இடையில் நாடு வளர்ச்சி அடைகிறது. கனடாவின் குளிர் பற்றி சொல்வதென்றால், அதற்கே என்று ஒரு கட்டுரை எழுதலாம். எங்கள் நாடுகளில் இப்படி எல்லாம் இல்லாமல் இருந்தும் முன்னேறவில்லை.

என்னமோ எதோ செய்து நாட்டை முன்னேற்றுவதில் வெள்ளைக்காரன் மிகக் கெட்டிக்காரன் தான் என்பதை மறுக்க இயலாது.

_____
CAPital

3 responses so far

Sep 18 2006


CAPitalZ

Detect users leaving your web page

leaving.asp

The above file has the necessary coding to detect a user leaving your web page. Just rename the file to “leaving.asp”.

_____
CAPital

No responses yet

Sep 13 2006


CAPitalZ

தேன்கூடு – ஏன் என்னை தடைசெய்தாய்? – 03

எனது ஒரு பார்வை பதிவை தடை செய்ததன் காரணத்தை இறுதியாக சொல்லி விட்டார்கள் தேன்கூடு தள ஆளுநர்கள். முப்பது நாட்கள் கடந்த பின் தான் எனக்கே தெரிகிறது என்ன காரணம் என்று. யாரோ நான் துவேசத்தை ஊட்டுகிறேன் என்று கோள்மூட்டி இருக்கிறார்கள். உடனே அவர்கள் என் பதிவை வந்து பார்வையிடாமல், எனக்கும் அறிவிக்காமல் தடை செய்து விட்டார்கள். வேடிக்கை என்னவென்றால் தேன்கூடு தள ஆளுநர்களுக்கு [சிலருக்கோ (அ) பலருக்கோ] தமிழ் தெரியாத காரணத்தால் தானாம் இவ்வளவு தாமதமாக காரணத்தை எனக்கு சொன்னார்களாம். அது என்னமோ இருக்கட்டும்.இப்போது எனது புதிய பதிவான ஒரு பத்திரம் என்னும் தளத்தை அவர்கள் பட்டியலில் சேர்க்கும்படி கேட்டிருந்தேன். பல நாட்களின் பின் நானாகவே கண்டறிந்தேன் அது நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை. அது ஏன் நிராகரிக்கப்பட்டது என்று கேட்டதற்கு இந்த பதிவு ஆங்கிலத்தில் எழுதுவீர்களா (அ) தமிழில் எழுதுவீர்களா என்று கேட்டு விட்டிருந்தார்கள். அப்படி ஆங்கிலத்தில் எழுதவதாக இருந்தால் பதிவை வெறும் பட்டியலில் சேர்க்கலாம், [இடுகைகள் புதிப்பக்கப்படாது] என்று சொல்லி இருந்தார்கள்.

இந்த மடலுக்கும், அவர்களது முந்திய மடலான எனது ஒரு பார்வை பதிவை தடை செய்ததன் நோக்கத்தை கூறிய மடலுக்கும் சேர்த்து நான் எழுதிய பதில் மடலை கீழே கொடுக்கிறேன். [ஆங்கிலத்தில் போட்டுட்டேன் என்று தடை செய்து விட்டாலும் விடுவார்களோ? :( ]

 

_____
CAPital

 

Dear Thenkoodu Team,

If you cannot add my blog to the automatic aggregation, since my blog [would] contain English articles, then please do add my blog in your blog directory. I honestly do not know which category to recommend you to list my blog under. So please do so at your choice.

That’s being said aside, as you acknowledge that I sent you a second email dated August 6th I also sent numerous notes at the place where my blog said “Deferred” in you web page. It is where I found out my blog was “Deferred” under “கட்டளையகம்“. So it may not be technically emails sent from my email account to yours, but I did sent an email from my email account as well as numerous “notes” from your website.

On your email dated September 03rd you have mentioned “As we have informed earlier in our mail (dated 13th), your blog received complaints on the category such as promoting hate.” I would like to point out that in your email dated 13th you did not mention anything about that you received complaints and that is why its being deferred. I am also attaching your email in Annex I [bloggers: please see at the bottom of my first post for the email at தேன்கூடு - ஏன் என்னை தடைசெய்தாய்? ]

Moreover, the fact that I had to find out myself that my blog is being “deferred”, and no proper response was given by your team led me to the posts which I did. Even that I first did my complaint posts on my blog only, hoping that when your team tries to “evaluate” my blog, they will read it right away. But days seems to pass and I did not get any responses. It is in your mail dated Sep 03, which came 30 days after I found out that my blog is being deferred, that I came to know NOT all of you know Tamil. Even now, I do not know when exactly my blog was deferred.

So I am wondering, just because someone complained, you deferred my blog, not even dropping a note to my email and did not give a proper explanation even after I inquired about while you were not able to understand Tamil! A “Tamil Blogs Portal” deferred my blog without even reading it. I’m sorry but I’m sensing something fishy here.

Just a note, that I did not get any email from you that my blog ஒரு பத்திரம் is rejected. This is also I had to find out [by] myself. The reason for rejection was stated on your website as follows:

“(Rejected)
Status Msg: As per our policy, we do not include blogs primarily written for the organizations. Contact us if our understanding is wrong. – Support Staff.
You may contact us with details if required”

It is for this string of email communication that I’m writing this email. Again, I am totally lost when did “Tamil Eelam” become an “organization”. If you know something that I do not know, please enlighten me. Just to let you know, this blog has been approved my Thamizmanam and Tamilblogs.

Anyhow, I would recommend that when you defer someone else blog next time [or mine for that matter], please let the owner know and give proper explanation sooner than taking 30 days.

Thank you for your email and your support.

<< பாகம் – 02

சேர்க்கப்பட்டது I [2006/09/14 03:33 AM GMT-5]

Sir,

We do not understand what you mean by numerous “notes” you are mentioning? and how do you send it to us? we don’t have mechanism to receive user views of the page!

The reason for delayed response in case of your blog, was already mentioned in detail in our earlier mail to you. We do not drop a blog just like that. We received consistent emails about your blog questioning your blogs primary motive.

We give our reason in case of rejection which you can see from the user control panel page only. We do not send mails. This is our practice. However, we will consider your suggestion.

The time we reviewed all your posts were categorized as “LTTE”.

Regards,
Thenkoodu Portal Support.

2 responses so far

Sep 10 2006


CAPitalZ

Excel date format fix

Filed under Excel, Programming, Scripts

formula to reformat date from

Either set regional and language options to match the format

OR

DD/MM/YYYY to MM/DD/YYYY

OR
MM/DD/YYYY to DD/MM/YYYY

=(SUBSTITUTE(MID(C3,FIND(“/”,C3)+1,2),”/”,)&”/”&SUBSTITUTE(LEFT(C3,2),”/”,)&”/”&RIGHT(C3,4))

No responses yet

Sep 09 2006


CAPitalZ

இந்தியாவில் புரட்சி?!

Filed under India, Politics

என்னைப் பொறுத்த வரையில், இந்தியாவிற்கு இன்னுமொரு சுதந்திரம் தேவையில்லை.

சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவதென்று தெரியாமல் நாட்டைக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள்/ விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிற்கு தேவை புரட்சி.
எதாவது ஒரு நற் சிந்தனையோடு ஒரு புரட்சி வெடிக்க வேண்டும். அவரின் வழிகாட்டலில் நாட்டின் கட்டமைப்பை புரட்டிப் போட வேண்டும். கட்டுக்கோப்பான செயல்முறையால் பல புரட்சிகரமான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இதை சற்று கடினமான செயற்பாடுகளால் தான் நிறுவ
முடியும்.

ஃபிரஞ்சு புரட்சி, ரஷ்யப் புரட்சி என்று கேள்விப்பட்டிருப்பீர்களே. அதைப் போல்.

ஆனால், புரட்சி வெடிக்க நாட்டின் நிலமை மிக மோசமாக (அ) பலரின் வெறுப்பிற்கு பின் தான் நடக்கும்.

இன்றய இந்திய நிலமை மிக நல்ல நாடாகவும் இல்லை, கெட்ட நாடாகவும் இல்லை. இரண்டும் கெட்டான் நிலமை. ஆகவே இப்போதைக்கு புரட்சி இல்லை.

சரி புரட்சி அமைப்பு ஒன்று இல்லை என்று சொன்னால் சரியாகுமா? புரட்சி அமைப்பு என்பது ஒரு சட்ட பூர்வமாக உருவாவது இல்லை.

புரட்சி அமைப்பை வெளியில் இருப்பவர்கள் உருவாக்க இயலாது. அது உள்ளிருந்து [இந்தியாவில்] தான் உருவாக வேண்டும்.

புரட்சி எப்போதும் சட்டத்திற்கு எதிராகத் தான் செய்யப்பட்டது. ஆகவே எந்த ஒரு அரசியல் கட்சியாலும் இதை செய்ய இயலாது. வாக்கு கேட்டு தேர்தலில் நிற்கும் கட்சி உதவி செய்யலாம், ஆனால் அது அந்த அரசியல் நோக்கத்திற்காகவே இருக்கும். ஆகவே, அரசியலில் இல்லாத அமைப்பு தான் புரட்சியை செய்து முடிக்கலாம்.

கஷ்டம் வந்த பின் தானே ஐயா புரட்சி செய்வார்கள். கஷ்டம் இல்லாத போது ஏன் புரட்சி செய்ய வேண்டும்?

இந்தியாவில் புரட்சி

புரட்சிக்கு முதலாவது மக்கள் பலம். தற்போதைய கட்டமைப்பில் வெறுப்படைந்து பெரும்பாலானோர் புரட்சியை ஆதிரிக்க. இது இந்தியாவில் சற்று இருக்கென்று தான் நினைக்கிறேன். அரசியலில் எல்லோருக்கும் வெறுப்பு தான் இந்தியாவில்.

புரட்சியை முன்னெடுக்க கூடிய திறன், திடம் மிக்க மனிதர்கள். இந்தியாவில் யாராக இருக்க முடியும்?

வேலையில்லாப் பட்டதாரிகள்!

நாட்டின் கட்டமைப்பில் பாதிக்கப்பட்டு கொதிப்படைந்து இருந்தாலும், நல்ல கல்வி கற்றவர்கள். நற்சிந்தனை உதிக்கக்கூடியவர்கள்.

இவர்களுக்கு ஆலோசனை சொல்ல நல்ல முதியவர்கள் [சத்தியமாக அரசியல்வாதியாக இருக்கக் கூடாது].

அப்போ ஏன் இந்தியாவில் புரட்சி ஆரம்பிக்கவில்லை?

பலர் இன்றும் பொருளாதாரத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பது. அன்றாட அடிப்படைத் தேவைக்கே யோசிக்க வேண்டி இருக்கும்போது நாட்டைப் பற்றி யோசிக்க முடியுமா? ஆகவே புரட்சியை நகரத்தில் உள்ளவர்கள் தான் செய்ய வேண்டும்.

தீவிரவாதம் இன்னும் நாட்டில் இருப்பதால், யாராவது புரட்சிகரமான சிந்தனையோடு வெளிக்கிட்டால், சந்தேகக் கண் கொண்டு பார்க்கவேண்டிய கட்டாயம் அரசுக்கு. புரட்சி செய்ய முற்படுபவன் கடைசியில் நாட்டைப் பிரிக்கிறான், மக்களைக் குழப்புகிறான் என்று தேசத்துரோகியாக முத்திரை குத்தப்படுவான் என்ற பயம் மக்களுக்கு.

புரட்சி ஒரு இரவில் வெடிப்பதில்லை. சுதந்திரம் போல் சிறுகச் சிறுக கட்டியமைத்து கடைசியில் பேரெழுச்சி பெறுவது.

இந்தியா முழுவதும் புரட்சி வெடிக்கும் என்று பார்த்துக்கொண்டிருக்க இயலாது. முன் சொன்ன காரணிகள் இந்தியா முழுவதும் வராது. ஏதாவது ஒரு மாநிலம் தொடங்கினால் மற்றவை இதைப் பார்த்து தொடங்கும்.

ஒரு மாநிலத்தில் ஒரு சட்டமோ (அ) வசதியோ கொண்டுவந்து விட்டார்கள் என்றால் மற்றய மாநிலங்களும் செய்ய எத்தணிக்கிறார்களே அப்படி.

 

பாகம்  – 02 >>

 

_____
CAPital

4 responses so far

Sep 08 2006


CAPitalZ

Switching language in web user interface pages

language.asp

Use the above file to switch between two languages of your web user interface. Ex English and French.

All your webpages has to be named

<somename>_e.asp

<somename>_f.asp

ex. aboutMe_e.asp, index_f.asp

While the user is on one page [aboutMe_e.asp], s/he can click on the menu option “language” and it will automatically switch to the other language [aboutMe_f.asp]. Therefore, you don’t have to worry about linking the other language files, since this “language” option on the menu would automatically display the correct file.

Note: Please rename the file to “language.asp”

_____
CAPital

No responses yet

Sep 02 2006


CAPitalZ

தேன்கூடு – ஏன் என்னை தடைசெய்தாய்? – 02

முதலில் எனது பதிவில் உள்ள இடுகைக்கு [தேன்கூடு - ஏன் என்னை தடைசெய்தாய்?] வருகைதந்து நூலகம் குழுமத்திற்கு இணைப்பு தந்து உதவிய “nameless” அவர்களுக்கும், விண்ணாணம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இங்கே எழதப்படும் பதில்கள் யாவும் தேன்கூடு தள ஆளுநர்களுக்காக என்று நான் சொல்லவில்லை. இதை பொதுவாகவே எழுதுகிறேன். ஏனெனில், அவர்கள் எனக்கு இப்படியான மடல்கள், நூலகம் கூகிள் குழுமத்தில் இடப்பட்டுள்ளது போல், எதையும் அனுப்பியது கிடையாது. ஆதலால் அவர்களுக்கு என்று என்னால் பதில் போட இயலாமலுள்ளது.

இதுவரைக்கும், தேன்கூடு தள ஆளுநர்கள் எனக்கு எந்த வித காரணமும் சொல்லவில்லை. அவர்கள் அனுப்பிய அத்தனை மடல்களும் எனது மேற்குறிப்பிடப்பட்ட இடுகையில் பதிவி செய்துள்ளேன்.

24 மணி நேரத்திற்கும் என் பதிவை இணைத்தவர்கள் [தடைசெய்யப்பட்டது என்று நான் அறிந்து] 29 நாட்கள் (இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறேன்) ஆகியும் எந்த வித காரணமும் இதுவரைக்கும் சொல்லவில்லை.

என் இடுகையில் நான் சொன்னதுபோல், இப்படியான தளங்கள் இருக்கு என்று தெரிந்த பின் நான் பதிவைத் தொடங்கவில்லை. ஆதலால், இவர்கள் இணைக்காவிட்டாலும், நான் பதிவை நிறுத்த மாட்டேன்.

எனது பதிவு, ஒரு பார்வை, வேறு எந்த செய்தி இணையத்தளத்திலிருந்தோ (அ) வேறு எங்கு இருந்தோ நான் வெட்டி ஒட்டவில்லை. விருப்பமென்றால் நீங்கள் போய்ப் பார்க்கலாம்.

அவர்களது மடல்களை நான் மற்றய குழுமங்களில் போடவில்லை என்று குறை கூறியிருந்தார்கள். நான் கேட்ட முதல் கேள்விக்கே பதில் வரவில்லை இன்னும், பிறகென்னெண்டு கருத்து போடுவது? அவர்களுடனான எனது தொடர்புகளை எனது பதிவில் அன்றன்றைக்கே போட்டிருக்கிறேன் [திகதி, மணி வாரியாக].

எனது பதிவை தடைசெய்துவிட்டு, அதை கண்காணிக்கிறோம் என்று சொன்னவர்களுக்கு அதே பதிவில் நான் இட்ட இடுகை எப்படி தெரியாமல் போனது? உண்மையில் அவர்கள் எனது பதிவை கண்காணித்திருந்தால் எனது இடுகையை தவறவிட்டிருக்க இயலாது. அந்த தேன்கூடு – ஏன் என்னை தடைசெய்தாய்? என்ற இடுகை பல நாட்களாக முதலாவதாக இருந்தே பின் பிற இடுகைகளை போட அரம்பித்தேன். போதாததற்கு “தேன்கூடு” என்ற சொல்லை கூகிளில் தேடினால், எனது இடுகை இரண்டாவதாக வரும் [தேன்கூடு தளம் தான் முதலாவது].

உண்மையில், எனது பதிவை தடைசெய்தபோது, எனது பதிவைத்தான் தடைசெய்தார்கள் என்று நினைத்தேன். பலரின் கருத்துக்களுக்குப் பின் தான் தெரிகிறது, பலரின் பதிவுகள் தடைசெய்யப்பட்டு உள்ளது என்று.

ஆனால், ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இப்படிப்பட்ட சில ஈழ எதிர்ப்பாளர்களால், ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களுமே தமிழீழ மக்களுக்கு உதவவில்லை என்ற கருத்தே மேம்படுகிறது. இருந்தாலும் இப்படியான எதிர்ப்புகளுக்கும், சட்ட சிக்கல்களுக்கும் மத்தியிலும் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு பலர் உதவிக்கொண்டு தான் இருக்கிறார்கள், தமிழ் நாட்டில். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

 

பாகம் – 03 >>

<< பாகம் – 01

_____
CAPital

 

சேர்க்கப்பட்டது I [GMT 2006/09/03 @ 12:07]

Dear Mr.Capital,

First of all sorry for the inconvenience and thanks for your patience. Recently your blog has been included for aggregation in Thenkoodu.com – Tamil Blogs Portal. Due to heavy work pressure, and some of our team members were not around, we were not able to work on your issue as we thought we could be. :-(

What happened?

As we have informed earlier in our mail (dated 13th), your blog received complaints on the category such as promoting hate. When we put a blog which is already being aggregated on hold, we used to update the status message/send a mail to the blogger and wait for there response.

In case if we have done any mistake, mis-understanding or the blogger has a valid reason, we used to receive a reply from the blogger, and based on which we act immediately.

Meanwhile, we also refer the blog to our review team and collect there feedback and review. Unfortunately, we could not complete this section of review as we planned, due to the limitation of resources and the reasons we mentioned above.
Why your blog was included? Is your blog is OK from review?!

To be frank, we have not done any review on your blog yet, because we could not even find time to visit your blog. However, we were happen to see your explanation about your posts in another forum, and based on which we have just included you. We appreciate if possible, such concerns are shared with us or at least we are left with a note after the post! :-)

By the way, we are not sure whether you are aware that, NOT all of us know Tamil. :-)

Hence please be prepared for the delays in response at times! :-)

We thank you for your co-operation and understanding. Happy Blogging!

Regards,
- Team.

மேலே உள்ள emoticans உம் மடலில் வந்ததுவே.

2 responses so far


Video & Audio Comments are proudly powered by Riffly