இவற்றிற்கான களஞ்சியம் August, 2006

Aug 28 2006


CAPitalZ

தமிழ் ஒருங்குறி ?! -15

Filed under Tamil Unicode

இது தான் ஒருங்குறியில் உள்ள உலக மொழிகளின் அட்டவணை:
http://www.unicode.org/charts/

நன்றாகக் கவனிக்கவும்:

Armenian
Armenian Ligatures

Coptic
Coptic in Greek block

Cyrillic
Cyrillic Supplement

Georgian
Georgian Supplement

Greek
Greek Extended
Ancient Greek Numbers
Ancient Greek Musical

Basic Latin
Latin-1
Latin Extended A
Latin Extended B
Latin Extended C (5.0)
Latin Extended D (5.0)
Latin Extended Additional
Latin Ligatures
Fullwidth Latin Letters
Small Forms

இவ்வாறு பல தரப்பட்டுள்ளது. நமது தமிழுக்கும் இதைப் போல் ஒரு “Tamil
Supplement” என்று தற்போது தமிழ் ஒருங்குறியில் இல்லாத எழுத்துக்களை ஏற்ற
முயற்சிக்கலாம்.

ஒருங்குறி அட்டவணையைப் பாருங்கள். ஏறக்குறைய அதில் உள்ள எல்லா மொழிகளுக்கும்
“Supplement”, “Extended” என்ற எதோ ஒரு முறையில் தமது எல்லா எழுத்துக்களையும்
ஏற்றியிருக்கிறார்கள் அம் மொழி வல்லுனர்கள்.

ஏன் Latin எழுத்துக்களுக்கே எத்தனையோ “Extended” எழுத்துக்களை
ஏற்றியிருக்கிறார்கள். எத்தியோப்பியா “Supplement” என்றும் “Extended” என்றும்
ஏற்றியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல சீனா, கொறியா, மற்றும் ஜபான், ஆகியவை அவைகளது எழுத்துக்கள்
மிகவும் அதிகமான பட்சத்திலும் எல்லா எழுத்துக்களையும் ஏற்றி இருக்கிறார்கள்.
சில கோப்புகளைக் கவனிக்கவும். 13MB, 5MB, 2MB என்று எல்லாம் பெரிதாக
இருந்தாலும் எல்லா எழுத்துக்களையும் ஏற்றி இருக்கிறார்கள்.

ஃபிரஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் accent [அக்ஸன்ற்] என்று சொல்லும் குறியீடுகளுடன்
எழுத்துக்கள் இருக்கு. அவ் எழுத்துக்கள் எழுத்து வேறு “அக்ஸன்ற்” வேறு ஆகவும்
இருக்கிறது; தனி எழுத்தாகவும் இருக்கிறது. இவ்வாறு இரண்டு விதமாக அவர்கள்
ஏற்றியிருக்கிறார்கள், ஆனால் தமிழுக்கு மட்டும் அப்படியாயினும் எற்றவில்லை
இந்திய அரசு.

பாகம் – 16 >>

<< பாகம் – 14

_____
CAPital

5 responses so far

Aug 24 2006


CAPitalZ

கனடா + கியூபெக் [ஃபிரெஞ்சு மாகாணம்]

சகலருக்கும் சமத்துவம். எதிலும் நீங்கள் போட்டியிடலாம். சாதிப் பிரச்சனை இல்லை. எவரும் படிக்கலாம். உங்கள் திறனுக்கே இங்கு முக்கியத்துவம். நடுத்தர குடும்பம் (அ) தாழ்த்தப்பட்ட சாதிக்கு இவ்வளவு விகிதம் என்று எதுவும் கிடையாது.

ஒரு சாதி குறைந்த வெள்ளக்காரனுக்கும், சாதி கூடிய வெள்ளைக்கரனுக்கும் என்ற பிரச்சினை இல்லை. நிற வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தமிழர்களைப் போல் வெள்ளைக்காரனுக்குள்ளையே பிரித்துப் பார்பது இல்லை. கீழ்ச் சாதி மேல் சாதி எல்லாம் நமக்குளே தானே. “discrimination against designated groups, usually in the area of employment.” இது வந்து இங்கு பெண்கள், வலது குறைந்தோர், ஓரினச் சேர்க்கை புரி வோர் என்று வெள்ளையர்களிடம் பாகுபாடு செய்தல் என்பதற்காகத் தான். அதற்காகக் கூட, இத்தனை விகிதம், இந்த group ஐ சேர்ந்தோர் இங்கு இருத்தல் வேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது.

நீங்கள் சொல்வது போல், ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரன், விகிதாசாரப்படி பல்கலைக் கழகம் புகுந்து, படித்து ஒரு வைத்தியனாகவோ, (அ) அதற்கு மேலாகவோ வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனது சமூக அந்தஸ்து, உயர்ந்து விட்டது. ஆனால், அவனுடைய பிள்ளையை பாடசாலையில் சேர்க்கும் போதோ, வேலையில் சேர்க்கும் போதோ, எந்த சாதி என்ற கேள்வி விண்ணப்பப் படிவத்தில் இருந்தால், அவன் அந்த சாதியை விட்டு மீழ்வது எங்கனம்?

கனடா பாடசாலை விண்ணப்பப் படிவத்தில் எந்த சாதி என்று கேட்பதில்லை. ஒவ்வொருவரும் தத்தம் வழி. மற்றவன் பிரச்சினையில் மூக்கை நுளைக்கமாட்டார்கள். சந்தோசமாக வாழ வேண்டும் என்பதில் இங்கு எல்லோருக்கும் ஆவல். ஒரு நாளில், பாதி நேரத்தை சந்தோசமாக செலவழிப்பதிலேயே செலவிடுகிறார்கள். பணக்காரன் ஆவது அல்ல அவர்கள் குறிக்கோள்.

என்னைப் பொறுத்த வரையில், சாதி குறைந்தோருக்கு இவ்வளவு சதவிகிதம் என்று சொல்வதால், அரசாங்கமே அவர்களை சாதி குறைந்தோராக காட்டிக் கொடுக்கிறதே!

ஆனால் ஒன்று, வெள்ளையனிடம் தனி நபர் சுதந்திரம் முக்கியமாக கருதப்படுகிறது. நம் நாட்டவரில், சொந்தம், உற்றார், உறவினர் என்று ஒரு கூட்டு சுதந்திரமாக பார்க்கிறோம். நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.

சின்ன உ+ம்: சிறு பிள்ளையை வீதியால் கொண்டுபோகும்போது, நம்மவர்கள் பிள்ளையை கையில் பிடித்துக்கொண்டு பத்திரமாக அழைத்துச் செல்வார்கள். ஏன் அனேகமானவர்கள் தூக்கித் தான் செல்வார்கள். ஆனால் வெள்ளையர்கள், எவ்வளவு நேரமெடுத்தாலும், நடத்தியே செல்வார்கள். கையைக் கூடப் பிடிக்க மாட்டார்கள். மிகவும் சிறு பிள்ளை என்றால் விரலைக் கொடுப்பார்கள். அவர்கள் சொல்லும் விளக்கம் என்னவென்றால், சிறு வயதிலேயே அப் பிள்ளைக்கு தன் மீது நம்பிக்கை வர வேண்டுமாம். தன்னால் தனியாகவும் பாதுகாப்பாகவும் நடக்க இயலும் என்ற நம்பிக்கை வரவேண்டுமாம். இது தான் அவர்களின் தனி நபர் முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்கிறதென்று நம்புகின்றேன்.

கனடாவின் ஒரு மாகாணம் ஃபிரஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் மாகாணம். அந்த ஒரு மாகாணத்திற்காக, ஏனைய 9 மாகாணங்களும் [including economic power Ontario], 3 territories எல்லாம் ஃபிரஞ்சையும் அங்கீகரிக்க வைத்திருக்கிறது கியூபெக் மாகாணம். சும்மா பேச்சளவில், கொடுத்தேன் என்று இல்லாமல், கனடாவின் நடுவண் அரசாங்கத்தின் அனேகமான வேலைகளிற்கு ஃபிரஞ்சு மொழி அவசியம். அவர்கள் ஒரு பரீட்சை கூட வைப்பார்கள். இங்கே ஒரு பேச்சு அடிபடுகிறது. வருங்காலத்தில், கனடா அரசாங்கம் முழுக்க ஃபிரஞ்சு மக்களாலேயே ஆகிவிடும் என்று.

இது பத்தாதென்று அவர்கள் மேலும் பல சலுகைகள், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெற்றிருக்கிறார்கள். Media வில் அவர்கள் தங்கள் மாகாணத்தை ஒரு நாடாக கருதியே செய்திகள் வெளியிடுவார்கள். மற்றய நாடுகளுடன் தங்கள் மாகாணத்தையும் ஏதோ இன்னொரு நாடு போல் தான் ஒப்பீடு பண்ணுவார்கள். ஏன் ஃபிரஞ்சு புத்தகங்களில், மாகாணம் என்று இல்லாமல் தனி நாடென்றே எழுதப்பட்டிருக்கும். இதற்கெல்லாம், கனடா அரசாங்கம் சலுகைகள் கொடுத்திருக்கின்றது.

எந்த ஒரு பாராளுமன்ற முடிவு எடுக்கப்பட்டாலும் கியூபெக் இற்கு என்று ஒரு தனி சலுகையைப் பெற்று விடுவார்கள். அவர்கள் மாகாணத்தில் அங்காடிகள் என்று எல்லாம் ஃபிரஞ்சு மொழியில் பெரிதாகவும், ஏனைய மொழிகளில் [ஆங்கிலம் உட்பட], சிறிதாகவே இருக்க வேண்டும். பல்கலைக்கழகத்திலும் ஃபிரஞ்சு மொழி கட்டாயப் பாடம். பேரூந்து ஓட்டுனரிலிருந்து காவல்துறை மட்டும், நீங்கள் ஃபிரஞ்சு மொழியில் பேசினால் உங்களுக்கு சாதகமாக அவர்கள் நடப்பார்கள். 50 தொழிலாளிகளுக்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட அனைத்து வர்த்தக நிலையங்களிலும் அவர்களது கணினி பிரஞ்சு மொழியிலேயே இருத்தல் வேண்டும் என்பது இங்கத்தைய சட்டம்.

அவ்வளவு ஏன், அரச உதவி பெறும் வானொலிகளில் மூன்று பாடல்கள் ஒலிபரப்பினால், 2 பாடல்கள் ஃபிரஞ்சு மொழிலேயே இருத்தல் வேண்டும். கனடாவில் வைத்தியசாலைகள் தனியார் மயம் இல்லை. ஆனால், கியூபெக் இல் தற்போது சில சத்திர சிகிச்சைகள் தனியாரால் செய்யப்படக்கூடியவாறு வந்திருக்கிறது. மற்ற மாகாணங்களில் இவ்வாறு இல்லை. கனடாவில் இருப்பவர்கள் தங்கள் உற்றார் உறவினர்களை இங்கு வரவழைத்து தங்க வைக்க முடியும் [sponsor]. கியூபெக் மாகாண அரசும் ஒரு தேர்வு நடத்தி அதில் தெரிவுசெய்யப்பட்டவர் தான் பின் கனடா அரசாங்கத்தாலும் தெரிவுசெய்யப்படுவார். இப்படிப்பட்ட சலுகைகள் கியூபெக் மாகாணத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.

இப்படி கியூபெக்கிற்கு ஒரு விசேட சலுகை கொடுக்கப்படுதே என்று எந்த ஒரு எதிர்க்கட்சியும் போராட்டத்தில் இறங்கியது இல்லை. கியூபெக் மாகாணத்திற்கு அதிக சலுகை கொடுக்கப்படுகிறது; கனடாவில் அந்த மாகாணத்திற்கு மட்டும் இப்படி சலுகைகள் கொடுப்பது நியாயமில்லை என்று ஒரு வேற்றுமையை ஆங்கில மக்களிடையே உருவாக்கி வாக்குகளை கொள்ளை அடிக்கலாம் என்று எந்த ஆங்கில அரசியல்வாதியும் செய்ததில்லை. நாடு பிரியக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் அடக்குமுறையைக் கையாழாமல், தங்களை விட மேலதிக சலுகைகளைக் கொடுத்து அகிம்சையை உண்மையில் இன்றைய கால கட்டத்தில் கடைப்பிடிக்கிறார்ககள்.  ஆங்கில அரசியல்வாதிகள் அந்த சலுகைகளை ஒரு அத்தியாவசியம் என்றே பார்க்கிறார்கள். ஆங்கில மக்கள் இதுவரைக்கும் கியூபெக் இற்கு எதிராக கிளர்ந்தெழுந்தது இல்லை.

இவ்வளவு கொடுத்தும், அவர்கள் பத்தாது எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று இரு தடவை தேர்தல் வைத்து, அரும்பொட்டில் பிரியாமல் இருக்கிறார்கள். என்ன வியற்பாக இருக்கிறதா?

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடையம் என்னவென்றால் இது இவர்கள் நாடே இல்லை. கனடா, அமெரிக்கா எல்லாம் வெள்ளையனின் தேசமே இல்லை. வந்தேறு குடிகள், தங்கள் மொழியை பிரதான மொழியாக சட்டமேற்றியது. ஆதி வாசிகள், இன்றும் சமூக சீர்கேடுகளால் அழிந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இங்கே. ஆதி வாசிகளுக்கு சும்மா இருக்க பணம் கொடுக்கிறார்கள். அவர்கள் முன்னேறக்கூடாது என்று எண்ணியோ என்னவோ. இதே போல் தான் அமெரிக்காவிலும், ஸ்பானிய மொழி பேசுபவர்கள் இருந்தாலும் ஆங்கிலம் தான் அரச மொழி.

ஃபிரஞ்சு மொழிக்காரர் அவர்கள் மொழி மேல் கொண்ட பற்றளவு, தமிழருக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

_____
CAPital

One response so far

Aug 19 2006


CAPitalZ

புலியை எதிர்க்கும் இந்தியனுக்கு

  • பிரபாகரன் இந்தியாவிடம் சரணடைய வேண்டும்.
  • இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து தமிழர்களுக்கு சுதந்திரம் வாங்கித்
    தருவார்கள் [1].
  • தமிழ் மொழி அரச கரும மொழியாக நடைமுறையில் வர இந்தியா வாக்குறுதி கொடுக்கும்.
  • தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் சிங்களவர்களை விட அதிக புள்ளி எடுத்து
    பல்கலைக்கழகம் செல்லத் தேவையில்லை. இலங்கையில் எல்லோருக்கும் ஒரே புள்ளிதான்
    கணக்கிலெடுக்கப்படும் [4].
  • இவ்வளவு நாளும் இறந்த பொதுமக்களுக்கு தமிழர்கள் என்றும் பார்க்காமல் அரசு உதவி
    வழங்கும். இதற்கு இந்தியா வாக்குறுதி கொடுக்கும்.
  • புலிப் படையில் இருக்கும் அத்தனை போராளிகளுக்கும் இலங்கை அரசு பொது மன்னிப்பு
    வழங்க இந்திய அரசு வாக்குறுதி கொடுக்கும்.
  • இறந்த மாவீரர்களின் கல்லறைகள் இயந்திரங்கள் கொண்டு தரைமட்டமாக்காமல், [இலங்கை
    இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய உடன் செய்தது போல்], அவற்றை மதிக்கும் என
    இந்தியா வாக்குறுதி கொடுக்கும்.
  • தமிழர்களை காவல்துறையிலும், இராணுவத்திலும் பாரபட்சமின்றி சேர்க்கும்.
  • தமிழர்களின் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை புதிதாக நிறுவி, மேலும்
    சிங்களவர்களை அங்கு அரச உதவியுடன் குடியேற்றமாட்டார்கள் என இந்திய அரசு
    வாக்குறுதி கொடுக்கும் [2].
  • தமிழர்களின் பிரதேசங்களும் பாரபட்சமின்றி புனரமைக்கப்படும்.
  • இலங்கை அரசாங்கத்தில் இனத்திற்கு என்று தரப்படுத்தல் இன்றி ஜனநாய ரீதியாக
    தேர்வு செய்யப்படுபவர்கள் அத்தனை பேரும் சட்டசபையில் அமர முடியும் என்று
    இந்தியா வாக்குறுதி கொடுக்கும் [3].
  • இலங்கையின் தலைவராக ஒரு தமிழரும் வரலாம் என்று சட்ட மாற்றம் கொண்டுவர இந்தியா
    வாக்குறுதி கொடுக்கும்.
  • இலங்கைக் கொடியில் தமிழர்களை “ஏனையோர்” என்ற இலச்சினம் வழங்காமல் முழு
    இலங்கைக்கான ஒரு சமத்துவமான கொடியை உருவாக்கும் (அ) தமிழர்களுக்கு ஒரு இலச்சினை
    கொடியில் உருவாக்கப்படும் என்று இந்திய அரசு வாக்குறுதி வழங்கும்.

இவ்வளவும் வெறும் வாக்குறுதிகளாக மட்டும் இல்லாமல் முழுமையாக
நிறைவேற்றப்பட்டால், தமிழர்கள் மனிதர்களாக வாழ்வார்கள்.

இவைகள் நடக்கத் தவறினால், இலங்கை எதிரி, இந்தியா துரோகி.

பிரபாகரன் தமிழன். பிரபாகரன் மட்டும் தமிழன் அல்ல. சில கால
முரண்பாடுகளுக்குப் பின் மீண்டும் ஒரு பிரபாகரன் உதிப்பான். அவனுக்கு மக்களின்
நம்பிக்கையைப் பெற சில காலம் எடுக்கும். ஆனால், தமிழர்களுக்கு தீர்வு வரும்
மட்டும் ஏதோ ஒரு பிரபாகரன் உதிப்பான். அவன் வரலாற்றை உற்று நோக்கி முன்னவர்
விட்ட பிழையை விடாமல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வான் [Matrix].
எதிர்காலத்தில் கைக்கடக்கமான அணுகுண்டு உருவாகலாம்!

பிரபாகரனே சொல்லி இருக்கிறார் தான் இறந்தாலும் புலிகளை மற்றவர்கள் கொண்டு
நடத்துவார்கள். இந்திய இராணுவம் பிரபாகரனை கொன்று விட்டார்கள் என்று
அறிவித்து, பல காலமாக பிரபாகரன் பற்றிய எந்த செய்தியும் இல்லை. மக்கள் அவர்
இறந்து விட்டார் என்றே நம்பினார்கள். புலியில் இருக்கிறவர்களுக்கே தெரியாத
நிலை. பிரபாகரன் வளர்த்த புலிக்குட்டியை கொன்று செய்தி வெளியிட்டார்கள்.
அந்தச் சின்னக் குட்டி பாவம் என்று மனம் வருந்தியவர்களும் உண்டு. [இந்தியாவால்
முடியாததா என்ன? இந்தியா பெரிய இராணுவம்] ஆனால், அப்படி இருந்தும் புலிகள்
சரணடையவில்லை (அ) போராட்டத்தை கைவிடவில்லை.

அடுத்து வருபருக்கு மக்களின் நம்பிக்கையைப் பெற சிறிது காலம் எடுக்கும். பிறகு
மீண்டும் அதே நிலை தான்.

_____
CAPital

[1]
http://www.priu.gov.lk/Cons/1978Constituti…ter_20_Amd.html
157A. (2) No political party or other association or organization shall have as one of its aims or objects the establishment of a separate State within the territory of Sri Lanka.

So there is no way of democratically get the government to have an election whether Tamils want a seperate state or not!
[2]
http://www.priu.gov.lk/Cons/1978Constituti…ter_02_Amd.html
The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana…

[3]
http://www.priu.gov.lk/Cons/1978Constituti…_14_Amd.html#24
The Commissioner of Elections shall before issuing the aforesaid notice determine whether the number of members belonging to any community, ethnic or otherwise, elected to Parliament under Article 98 is commensurate with the national population ratio and request the Secretary of such recognized political party or group leader of such independent group in so nominating persons to be elected as Members of Parliament to ensure as far as practicable, that the representation of all communities is commensurate with its national population ratio.

For the purposes of this Article the number of votes polled at a General Election shall be deemed to be the number of votes actually counted and shall not include any votes rejected as void.

There is actually a huge procedure of how to determine this proportionality. Start reading from the section named “Proportional Representation”.

[4]
The uprisings in the North were also against elected governments because if you take the North and South, the bulk of the people were highly educated. In fact, until 1970 the bulk of the university entrants were from the North, then from the South. Mrs Bandaranaike’s Government, in 1971, introduced standardisation and the district quota system in order to enhance the opportunities for the vast majority from the not-so-developed areas to enter universities.
http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca200205/20020516terrorism.htm

“The [1972] constitution also sanctioned measures that discriminated against Tamil youth in university admissions. Tamil youth were particularly irked by the “standardization” policy that Bandaranaike’s government introduced in 1973. The policy made university admissions criteria lower for Sinhalese than for Tamils.”
http://www.country-data.com/cgi-bin/query/r-13157.html

One response so far

Aug 19 2006


CAPitalZ

வரலாறு மீண்டும் வரலாறாகுமா?

  • இலங்கை அரசாங்கம் சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு அடிகோலுகிறார்கள்.
  • இலங்கை அரசாங்கம் சிங்கள இராணுவ வீரர்களுக்கு வீரத்தைப் புகட்டுகிறது.
  • புத்த பிக்குகள் கூட போர் தேவை என்கிறார்கள்.
  • சகல போர்களிலும் இலங்கை அரசாங்கமே வெற்றி, புலிகளை துரத்தி அடித்துவிட்டோம் என்று அறிக்கைகள்.
  • புலிகளுடனான போரில் நம்பமுடியாத அளவிற்கு புலிகளைக் கொன்றுவிட்டோம் என்று அரசாங்கம் அறிவிக்கிறது.
  • தமிழ் நாட்டில் ஈழத்தமிழருக்கு சாதகமான கருத்துக்களும், ஆர்ப்பாட்டங்களும் அதிகரிக்கின்றன.
  • ஈழத்தமிழர் சார்பாக தமிழ்நாட்டிலிருந்து கண்டனங்கள் வரத்தொடங்கி இருக்கின்றன.
  • இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுத விற்பனையை குறைத்துள்ளது.
  • பாகிஸ்தானுடனான, இலங்கை அரசாங்கத்தின் தொடர்பு அதிகரிக்கிறது.
  • யாழ் குடாநாட்டுக்கான தரமார்க்க பாதை பல நாட்களாக மூடப்படுகிறது.
  • 5,00,000 யாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு வரலாமென்னும் செய்தி அறிக்கைகள்.

மீண்டும் இந்திய இராணுவம் தமிழீழம் வருமா?
புலிகள் இந்தியாவில் முக்கிய புள்ளியை கொல்வார்களா?
அடுத்த ஒருதலைப் பட்ச யுத்த நிறுத்தத்தை புலிகள் அறிவிப்பார்களா?

 

_____
CAPital

No responses yet

Aug 18 2006


CAPitalZ

கரும்புலித் தாக்குதல் தப்பா?

Filed under LTTE, War, War of Tamil Eelam

ஐயா… போர் என்று வந்தால், நியாயமான போர் அனியாயமான் போர் என்று இருக்கிறதா?

போரில் எதிரியை துவம்சம் செய்வதுதான் குறிக்கோள், அது எந்த வழியானாலும்.

புலிகள் மறைந்திருந்து தான் தாக்குகிறார்கள். இலங்கை இராணுவம் மட்டும் அந்தக் காலத்தில் போர் புரிவது போல் ஒர் அறிக்கை விட்டு, இந்த இடத்தில் தான் போர் நடக்கும் என்று தெரிவித்து, அந்த நேரத்திற்கு அங்கு சென்று, ஒழுங்கு வரிசையாக நின்று தலைவனின் கட்டளையின் பின் ஒவ்வொரு படையாக எதிரி நோக்கி சுட்டு, பின் அந்த படை நிற்க எதிரி படை சுட ஒரு நேரம் கொடுத்து, அவர்கள் சுடவும் ஓடி ஒழியாமல் அந்த இடத்திலேயே இருந்து சூடு வாங்கி இறக்க, எஞ்சி உள்ள படை திரும்பவும் தங்களை ஒழுங்குபடுத்தி வரிசையாக நின்று மீண்டும் எதிரி மீது தலைவனின் கட்டளையின் பின் சுட்டு… இப்படி மாறி மாறி நடக்குமானால் போரில் நியாயம், அனியாயம் பற்றிக் கதைக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் எந்த இராணுவமும் இப்படி செய்வது இல்லை. தற்கொலைத் தாக்குதல் நியாயமில்லை என்று சொல்பவர்கள் எந்தப் போரிலாவது நியாயமாக போரிட்டுள்ளார்களா?

அன்று அம்பும் வில்லும் வைத்து சண்டை பிடித்த ஆதிவாசிகளை துப்பாக்கி வைத்து ஒழிந்திருந்து கொல்லவில்லையா? அப்படி எத்தனை பேரரசுகள் எத்தனை இறையாண்மை உள்ள நாடுகளை ஆக்கிரமித்து ஆண்டாண்டு காலம் ஆண்டிருக்கின்றன? அன்று கோழைத்தனம் என்று சொல்லப்பட்டது இன்று வீரத்தனம் என்று மெச்சப்படுகிறது. இன்று இராணுவம் இப்படி சண்டைபிடிக்கிறது; எதிர்காலத்தில் கெரில்லா தாக்குதல் தான் போர்.

எதிரி வெறும் கைத்துப்பாக்கி தான் வைத்திருக்கிறான், நானோ இயந்திரத் துப்பாக்கி வைத்திருக்கிறேன். அதனால், அவனை நான் கொல்வது நீதியாகாது என்று எந்த இராணுவமாவது விட்டிருக்கிறதா? எதிரி வெறும் இராணுவ வாகனத்தில் நிற்கிறான், நான் பீரங்கி பொருத்திய வாகனத்தில் நிற்கிறேன் அதனால் அவனை கொல்வது நியாயமில்லை என்று எந்த இராணுவமாவது விட்டிருக்கிறதா? எதிரி தரையில் துப்பாக்கியுடன் நிற்கிறான் நானோ ஆகாயத்தில் மிகவும் பாதுகாப்பாக உலங்கு வானூர்தியிலோ (helicopter) (அ) போர் விமானத்திலோ நிற்கிறேன்; அதனால், அவனை கொல்வது அநீதியாகும் என்று எந்த இராணுவமாவது விட்டிருக்கிறதா? அப்படி விட்டால் தான் எதிரி விடுவானா? ஆகவே கொல்ல எடுக்கும் ஆயுதம் ஒரு காரணியாக எந்த இராணுவத்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை எடுத்துக்கொள்ளப்படவில்லை.

கெரில்லா தாக்குதல் ஒன்றை மட்டும் உணர்த்துகிறது. எதிர் காலத்தில் எந்த நாடும் எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமித்து ஆளமுடியாது. இதை உணர்ந்தால் எந்த ஒரு அரசும் வேறோர் பிரதேசத்திற்கு ஆயுதங்களுடன் இராணுவம் அனுப்பாது.

சரி ஆயுதங்கள் எதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன? ஒரு உயிரை தூர இருந்து [பாதுகாப்பாக] மிக துல்லியமாக, மிக வேகமாக, மிக சேதம் கொடுக்கவல்லனவாக இருக்கவே. அப்படியாயின் இந்த ஆயுதம் நன்று அந்த ஆயுதம் இல்லை என்று சொல்ல முடியாது. எல்லா ஆயுதமும் உயிரை எடுக்கவே அன்றி உயிரை சிறைப்பிடிக்க அல்ல.

கொல்ல என்று வந்த பின் எதனால் கொன்றால் என்ன? துப்பாக்கியால் என்னோர் உயிரைக் கொல்வது நியாயம்; கைக்குண்டை எறிந்து உயிர்களைக் கொல்வது நியாயம்; உலங்கு வானூர்தியில் பாதுகாப்பாக மேலிருந்து கீழ் நோக்கி சுட்டுக் கொல்வது நியாயம்; விமானத்தில் பாதுகாப்பாக வந்து குண்டு போட்டு அந்த குண்டு வெடித்த சத்தம் கேட்கமுன்னரே அந்த இடத்தை விட்டு போவது நியாயம்; அணுகுண்டு போட்டு ஒரு பரந்த பிரதேசமே நாசமாக்குவது நியாயம். ஆகவே ஓர் உயிரைக் கொல்ல மற்றோர் உயிர் காரணமாக இருக்கிறது. இதையே ஓர் உயிர் மற்றய உயிரைக் கொன்றால் [தற்கொலை தாக்குதல்] தப்பா?

உலக நாடுகள் ஏன் ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்? எங்கே உலக நாடுகள் எல்லாம் இனி ஆயுதங்களை ஒழிப்போம் என்று தங்களிடம் இருக்கும் ஆயுதங்களை இல்லாதொழிக்கட்டும்.

“தலைக்கு மேல் வெள்ளம் வந்தால் பிறகு, சாண் என்ன முழம் என்ன”
கொல்ல என்று முடிவெடுத்தாற் பின் ஆயுதத்தால் கொன்றால் என்ன தற்கொலையால் கொன்றால் என்ன.

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லலாம், போர் விமானத்திலிருந்து குண்டு போட்டுக் கொல்லலாம், ஆனால் தற்கொலைதாரியாக குண்டை வெடிக்கவைத்தால் நியாயம் இல்லை எனலாமா? துப்பாக்கியால் சுடுவது ஏதோ எதிரியை மட்டும் தான் சுடுகிறான் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், எறிகணைகளை வீசிக் கொல்வதும் உலங்கு வானூர்தியில் பறந்து சுட்டுக் கொல்வதும், போர் விமானத்தில் இருந்து பாரமான குண்டைப்போட்டு கொல்வதும் எதிரியை மட்டும் தான் என்று சொல்ல முடியாது. “நியாயமான” இராணுவம் என்ன சொல்கிறது? எதிரிகள் அந்த கோவிலிலிருந்து, பாடசாலையிலிருந்து, (அ) கட்டிடத்திலிருந்து தாக்கினார்கள். அவர்களை கொல்லவே அந்த கட்டிடத்தில் நாங்கள் பாரிய குண்டைப் போட்டு ஒட்டு மொத்த கட்டிடத்தையும் நாசம் செய்தோம். அதே கட்டிடத்தில் இருந்த அப்பாவி மக்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. எதிரியைக் கொல்லவேண்டும் என்பது தான் நோக்கம்; அது எவ்வாறான விலையைக் கொடுத்தாவது. சில பொதுமக்கள் இறந்தாலும் எதிரி கொல்லப்படவேண்டும். இதைத்தானே “நியாயமான” இராணுவம் செய்கிறது. உண்மையைச் சொன்னால், எந்த இராணுவமும் எறிகணை, பீரங்கி, உலங்கு வானூர்தி, போர் விமானம் போன்றவற்றை கொல்வதற்கு பயன்படுத்தக்கூடாது. ஆனால், அதையெல்லாம் செய்யும் இந்த “நியாயமான” இராணுவம் தற்கொலை குண்டை “அநியாகம்” என்று சாடுகிறார்கள்.

இராணுவத்தில் சேரும்போதே மரணிக்க துணிந்துவிட்டான் என்று தானே பொருள். இன்னுமோர் உயிரைக் கொல்லும் முயற்சியில் உன் உயிரும் எடுக்கப்படலாம். அதையே இன்னுமோர் உயிரைக் கொல்லும் முயற்சியில் நிச்சயமாக உன் உயிரும் போகும் என்று தெரிந்து துணிவது விபரிக்க முடியாத துணிவு.

பலர் மொழிக்காக, மதத்திற்காக, நாட்டுக்காக தீக்குளிக்கவில்லையா. அவர்களையெல்லாம் இழிவாக பேசுவது நியாயமாகுமா?

தாய் தன் பிள்ளைக்காக உயிர் துறக்கலாம், தந்தை பிள்ளைக்காக உயிர் துறக்கலாம்; ஆனால், என்னுயிர் கொடுத்து உன் உயிர் காப்பேன் என்று எந்த சொந்த பந்தமும் அற்றவர்கள் விலைமதிப்பற்ற தங்கள் உயிர்களை தியாகம் செய்வது மிகவும் மதிப்பிற்குரியதேயன்றி, கண்டனத்துக்கிரியதல்ல.

ஆண்டாண்டாக போரில் வீரர்களின் சேர்க்கை மாறி இருக்கிறது; போர்நெறி மாறி இருக்கிறது; ஆயுதத் தெரிவு மாறியிருக்கிறது. கல்லோடு போரிட்டவன், பின் அம்பும் வில்லும் கொண்டவன், வெறும் துப்பாக்கியால் சுடப்பழகியவன், இன்று மிக சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் போருடும் இந்த போரின் பரிணாம வளர்ச்சியில் கரும்புலிகளும் ஓர் அம்சமே.

“மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்க துணிவது தெய்வீகத் துறவறம். அந்த தெய்வீக பிறவிகள் தான் கரும்புலிகள்.” – மேதகு வே. பிரபாகரன்

_____
CAPital

3 responses so far

Aug 16 2006


CAPitalZ

Roundabout vs சமிஞ்சை சந்திப்பு

Roundabout

===நன்மை===

  • ஒரு குறிப்பிட்ட நேரம் என்று வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படாமை. வாகன போக்குவரத்து தடைபடாமல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கும்.

  • தேவையற்ற காத்திருப்பு இருக்காது.

  • சமிஞ்சை சந்திப்பில் போல் அதிகமாக வாகனம் இல்லாத நேரங்களிலும் கூட குறித்த சமிஞ்சை மாறும்மட்டும் காத்திருக்க வேண்டிய நிலையில்லாமை.

  • சமிஞ்சை சந்திப்பில் நடக்கும் விபத்தால் ஏற்படும் தடங்கல் அளவே இங்கும் ஏற்படும்.

===தீமை===

  • சமிஞ்சை சந்திபை கட்ட தேவையான இட வசதியை விட இதைக் கட்டுவதற்கு சற்று கூடிய இடவசதி வேண்டும்.

  • Roundabout இற்குள் நுழைய எத்தணிக்கும் வாகனங்களை விட உள்ளே இருக்கும் வாகங்களுக்கு முதலுரிமை கொடுக்கப்படுகிறது. இதனால், ஒரு திசை நோக்கி அதிக வாகனங்கள் வருமானால் மற்றய வாகனங்கள் உள் நுழைய தங்களின் சந்தர்ப்பம் வரும் என்று காத்துக்கொண்டிருப்பது முடிவற்றதாகிவிடக்கூடிய அபாயம் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை ஆங்கிலத்தில் “starvation” என்று சொல்வார்கள். தங்களது சந்தர்ப்பம் வரும் என்று காத்திருப்பதே முடிவாகிவிடும்.

சமிஞ்சை சந்திப்பு

===நன்மை===

  • சமிஞ்சைகள் இருப்பதால் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வாகன போக்குவரத்தை உருவாக்கலாம். அதாவது, வெகு தொலைவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது என்றால், இங்கே அந்த திசைக்கு போகத் தேவையான சமிஞ்சையை நேரம் கூட்டி வாகனங்களைத் தாமதப்படுத்தலாம்.

  • நான்கு (4) வீதிகள் சந்திக்கும், சமிஞ்சை சந்திப்பில் எல்லோரும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட உபயோகம் பெறுவார்கள். அதாவது, ஒருவருக்கும் சந்தியைக் கடக்க முடியாமல் போகும் சந்தர்ப்பம் நிகழாது.

===தீமை===

  • தேவையற்ற வாகன நெரிசல் ஏற்படலாம்.

  • ஒரு திசையில் அதிக வாகனங்கள் வந்துகொண்டிருக்குமானால், அந்த திசையில் தேவையான சமிஞ்சை மாறுவதற்கு காத்துக்கொண்டிருப்பதால் வகன நெரிசல் ஏற்படலாம். மற்றய திசையில் வாகனங்கள் இல்லாதிருப்பினும் சமிஞ்சை அந்தத் திசைக்கும் வீணே உபயோகப்படுத்தப்படும்.

  • சமிஞ்சை சந்திப்பில் சமிஞ்சைகளில் கோளாறு ஏற்பட்டாலோ (அ) மின்சாரம் தடைப்பட்டாலோ அந்த சமிஞ்சை சந்திப்பை வழிநடத்துவதற்கு ஒரு காவல்துறை அதிகாரி பிரசன்னமாக வேண்டியிருக்கும் (அ) வாகன போக்குவரத்து மிகவும் மந்தமான நிலையில் நடைபெறும்.

  • சமிஞ்சை சந்திப்பில் கோளாறு ஏற்பட்டால் அதை சரி பார்க்க ஒரு வல்லுனரின் உதவி தேவைப்படும். இதனால் வல்லுனருக்கு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டு அவர் அதை திருத்தும் வரைக்கும் வாகன போக்குவரத்து மந்தமாக காணப்படும். இதனால் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும்.

_____
CAPital

One response so far

Aug 15 2006


CAPitalZ

இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா?

Filed under Religion, War

இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா?

இஸ்ரேல் வேண்டுமென்று லெபனானை தாக்கவில்லை. ஃகெஸ்புல்லா இரண்டு இஸ்ரேல் வீரர்களை கடத்தியது பத்தாதென்று ஏவுகணைகளையும் தொடர்ந்து [நாளுக்கு 100] விட்டுக்கொண்டிருந்ததாலேயே இஸ்ரேல் தாக்கியது. சரி ஃகெஸ்புல்லா செய்தது பிழை என்று லெபனான் அரசாங்கம் கண்டித்து அந்த கடத்தப்பட்ட இராணுவ வீரர்களை விடுவிக்கவும் எந்த முயற்சியும் செய்யவில்லை.

இவ்வளவு தவறு ஃகெஸ்புல்லாவில் இருக்கும்போது கூட சகல முஸ்லிம் நாடுகளும், இஸ்ரேல் மேல் கோபக்கனல் வீசுகிறதென்றால் அதற்கு இஸ்லாம் தான் காரணம் என்றால் மிகையாகாது. ஃகெஸ்புல்லா அமைப்பு ஒரு இஸ்லாம் அமைப்பதென்பதற்காக முஸ்லிம்கள் இவ்வாறு நியாயம் தவறுதல் நியாயமா?

என்னைப் பொறுத்த வரையில், இஸ்ரேல் செய்வது சரியே.

முன்பும் இவ்வாறு ஃகெஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவ வீரர்களைக் கடத்தி பணயம் வைத்து வேறு தீவிரவாதிகளுக்காக பண்டமாற்றம் செய்தது. அந்த ருசியில் தான் இப்போதும் செய்ய எத்தணிக்கிறார்கள். இப்படியே போனால், இன்னும் ஓர் முறை ஃகெஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவ வீரர்களைக் கடத்தி பண்டமாற்று கேட்கும்.

இயேசு நாதர் உண்மையென்றால், இஸ்ரேல் யூதர்களின் தாயகமாக அங்கீகரிக்க வேண்டும் தானே? அயலில் உள்ளவர்கள் இஸ்ரேலை ஒரு நாடு என்று அங்கீகரிக்க மாட்டோம், உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேல் அழிக்கப்படவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி பிரச்சினை தீரும்?

என்னைப் பொறுத்த வரையில் யூத மதத்தவர்கள் தான் மிகவும் பாவப்பட்டவர்கள். அந்தப் பெரும் பிரதேசத்தில் யூத மதத்தவர்கள் தானே முதலில் இருந்தார்கள். பின் தோன்றிய கிறிஸ்தவ மதத்தவர்களும், முஸ்லிம் மதத்தவர்களும் யூதர்களை கொன்றொழித்து தமது மதத்தை முற்று முழுதாக பரப்பி இப்போ முஸ்லிம்களின் இராச்சியமாக விழங்குகிறது. சவூதி அரேபியாவில் உள்ள ஒரு யூத நகரத்தை நோக்கி இஸ்லாத்தின் படை வருது என்று குரானில் கூறப்பட்டிருக்கிறது. இப்போ பேச்சுக்குக் கூட யூத மதத்தவர்கள் அரபு நாடுகளில் இல்லை. அன்று இஸ்லாம் மதத்தவர்கள் செய்த பாவத்தினால் தான் இன்று இஸ்ரேல் அந்த இடத்தில் இருந்து சுற்றியிருக்கும் இஸ்லாம் ஆக்கப்பட்ட நாடுகளுக்கு உவத்திரமாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அவர்களை வெறுத்து கொன்றுகுவித்தார்கள். ஜேர்மன், ரஷ்யா என்று பலம் பொருந்திய அத்தனை பேரும் கொன்று குவித்தார்கள். இப்போது முஸ்லிம்களும் கொல்ல வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

உண்மையில் யூத மதத்தவர்கள் தான் ஒடுக்கப்பட்ட மதத்தவர்கள்!

“PROPHET, MAKE WAR ON THE UNBELIEVERS AND THE HYPOCRITES AND DEAL
RIGOROUSLY WITH THEM. HELL SHALL BE THEIR HOME.”

QUR’AN 9:73

“MAKE READY TO SLAUGHTER HIS SONS FOR THE GUILT OF THEIR FATHERS;
LEST THEY RISE AND POSSESS THE EARTH, AND FILL THE BREADTH OF THE
WORLD WITH TYRANTS”

ISAIAH 14:21

“FIGHT FOR THE SAKE OF GOD THOSE THAT FIGHT AGAINST YOU! SLAY THEM
WHEREVER YOU FIND THEM. DRIVE THEM OUT OF THE PLACES FROM WHICH
THEY DROVE YOU.”

QUR’AN 2:190-3

“IF YOUR OWN FULL BROTHER, OR YOUR SON OR DAUGHTER, OR BELOVED
WIFE, OR INTIMATE FRIEND, ENTICES YOU SECRETLY TO SERVE OTHER GODS,
WHOM YOU AND YOUR FATHERS HAVE NOT KNOWN, GODS OF ANY OTHER
NATIONS, NEAR AT HAND OR FAR AWAY, FROM ONE END OF THE EARTH TO
THE OTHER: DO NOT YIELD TO HIM OR LISTEN TO HIM, NOR LOOK WITH PITY
UPON HIM, TO SPARE OR SHIELD HIM, BUT KILL HIM. YOUR HAND SHALL BE
THE FIRST RAISED TO SLAY HIM; THE REST OF THE PEOPLE SHALL JOIN IN
WITH YOU. YOU SHALL STONE HIM TO DEATH, BECAUSE HE SOUGHT TO LEAD
ASTRAY FROM THE LORD, YOUR GOD, WHO BROUGHT YOU OUT OF THE LAND
OF EGYPT, THE PLACE OF SLAVERY: AND ALL ISRAEL, HEARING OF THIS
SHALL, FEAR AND NEVER DO SUCH EVIL IN YOUR MIDST.”

DEUTERONOMY 13: 7-12

 

இஸ்லாமிய நம்பிக்கைகளின் படி முஸ்லிம் அல்லாதவர்களுடன் போரிட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களுக்கு சொர்க்கத்தில் கன்னிப் பெண்கள் தரப்படுவார்களல்லவா?

திருக்குரான் 56:54, 56:20
=========

“WE HUMANS CAN LIVE QUITE WELL WITHOUT RECOURSE TO RELIGIOUS FAITH.
RELIGION I TAKE TO BE CONCERNED WITH FAITH IN THE CLAIMS TO SALVATION
OF ONE FAITH TRADITION OR ANOTHER. SPIRITUALITY I TAKE TO BE
CONCERNED THOSE QUALITIES OF THE HUMAN SPIRIT-SUCH AS LOVE AND
COMPASSION,PATIENCE, TOLERANCE, FORGIVENESS, CONTENTMENT, A SENSE
OF RESPONSIBILITY, A SENSE OF HARMONY-WHICH BRING HAPPINESS TO
BOTH SELF AND OTHERS. THERE IS NO REASON WHY AN INDIVIDUAL CANNOT
DEVELOP THESE QUALITIES, EVEN TO A HIGHER DEGREE, WITHOUT RECOURSE
TO ANY RELIGION. THIS IS WHY I SOMETIMES SAY THAT RELIGION IS
SOMETHING WE CAN PERHAPS DO WITHOUT. WHAT WE CANNOT DO WITHOUT
ARE THESE BASIC SPIRITUAL QUALITIES.”

“THIS MAY SEEM AN UNUSUAL STATEMENT, COMING AS THEY DO FROM A
RELIGIOUS FIGURE. I AM, HOWEVER, TIBETAN BEFORE I AM DALAI LAMA, AND I
AM HUMAN BEFORE I AM TIBETAN. SO WHILE AS DALAI LAMA I HAVE A
SPECIAL RESPONSIBILITY TO TIBETANS, AND AS A MONK I HAVE A SPECIAL
RESPONSIBILITY TOWARD FURTHERING INTER RELIGIOUS HARMONY, AS A
HUMAN BEING I HAVE A MUCH LARGER RESPONSIBILITY TOWARD THE WHOLE
HUMAN FAMILY-WHICH INDEED WE ALL HAVE.

- DALAI LAMA

_____
CAPital

One response so far

Aug 09 2006


CAPitalZ

தேன்கூடு – ஏன் என்னை தடைசெய்தாய்?

தேன்கூடு
தமிழ் வலைப்பதிவுகளின் இணையம்

இது ஒரு தமிழ் வலைப்பதிவுகள் திரட்டி. இங்கே எனது வலைப்பதிவையும், சிறிது நாட்களுக்கு முன் தான் சேர்த்திருந்தேன். எனக்கு இப்படி தேன்கூடு என்னும் வலைப்பதிவுகளைத் திரட்டும் தளம் இருப்பதே தெரிந்திருக்கவில்லை. தமிழ்மணம் – தமிழ் வலைப்பதிவுகளின் (blog) பட்டியல் என்பது மட்டும் தான் அறிந்திருந்தேன். இதைவிட வலைப்பதிவு ஒன்றை இவ்வளவு இலகுவாக உருவாக்கலாம் என்று கூட எனக்கு அண்மைக்காலம் வரை தெரிந்திருக்கவில்லை. கூகிள் முத்தமிழ் குழுமத்தில் தான் நண்பர்கள் எனக்கு இதை அறிமுகப்படுத்தினார்கள். தேன்கூடு – தமிழ் வலைப்பதிவுகளின் இணையம் – இதில் எனது வலைப்பதிவை திடீரென்று அவர்களது பட்டியலிலிருந்து அகற்றிவிட்டார்கள்.

நான் தொடங்கிய முதல் வலைப்பதிவு “ஒரு பார்வை” அனைத்து விடயங்களைப் பற்றி எனது கருத்துக்களைத் தெரிவிக்கும் வலைப்பதிவாக அமைத்தேன். அதனோடு எனது கணினி சம்பந்தமான துணுக்குகளையும் இடுவதுண்டு.

தமிழ்மணம் தளத்தில் எனது வலைப்பதிவை இணைத்த பின்பும் எனது இடுகைகள் அவர்களது வலைத்தளத்தில் தெரியவில்லை. காரணம், எனது வலைப்பதிவு WordPress.com என்னும் இயங்கு தளத்தில் இருக்கிறது. தமிழ்மணம் தளத்தில் எனது வலைப்பதிவின் இடுகைகள், மற்றும் பின்னூட்டங்கள் தெரிய அவர்கள் வழங்கும் “‘பதிவு’ கருவிப்பட்டை” ஐ எனது வலைப்பதிவில் நிறுவ வேண்டும். WordPress.com இயங்கு தளம் எந்த ஒரு JavaScript (அ) template modification இற்கும் உரிமை அளிக்காத தளம். இதனால், தமிழ்மணம் தளத்தில் எனது வலைப்பதிவு சேர்க்கப்பட்டிருந்தாலும் அதன் முழு உபயோகத்தைப் பெறமுடியவில்லை.

இதற்காக blogspot.com இயங்கு தளத்திற்கு மாற்றலாம் என்று கூட சிந்திக்க அரம்ப்பித்தேன். எனக்கு “WordPress” என்னும் பெயர் எனது கருத்தை வெளி உலகுக்கு கொணரும் பெயராக பொருந்தி இருப்பதால், எனக்கு அதை விடவும் விருப்பமில்லாமல் இருந்தது. அதைவிட வேறொரு விடையத்தையும் கவனித்தேன். தேடு தளங்களில் [search engines] சில பொதுவான சொற்களைத் தேடும்போது கூட எனது வலைப்பதிவுகள் முதல் பக்கத்திலேயே காணக்கண்டேன். அந்த சொற்கள் வேறு தளங்களில் மூல கருத்தாக இருந்தும் கூட எனது தளம் முதலில் வருவது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தன. இதற்காக எனது தளத்தில் மேலதிகமாக நான் எதையும் நிறுவியது கிடையாது. அப்படியானால், WordPress.com இதற்கான வேலையை செவ்வனே செய்கிறது. இதனால், WordPress.com ஐ விட்டு பிரியாமல் நின்றுவிட்டேன்.

அடுத்ததாக தேன்கூடு தளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே எனது வலைப்பதிவை சேர்க்க வேண்டுகோள் விடுத்தேன். அடுத்த 24 மணி நேரத்திற்குள் இணைத்துவிட்டார்கள். இங்கே எனது புதிய இடுகைகள், நான் எதையும் நிறுவாமல் (அ) சேர்த்துக்கொள்ளாமல், தானாகவே தெரிந்தன. எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அதன்பின் நான் எழுதும் ஒவ்வொரு புதிய இடுகைகளும் தேன்கூடு தளத்தில் மலர்ந்தன. இப்படியான ஒரு இடுகை தான் இப்போது எனது வலைப்பதிவு அகற்றப்படுவதற்கும் காரணமாயிற்று.

நான் 2006/08/01 அன்று எழுதிய இடுகை “இந்தியாவின் புலி – 01“. இந்தியாவின் வெளிவிவகார செயற்பாடுகளும் புலிகளும் சம்பந்தமாக எழுதினேன். இதை பார்த்த தேன்கூடு தள ஆளுநர்கள் எனது தளத்தை அவர்களது பட்டியலிலிருந்து அகற்றி விட்டார்கள். எனக்கு இது தெரியவர நான் 2006/08/04 அன்று அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.

May I ask why have you deferred my blog?
ttp://1paarvai.wordpress.com/

அன்றே எனக்கு மறுமொழி வந்தது.

We will get back to you regarding this soon.

________,
Thenkoodu Portal Support.

அதன் பின் பல தடவைகள் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன். எந்த காரணம் சொல்லியும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

நான் எழுதியது எந்த இனத் துவேசமாகவோ, (அ) மதத் துவேசமாகவோ இல்லை. பல மதத் துவேச வலைப்பதிவுகள் தேன்கூடு தளத்தில் இன்னும் புதிய இடுகைகளாக வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒரு ஈழத்தமிழனாக எனது மனக்குமுறலை எழுதியிருந்தேன். முஸ்லிம் – இந்து துவேசம் எழுத தடையில்லை; இஸ்ரேல் – ஃகெஸ்புல்லா பற்றி எழுத தடையில்லை; இந்தியா – பாகிஸ்தான் பற்றி எழுத தடையில்லை; புலி எதிர்ப்பு வலைத்தளங்கள் அனுமதிக்கபடுகின்றன. ஆனால் இந்தியா – புலி பற்றி எழுத தடையா? புலிகள் பற்றிய இடுகைகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால், புலிகளும் இந்தியாவும் பற்றி எழுத மட்டுமே தடைபோல் தெரிகிறது.

எனது கணிப்பில், கீழே உள்ள வரிகள் தான் எனது வலைப்பூ அகற்றப்பட்டமைக்கு காரணம் என்று தோன்றுகிறது.

“புலிகள் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு மூல காரணமே இந்தியா தான்! நாங்கள் வளர்த்த புலிகள் எது சொன்னாலும் தலையை ஆட்டுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு புலிகளின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயுத ஒப்படைப்பின் பின் போராளிகளுக்கு பொது மன்னிப்புத் தரப்படும் என்று சொன்ன இந்தியா புலி வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாயிருந்தது. [இது பற்றிய எனது இடுகை: ராஜீவ் காந்தியின் கொலை தப்பா?]“

உண்மை என்று மறைக்க முற்படுகிறார்களோ? நான் வேறோர் இடுகையில் எழுதியது சரி என்று இது நிதர்சனமாக்குகிறது.

இந்தியா தமிழனுக்கு உண்மையில் ஆதரவு அளிக்கவில்லை துரோகம் தான் செய்தது. ஆனால், இந்த விசயம் இந்தியர்களுக்கு எட்டாத வண்ணம் இந்திய அரசாங்கமும், பார்ப்பனர்களே அதிகமாக இருப்பதால் [அண்மையில் வெளியான புள்ளி விபரம் சொல்கிறது] எல்லா செய்தி ஊடகங்களும் செய்துவிட்டன.

சரி ஏதோ தேன்கூடு தளத்தில் கோளாறு போல் இருக்கும், ஏன் சும்மா அலட்டிக்கொள்கிறீர்கள் என்று சொல்கிறீர்களா? அப்படி ஒரு மறுமொழி வரும் என்று தான் இவ்வளவு நாளும் காத்திருந்தேன். ஆனால், தேன்கூடு தளம் எனது வீட்டிலிருந்து பார்க்கமுடியாத வண்ணம் செய்துவிட்டார்கள். எனது IP Address ஐ தடை செய்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். இதன் பின் தான் இந்த தேன்கூடு தளம் பற்றிய இடுகை.

பாகம் 02 >>

நாதி அற்ற தமிழர் நாம்

_____
CAPital

சேர்க்கப்பட்டது I [GMT 2006/08/14 @ 10:22]

Dated: 2006/08/13 @ 11:04 [GMT-5]

Dear Blogger,

Thank you for choosing us. As per the rules of Thenkoodu.com – Tamil Blogs Portal,

We do not allow sites that feature adult content (nudity included), promote gambling, promote illegal activities, promote hate, feature warez, and/or are not blogs. We will also reject blogs intended to do nothing more than garner traffic for another site. This is to keep the directory and aggregator both useful and also to cut down on spam.

Especially promoting hate is our primary concern. We do not allow blogs that are written primarily against anything. (including anti islamic, anti hindu and anti anything for that matter.).

Sorry to say, Your blog has been kept on hold for further evaluation.

Our team will make a visit and take our best efforts to monitor and evaluate your blog, for inclusion in Thenkoodu.com – Tamil Blogs Portal soon. However,if you feel by any chance if there is mis-understanding in our part, please do let us know. This will fasten the process. We also, appreciate your support on understanding our requirements.

Regards,
Thenkoodu Portal Support.

அப்படியே எனது மின்னஞ்சலில் வந்ததை மேலே கொடுத்துள்ளேன். மேலே தடிமனாக்கப்பட்ட சொற்கள் யாவும் நான் தேர்ந்தெடுத்து ஆக்கப்பட்டவை அல்ல.

========================================================

புதிய பதிவுகளின் திரட்டி ஒன்றை ஆரம்பிக்க நீங்களும் உதவ விரும்பினால் கீழ்க்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

pathivu-subscribe@yahoogroups.com

யாகூ குழும இணைய முகவரி

http://groups.yahoo.com/group/pathivu/

_____
CAPital

22 responses so far

Aug 04 2006


CAPitalZ

இந்தியாவின் புலி – 2

Filed under India, LTTE, War of Tamil Eelam

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. அமெரிக்காவின் அயல்நாட்டு உறவுகள் போல் இல்லாமல் இந்தியாவிற்கு அயல்நாடுகள் அத்தனையும் பகைமை நாடுகளாக இருக்கின்றன. பாகிஸ்தானுடன் போர் நடந்து இப்போது தான் சற்று தொடர்புகள் தொடங்கியிருக்கின்றன, சீனாவுடனும் போர் நடந்தது. மூன்று நாடுகளுக்குமிடையேயான தரைமார்க்க வழிகள், அண்மைக்காலம் வரை மூடிக்கிடந்தன. பூட்டான், நேபால் நாடுகளுடன் கூட சுமூகமான தொடர்பில்லை. இந்தியாவின் வடக்கில் அப்படி என்றால் தெற்கில் தமிழீழத்துடன் போர். இந்தியாவின் அயலவர்களில் பலம் மிக்க நாடுகளுடன் பகைமை, தமிழீழத்தைத் தவிர்த்து. அப்படிப் பார்த்தால் தமிழீழமும் ஏதோ ஒரு விதத்தில் பலம் மிக்க நாடு என்று கொள்ளலாம்.

இந்தியாவின் வெளிவிவகார செயற்பாடுகள் மிகவும் தவறானதாகவே காணக்கிடக்கிறது. அயலவர்களைக் கெடுத்து தாம் முன்னேற வேண்டும் என்பது போல் தான் இந்திய அரசியலாளர்களின் சிந்தனை இருந்திருக்க வேண்டும். வரலாறு சொல்கிறது இந்தியா ஒரு அகண்ட பாரதமாக முன்பொருகாலத்தில் இருந்திருக்கிறது. ஒரு காலத்தில் மிகவும் வளம் மிக்க, பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடாக இருக்கவே கொலம்பஸ் இந்தியாவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டார். அமெரிக்காவில், இந்தியா என்று நினைத்துத் தான், தரையிறங்கினார். இந்தியா தான் இலக்கு என்று இந்தியாவை தேடி ஒரு கடற்பயணம் மேற்கொள்ளுமளவிற்கு இந்தியா பெரிதாக இருந்திருக்க வேண்டும்; இன்றைய காலத்தில் ஈழ அகதிகள் மேற்கத்தேய நாடுகளுக்கு பல சிரமங்களுக்கும், உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் செல்வதுபோல்.

இப்போது ஐரோப்பிய ஒன்றியம் போல் இந்தியாவும் ஒரு “இந்திய ஒன்றியம்” என்று உருவாக்கியிருக்க வேண்டிய தேசம். அன்றைய அகண்ட பாரதம் இன்று மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கும். பிராந்திய வல்லரசான இந்தியா இதை முன்னெடுத்துச் சென்றால், மற்றய நாடுகள் தானாக வந்து இணைந்திருக்கும், இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதுபோல். ரூபா அகண்ட பாரதத்தின் புழக்கப் பணமாக இருக்குமானால் நாம் எல்லோருக்கும் தானே பெருமையாக இருந்திருக்கும். மாறாக அயல் தேசங்களுடன் வஞ்சம் வளர்த்திருக்கிறது. இது நம் இரத்தத்திலேயே ஊறிப்போன விடயம் தான். அடுத்த வீட்டுக்காரனின் விடயங்களில் மூக்கை நுளைத்து அவனை கெடுத்து அதில் சந்தோசப்படும் பேர்வளிகள் அதிகமாக இருக்கும் இனம் தானே நாம். மேலத்தேய நாட்டவர்களில் இது மட்டும் இல்லை. அவர்கள் தாங்கள் எவ்வாறு முன்னேறலாம் என்று வழி சமைப்பவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள்.

இந்தியா பிராந்திய வல்லரசு என்று பெரிதாக செய்தி ஊடகங்கள் வெளியிட்டாலும், உள்நாட்டிலேயே பல முன்னேற்றமின்மை காணப்படுகிறது. கலாச்சார, சமூக, மனித நேய, வேலைவாய்ப்பு மற்றும் பல பிரிவுகளில் இந்தியா இன்னும் பின் தங்கித் தான் இருக்கிறது. இவற்றிற்கு ஒரு காரணம் அயல் நாடுகளின் தொடர்பின்மையே. இன்னும் பல கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தான் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் இந்தியா ஆயுத வளர்ச்சியில் மற்றய நாடுகளுக்கு சளைத்தது அல்ல என்று நிரூபித்திருக்கிறது.

இந்தியா அணு ஆயுதம் செய்கிறது என்றவுடன் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மூலம் பொருளாதாரத் தடை விதித்தது. இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தக்கள் மற்றய நாடுகள் செய்ய தடை. எந்தவித வணிக தொடர்புகளும் நிறுத்தப்பட்டன. பண உதவி வழங்க என்று இருந்த உலக நாடுகள் நிறுத்திக் கொண்டன. இதனாலேயே நடிகர் கமல்காஸனின் படமான “மருதநாயகம்” இற்கு பிரித்தானியாவின் ராணியின் உதவிப் பணம் கிடைப்பதாக இருந்ததும் நிறுத்தப்பட்டது. இவ்வளவு நெருக்கடிகளுக்கும் அசராமல் இந்தியா அணு ஆயுதத்தை செய்து முடித்தது. இந்தியா சொன்னது நாங்கள் ஐந்து (5) அணு குண்டுகளுக்கு மேல் செய்ய மாட்டோம். இங்கே புலிகளுக்கு உலக நாடுகளின் தடையை ஒப்புநோக்கினால், புலிகளும் நாங்கள் சுதந்திரம் பெற்ற பின் வன்முறையைக் கைவிடுகிறோம் என்று சொல்கிறார்கள்.

அன்று இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்த அமெரிக்கா இன்று இந்தியாவுடன் அணுவிசை ஆராய்ச்சியில் பங்காளியாக ஒப்பந்தம் செய்திருக்கிறது. இத் திட்டத்திற்காக தேவையான உபகரணங்களையும் தொழில்நுட்பத்தையும் அமெரிக்கா அளிக்க முன்வந்துள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இந்தியா அணு ஆயுத பரவல் தடை உடன்பாட்டில் இன்றுவரை கையொப்பமிடவில்லை. அகதிகளின் மறுவாழ்வுக்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்கிற ஐநாவின் 1967 ஆண்டின் ஒப்பந்தத்திலும் இந்தியா கையொப்பமிடவில்லை.

இவ்வளவு இருந்தும் ஏன் அமெரிக்கா இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்கிறது? அன்று அமெரிக்கா அடக்க முயன்றது, முடியவில்லை என்றவுடன், அணைக்கிறது. பலசாலி எதிரியாக இருப்பதை விட நண்பனாக இருப்பதே மேல் என்ற நோக்கில்.

விடுதலைப் புலிகளுடன் போர் செய்து பின் சிங்கள அரசுக்கு பக்கபலமாக இன்றுவரைக்கும் இருந்துகொண்டிருக்கும் இந்தியாவை மீறி இன்று விடுதலைப் புலிகள் பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள். தூர தேசம் என்றாலும் பரவாயில்லை. அயல்நாடாக இருந்து இந்திய கடற்படையையும் மீறி இன்று புலிகள் வளர்ந்திருப்பதென்பது ஒரு பிரமிப்பூட்டும் விடயம்.

இப்படிப்பட்ட வளர்ச்சிக்கு வெறும் போராளிகள் மட்டும் காரணமல்ல என்பதை இந்தியா புரிந்துகொண்ட மாதிரி தெரியவில்லை. இன்னும் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று சிந்திப்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள் [1]். ஒற்றையாட்சிக்குக் கீழ் தான் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு என்று நினைப்பது அபத்தமாகவே படுகிறது. அன்று புலிகளின் பலத்தை சரியாக எடைபோடாமல் விட்ட அனுபவம் ஏற்கனவே தெரிந்திருந்தும் மீண்டும் பிழையை விட எத்தணிக்கிறதா என்று புரியவில்லை [2].

அண்மையில் நோர்வேயில் புலிகளால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒரு தமிழீழ சுயாட்சி அறிக்கைக்கு ஒத்ததானதாகவே இருப்பதை கவனிக்க வேண்டும். வெகு விரைவில் தனித் தமிழீழம் கோரப்படலாம். அப்போது உலக நாடுகளின் நிலை எவ்வாறு அமையும்? வருங்கால தமிழீழத்தின் தொடர்புகள் எவ்வாறு அமையும்? முக்கியமாக இந்தியா தமிழீழத்தை அங்கீகரிக்குமா (அ) எதிர்க்குமா? போன்ற கேள்விகளுக்கு உங்களைப் போல் எனக்கும் விடை காண ஆவல் தான்.

வல்லரசான அமெரிக்காவிற்கு உள்ள மூளை வல்லரசாக எத்தணிக்கும் இந்தியாவிற்கு இருக்கிறதா என்பதை வருங்காலம் தான் காட்டவேண்டும்.

[1]
“People of Tamil Nadu have deep sympathy and solidarity for the Sri Lankan Tamils. But they have clearly understood the LTTE. They will never equate the LTTE with the Tamil people,” says Mr Ram, Editor, The Hindu

http://news.bbc.co.uk/2/hi/south_asia/5126230.stm

[2]
“We were aware of the LTTE’s domination over other militant organisations, but we were not aware of their innovative tactics, resourcefulness, tremendous mass support and, most importantly, their excellent intelligence network.”

“We will have Prabhakaran in our custody within 72 hours.”

http://www.rediff.com/news/2000/mar/23lanka.htm

“I had specifically asked [then army chief Krishnaswamy) Sunderji in the presence of Rajiv Gandhi, suppose you face a situation where you have to fight the LTTE, what will you do? He said, no, it will take a fortnight to take care of them." - [J N Dixit, India's high commissioner to Sri Lanka]

http://www.rediff.com/news/2000/mar/24lanka.htm

<< பாகம் – 01

_____
CAPital

3 responses so far

Aug 02 2006


CAPitalZ

புலி பற்றிய தமிழ் நாட்டுத் தமிழர் நிலைப்பாடு

இது ஒரு மிகவும் சிக்கலான விடயம்.

இந்தியா தமிழனுக்கு உண்மையில் ஆதரவு அளிக்கவில்லை துரோகம் தான் செய்தது. ஆனால், இந்த விசயம் இந்தியர்களுக்கு எட்டாத வண்ணம் இந்திய அரசாங்கமும், பார்ப்பனர்களே அதிகமாக இருப்பதால் [அண்மையில் வெளியான புள்ளி விபரம் சொல்கிறது] எல்லா செய்தி ஊடகங்களும் செய்துவிட்டன.

இதனால், ஈழத்தமிழர்கள் இந்தியா துரோகம் செய்துவிட்டது என்று சொன்னால் தமிழ் நாட்டுத் தமிழர்கள் நாங்கள் ஏதோ வேண்டுமென்று இந்தியா மீது பழி போடுவதாக எண்ணுகிறார்கள். எங்களுக்கு ஈழத்தின் மேல் உள்ள பாசம் போல் அவர்களுக்கு இந்தியா மேல்.

தமிழ் நாட்டு தமிழனையையும் கோபிக்கக் கூடாது இந்தியாவையும் நண்பனாக நம்பக் கூடாது. இது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல் இருக்கிறது.

இதற்காக தமிழ் நாட்டு தமிழனுடன் தர்க்கம் செய்து அவர்கள் மனதை புண்படுத்தினால், அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்கும். இந்தியா அயலவரான தமிழீழத்தைப் பகைத்துக்கொண்டது போல் தமிழீழம் அயலவரான தமிழ் நாட்டை எக்காலத்திலும் பகைத்துக் கொள்ளக் கூடாது.

தலைவர் சிங்களவர்களையே எதிரியாக நினைக்காமல் சிங்கள அரசை மட்டுமே குற்றம் சொல்கையில் நாங்கள் பிற மக்களை எதிரியாக ஒருபோதும் நினைக்கக் கூடாது. இது நாள் வரைக்கும் சிங்கள பொது மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. ஃகெஸ்புல்லா யூதர்களை அழிக்கவேண்டும் என்று இலக்கே இல்லாமல் இஸ்ரேல் நாட்டிற்குள் ஏவுகணைகளை விட்டுக்கொண்டிருக்கிறது. சிங்களவர்கள் எங்கள் வருங்கால அயலவர்கள்; அதே போல் தமிழ் நாட்டு தமிழர்களும் வருங்கால அயலவர்கள்.

ஒரு சிலர் எப்போதும் புலிகளை குற்றம் சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். சோ போன்ற பார்பனர்களுக்கு வேறு என்ன வேலை. தமிழீழத்திலேயே புலிகளுக்கு எதிராக வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள் தானே. அதற்காக மக்கள் புலிகளை எதிர்க்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை தானே. சிலரின் அவதூற்று வேலைகளால் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அனைவரையும் நாம் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது நன்றன்று.

இந்திய மக்கள் முழுவதையும் புரிந்து கொள்ள வைப்பதென்பதையும் காட்டிலும், தமிழ் நாட்டு மக்களை புரிந்துகொள்ள வைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் எங்கள் தாய்நாடு, அயல்நாடு. வெறும் வாய்ச்சண்டை மனஸ்தாபத்தில் முடியும். பல உண்மைச் சம்பவங்கள், செய்திகள், ஆதரபூர்வமான கட்டுரைகள் என்பனவற்றை அவர்களுக்கு எடுத்துச் செல்வது எங்கள் எல்லோருடைய கடமையாகும்.

கீழே இதோ ஒரு தமிழ் நாட்டுத் தமிழனின் ஈழத்தின் பால் கொண்ட உணர்வு.

======

ஈழத்தை பற்றிய
கம்யூனிச சிந்தனாவாதியான தோழர் தியாகுவின் கட்டுரை ஒன்றை இங்கு தருகிறேன் -

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை, சேலம், மதுரையில் நடத்திய ஈழத்
தமிழர்கள் பாதுகாப்பு மாநாடுகளில் தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தோழர் தியாகு
பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரைகளிலிருந்து.

இப்போது ஈழத்திலே நடக்கும் பேச்சு வார்த்தைக்கான சூழலை உருவாக்கியதே
விடுதலைப்புலிகள் தான்.

நாங்கள் அமைதிக்காக நிற்கிறோம். நாங்கள் போர் வெறியர்கள் அல்ல. நாங்கள்
ஆயுதங்களை காதலிக்கிறவர்கள் அல்ல என்று இந்த உலகத்திற்கு மெய்ப்பிக்கிற
விதத்திலே அவர்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள். பேசுகிறாயா பேசத் தயார்.
அந்த பேச்சு வார்த்தையிலே நீ என்ன தீர்வைச் சொல்லப் போகிறாய் சொல் என்றார்கள்.
கடந்த காலத்திலே தந்தை செல்வா சிங்கள ஆட்சிகளோடு பேசினார். கடந்த காலத்திலே
தமிழர் அய்க்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்கள் பேசினார்கள். அந்த
பேச்சுகளுக்கும் பிரபாகரன் அறிவித்த பேச்சுகளுக்கும் ஒரு பெரும் வேறுபாடு
இருக்கிறது. தந்தை செல்வா அவர்களுக்கும் பேச்சு வார்த்தை நடத்திய
தலைவர்களுக்கும் அரசியல் வலிமையும் அறவழி வலிமையும் இருந்தது.

அவர்களிடம் ஆயுத வலிமையும், படை வலிமையும் இல்லை. ஆனால் தம்பி பிரபாகரன் தன்
தேசத்திற்கென்று ஒரு படையும் வைத்துக் கொண்டு இராணுவ வலிமையோடு கரங்களில்
உறுதியான ஆயுதத்தோடு பேச்சு வார்த்தைக்குப் போனார். பாலஸ்தீனப் பிரச்சினைக்காக
ஓஸ்லோவிலே பேச்சு வார்த்தை நடந்தது. பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் பேசுவதற்குப்
போனார். இப்போது விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு ஜெனிவாவிலே பேச்சு
நடத்துகிறது. இதுகூட இராஜேபக்சேவிற்கு வெற்றி தான் என்று ‘இந்து’ ஏடு எழுதி
தன்னுடைய அரிப்பை தீர்த்துக் கொள்கிறது. என்ன சொன்னார் ராஜபக்சே? ஆசிய
நாட்டுக்குள்ளேதான் பேசுவோம் என்றார். இப்போது நடக்கும் பேச்சுவார்த்தை
அய்ரோப்பிய நாடுகளால் கவனிக்கப்படுகிறது. உலகம் கவனிக்கிற பிரச்சனையாக
இருக்கிறது.

ஜப்பானிலிருந்து போகிறார் தூதுவர்; கொழும்புவிலிருந்து கிளி நொச்சிக்கு
போகிறார். கிளி நொச்சிக்குப் போய் அங்கே அரசுக்குரிய மரியாதையோடு பிரபாகரனை
சந்தித்துப் பேசுகிறார். இதெல்லாம் அவர்களுக்கு வருத்தம், சங்கடம்.
ஓசுலோவிலேயிருந்து நார்வே தூதர் எரிசோல்கைம் நாடு விட்டு நாடு கண்டம் விட்டு
கண்டம் தாண்டி வருகிறார். கிளி நொச்சியிலே இருக்கிற தலைவரைப் போய்
பார்ப்பதற்காக! கிளிநொச்சியிலே ஒரு செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது. உலகத்து
பத்திரிகை யாளர்கள் எல்லாம் வருகிறார்கள். உள்ளூர் பத்திரிகையாளர்களையே
சந்திப்பதற்கு துணிச்சல் இல்லாத தலைவனும், தலைவியும் இங்கே வயிறு எரிகிறார்கள்.

அய்யோ பிரபாகரனுக்கு இவ்வளவு கூட்டமா என்று! அப்படி ஒரு செல்வாக்கோடு பெருமித
நிலை யிலே இருந்து கொண்டு பிரபாகரன் பேசினார். அதே போல்தான் ஜெனிவாவிலும்
இப்போது பேச்சு வார்த்தை நடக்கிறது. எந்த இடம்? சுவிட்சர் லாந்தினுடைய
தலைநகரம். சுவிட்சர்லாந்தினுடைய தேசியக் கொடி என்ன தெரியுமா? செஞ்சிலுவை
சங்கத்தினுடையது.

உலகத்தில் அமைதிக்கு மறு பெயரான அரசு ஒன்று உண்டு என்றால் அது சுவிட்சர்லாந்து
தான். முதல் உலகப் போர் இரண்டாம் உலகப் போர் நடந்தன. அய்ரோப்பிய வல்லரசுகள் இரு
குழுக்களாக பிரிந்து மோதின. இந்த இரண்டு போரிலும் ஈடுபடாத ஒரே அய்ரோப்பிய நாடு
சுவிட்சர்லாந்து. இங்கே இந்தியைத் திணிக்கிற போது நாம் சொல்லுகிறோம். தமிழையும்
ஆட்சி மொழியாக்கு என்கிறோம். ஒரே நாட்டில் எத்தனை மொழிகளை ஆட்சி மொழிகளாக்க
முடியும் என்று கேட்கிறார்கள். நாம் சொல்லுகிறோம் – சுவிட்சர்லாந்தைப் பார்.
அந்த நாட் டிலே மூன்று மொழி பேசுகிறார்கள்.

மூன்று மொழிகளையும் ஆட்சி மொழிகளாக வைத்திருக்கிறார்கள். அதனால் மூன்று இனங்கள்
சேர்ந்து வாழ் கின்றன. இலங்கையிலே, ஒரு காலத்தில் கொல்வின் டிசில்வா சொன்னார்.
இரண்டு மொழிகளையும் அங்கீகரிக்கிறேன் என்று இரண்டு மொழிகளையும் அங்கீகரித்து
சமத்து வம் கொடுத்தார்.

அப்போது தான் இரண்டு மொழிகள் ஒரு நாடு என்ற நிலை வரும். இல்லை, இல்லை சிங்களம்
மட்டும் தான் ஆட்சி மொழி என்றால், ஒரு மொழி இரண்டு நாடுகள் என்று பிரிந்து
போகும் என்று அவரே சொன்னார்.

அய்க்கிய நாடுகளுடைய தலைமையகத்தை நியுயார்க்கிலே அமைத்தார்கள். இரண்டாம் உலகப்
போருக்கு பிறகு, அமெரிக்க வல்லரசுக்கு இருந்த வலிமையை கருதி அங்கே
உருவாக்கினார்கள். ஆனால், அய்.நா.வின் இரண்டாவது தலைமையகத்தை அய்ரோப்பாவிலே
உருவாக்க வேண்டும் என்று கருத்து வந்தபோது ஜெனிவாவிலே தான் உருவாக்கினார்கள்.
பாலஸ்தீன விடுதலை அமைப்பினுடைய தலைவர் யாசர் அராபத் பாலஸ்தீன தேசிய விடுதலை
அமைப்பினுடைய தலைவராக இருக்கிற போது தான் கோருகிற தாயகத்தினுடைய ஒரு சதுர
அங்குல நிலத்தைக்கூட தன் கையிலே வைத்திருக்காத போது உலகம், அந்த அமைப்பை
அங்கீகரித்தது.

அவரை ஓர் அரசு தலைவராகக் கொண்டாடியது. அவரை அய்க்கிய நாடுகள் அவைக்கே
அழைத்தார்கள். வாருங்கள் அராபத் இங்கே வந்து பொதுச் சபையிலே உரையாற்றுங்கள்
என்று கேட்டார்கள். அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை. என்ன செய்தார்கள்
தெரியுமா? நியுயார்க்கில் அய்.நா. கட்டிடம் இருக்கும் அந்த வளாகம் ஒரு தனி
நாட்டுக்குரிய அதிகாரம் கொண்டது. ஆனால், அந்த கட்டிடத்திற்குள் நுழைய வேண்டும்
என்றால், அமெரிக்க இறையாண்மைக்குட்பட்ட நியூயார்க் வழியாகத்தான் செல்ல
வேண்டும்.

எனவே, அமெரிக்கா யாசர் அராபத் திற்கு விசா கொடுக்க மறுத்தது. அமெரிக்கா அவரை
அய்.நா.விலே பேச விடக் கூடாது என்பதற்காக, “சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம்
நின்று விடுமா?” அய்.நா.அராபத்துக்காக நியூயார்க்கை விட்டு ஜெனிவாவுக்கு
வந்தது. ஜெனிவா வில் அய்.நா.வின் பொதுப் பேரவை கூடியது. யாசர் அராபத் அங்கே
வந்து முழங்கினார். ஜெனிவாவிலே நின்று பேசினார். இராணுவ சீருடையிலே வந்தார்.
அவர் எப்போதும் இடுப்புக் கச்சையிலே ஒருகைத் துப்பாக்கியை வைத்திருப்பார்.

அவர் சொன்னார்: நான் இந்த உலகப் பேரவையின் முன் நிற்கிறேன். ஒரு கையிலே அமைதியை
குறிக்கிற ஆலிவ் இலைகளோடு வந்திருக்கிறேன். இன்னொரு கையிலே போருக்குரிய
துப்பாக்கியோடு வந்திருக்கிறேன்; எது வேண்டும்? இஸ்ரேலே சொல்! துப்பாக்கியா?
ஆலிவ் இலையா? அமைதி வேண்டும் என்றால் அமைதி; போர் வேண்டும் என்றால் போர் என்று
அவர் முழங்கினார். அந்த ஜெனிவாவிலே தான் இப்போது புலிகள் பேசுகிறார்கள். இது
என்ன தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையா, எங்கே வேண்டும் என்றாலும் உட்கார்ந்து
பேசு வதற்கு? ஒரு தேசத்துக்கும், இன்னொரு தேசத்துக்குமான உரையாடல்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது தெரியுமா? ஜெனிவா! விடுதலைப் புலிகள் சிங்கள அரசு
பிரதிநிதிகளோடு பேசுகிறார்கள். உலகம் ஒத்துக் கொண்டிருக்கிற நார்வே அரசுனுடைய
அனுசரணையோடு பேசுகிறார்கள் என்றால், இந்த உலகம் தமிழீழப் புலிகளை அவர்களுடைய
போராட்டத்தை அங்கீகரிக்கிறது என்று பொருள். இங்கிருக்கிற ஒன்றையணா,
மூன்றையணாக்கள் அங்கீகரிக்காவிட்டால் நமக்குக் கவலையில்லை. (கைதட்டல்) உலகம்
அங்கீகரிக்கிறது. நீ அங்கீகரிக்காவிட்டால் எங்களுக்கு என்ன கவலை? விடுதலைப்
புலி களுடைய அரசியல் ஆலோசகர், முதுபெரும் அரசியல் அறிஞர், வரலாற்று அறிஞர்,
தத்துவ அறிஞர் பாலசிங்கம் நலிந்த உடல்நிலையோடு அந்தக் குழுவிற்கு தலைமை ஏற்றுச்
செல்கிறார்.

இந்த தமிழ்நாட்டில், அவருக்கு மருத்துவமனையிலே சிகிச்சை அளித்தால்கூட இங்கே நில
அதிர்ச்சி வந்துவிடும் என்றார்கள். விட மாட்டோம் என்கிறார்கள். அந்த பால
சிங்கம் தான் ஜெனிவாவில் புலி களின் குழுவுக்குத் தலைவர். புலிகளின் அரசியல்
பிரிவு தலைவரும், நாள் தோறும் உலக பத்திரிகையாளர்களை கிளிநொச்சியில்
சந்தித்துக் கொண்டிருக்கிறவருமான சுப. தமிழ்ச் செல்வன் ஜெனிவா போகிறார்.
ஈழத்திலே புலிகளின் காவல்துறை படையின் தலைவராக இருக்கும் நடேசன் பேச்சு
வார்தைக்கு ஜெனிவாவுக்குப் போனார். நடேசன் வருகிறார் என்றவுடன் சிங்கள அரசு
என்ன செய்தது தெரியுமா?

அவர்கள் போலீஸ் படை தளபதியை அனுப்புவதால் நாமும் போலீஸ் படை தளபதியை
அனுப்புவோம் என்றார். புலிகளுக்கு கிடைக்கிற மரியாதை நமக்கு கொஞ்சம்
கிடைக்கட்டுமே என்று ராஜபக்சே துடிக்கிறார். பேச்சு வார்த்தை நடத்துவதற்கே
சிங்கள தீவிரவாத கட்சிகள் தடையாக உள்ளன. ராஜபக்சேயுடன் கூட்டணி வைத்த கட்சிகள்
அவை. ‘ஆகா பேச்சா என்ன சொல்லி நாங்கள் ஆதரவு அளித்தோம். எப்படி நீங்கள் வாக்கு
கேட்க வந்தீர்கள்?’ என்று கொதித்தார்கள். வாக்கு கேட்க வந்தவர்களை வாக்கு
கேட்டு முடிந்த பிறகு யாராவது நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்களா?
ராஜபக்சேவுக்கும் அது நினைவில்லை. ஆனால், சிங்கள தீவிரவாதிகள் நினைவு
படுத்தினார்கள்.

நினைவு படுத்தியதற்கு பிறகு ராஜபக்சே சொன்னார், “நீங்கள் ஒன்றும்
கவலைப்படாதீர்கள். இந்த உலகம் பேசச் சொல்கிறது. நார்வே தூதர் வந்து விட்டார்.
ஜெனிவாவிலே பேசுவதற்கு பிரபாகரனும் ஒப்புக் கொண்டு விட்டார். எனவே பேசித்தான்
ஆக வேண்டும், எதையாவது பேசுவோம்” என்றார். அதாவது பேச்சு வார்த்தைக்காகவே
பேசுவது. அதில் ஒரு போதும் எந்த புரட்சியாளனுக்கும் இணக்கம் இருக்காது.
அண்மையில் “தீக்கதிர்” ஏட்டில் ஈழத் தமிழின சிக்கல் குறித்து ஒரு கட்டுரை வந்து
இருக்கிறது. அந்த கட்டுரையிலே வரலாற்றைத் தொகுப்பாக எழுதி விட்டு, கடைசியில்
தமிழினச் சிக்கலுக்கு என்ன தீர்வு தெரியுமா? அமைதி வழியில் சமாதான தீர்வு
வேண்டும் என்று விரும்புகிறோம் என்று முடித்திருந்தார்கள். இந்த “தீபாவளி”
போனசிலேயே உங்களாலே சமாதான தீர்வு ஏற்படுத்த முடியவில்லை.

ஒரு இனத்தின் தேச விடுதலையில் சமாதான தீர்வு அமைதி வழியில் எப்படி நடக்கும்?
(கைதட்டல்)

ஜெனிவா பேச்சு வார்த்தையில் நடந்தது என்ன?

இலங்கையில் ஏற்பட்ட ஆழிப் பேரலை துயரத்தில் 75 சதவீத துயரம் தமிழர்களைச்
சார்ந்தது. அன்றைக்குக் கூட “இந்து”வின் கவனம் எதிலே இருந்தது தெரியுமா?
“இந்து” கட்டம் கட்டி செய்தி போட்டது. ஆழிப் பேரலை செய்திகள் ஒரு பக்கம்.
கட்டம் கட்டிப் போட்ட செய்தி என்ன தெரியுமா? ‘பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?’
என்று செய்தி போட்டது! இதோ இந்த பிரபாகரனை இந்திய படையினர் வெல்ல முடியவில்லை.
சிங்கள படையினால் வெல்ல முடியவில்லை. சிங்கள சூழ்ச்சி, பார்ப்பன சூழ்ச்சி,
அமெரிக்க சூழ்ச்சி எதற்கும் இவனை ஒன்றும் செய்ய முடியவில்லை? ஆழிப் பேரலை
விபத்திலாவது செத்துப் போக மாட்டானா என்ற ஆசையை “இந்து” ஆதங்கத்தோடு எழுதியது.

பிரபாகரன் சொன்னார் பன்னாட்டு உதவி அமைப்புகள் போடுகிற நிபந்தனைகளில் ஏற்க
முடியாதவை எல்லாம் இருக்கின்றன. இருந்தாலும் இப்போது அதைப்பற்றி கவலை இல்லை.
உடனடியாக எம் மக்களுக்கு உதவி கிடைக்க வேண்டும். எனவே பாதிக்கப் பட்ட
மக்களுக்கு உதவும் சுனாமி கட்டமைப்பை உருவாக்குவோம் என்றார். பல காலம்
இழுத்தடித்து கட்டமைப்பை உருவாக்கினார்கள். கடைசியில் அந்த கட்டமைப்பை
எதிர்த்து சிங்களர்கள் நீதி மன்றத்திற்குப் போய் அதை செயல்பட விடாமல்
செய்தார்கள். இந்த நிலையில்தான் ஜெனிவா பேச்சு நடந்திருக்கிறது.

பேச்சு வார்த்தையில் இலங்கை குழுவினருக்கு தலைவர் யார் தெரியுமா? ஒரு பெரிய
வழக்கறிஞர் பேச்சு வார்த்தையிலே போய் உட்கார்ந்த உடனே பாலசிங்கம் கேட்கிறார்.
யாரப்பா இவர்? முன் வரிசையிலே உட்கார்ந்து இருக்கிறார்? கடற்படை தளபதியோ
பின்னாலே அமர்ந்திருக்கிறார். அந்தக் குழுவுக்குள்ளேயே போட்டி! யார் முன்னால்
உட்காருவது என்று. சரி இருக்கட்டும் இவர் முன்னாலே உட்கார்ந்து இருக்கிறார்.
இவர் யார் என்று கேட்டால், சட்ட அறிஞர் என்கிறார்கள். அவர் தனது சட்ட அறிவை
எப்படி பயன்படுத்தினார் தெரியுமா? நான்கு ஆண்டுகளாக நடை முறைப்படுத்தப்பட்டு
வருகிற போர் நிறுத்தத்தை, இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மானது என்று
எழுதியவர் தான், பேசியவர் தான் இந்த சட்ட அறிஞர்.

அவர் எழுந்து பேச ஆரம்பித்த உடனே என்ன சொன்னார் தெரியுமா? உங்கள் மீது
வழக்குகள் இருக்கிறது. யார் மீது? புலிகள் மீது. என்ன வழக்கு? யாழ்ப் பாண
துரையப்பாவை நீங்கள் கொலை செய்து விட்டீர்கள் என்றார். உடனே பாலசிங்கம்
சொன்னார், “அய்யா ஒன்றை தெரிந்துக் கொள்ளுங்கள். நான் ஒரு புத்தகம்
எழுதியிருக்கிறேன். அந்த புத்தகத்திலேயே துரையப்பாவை நாங்கள் தான் கொன்றோம்
என்று எழுதியிருக்கிறேன். ஒரு துரையப்பாவை அல்ல

உங்கள் ஆட்கள் 40 ஆயிரம் பேர் உயிரை நாங்கள் எடுத்திருக்கிறோம். அதுவல்ல இன்று
பிரச்சினை. போர் நிறுத்தம் பற்றி பேசு என்று பாலசிங்கம் சொன்னார். அங்கே ஒரு
அம்மையார் முஸ்லீம்களுடைய பிரதிநிதியாக இலங்கை அரசு குழுவிலே போனார்.
முஸ்லீம்களும் தமிழர்கள் தான். இலங்கையில் மூன்று இனங்கள் இருக்கிறது என்று
பிரித்தாளும் சூழ்ச்சியை சிங்கள அரசு அரங்கேற்றி வருகிறது. சிங்களர், தமிழர்,
முஸ்லீம் என்று பிரிக்கிறார்கள். அஸ்ரத் என்ற அந்த அம்மையார் எழுந்து
சொல்லுகிறார் குழந்தைகளை எல்லாம் புலிகள் படைகளில் சேர்த்திருக்கிறார்கள். இது
வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். உடனே தமிழ்ச் செல்வன் சொன்னார், குழந்தைகள்
கூட படையினில் சேர வேண்டிய சூழ்நிலைகளை யார் ஏற்படுத்தியது எண்ணிப்பார்?” என்று
கேட்டார்.

விஜயரத்னே என்ற பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இருந்தார். அந்த பாதுகாப்பு
அமைச்சர் சொன்னார், ‘புலிகள் சிறுவர்கள். இந்த சிறுவர்கள் சிங்களப் படைகளை
பார்த்ததும் சிறுநீர் கழித்து விடுவார்கள்’ என்று சொன்னார். அதற்குப் புலிப்
படையிலே இருந்து ஒரு சிறுவன் பதில் சொன்னான். ‘ஆமாம், நான் சிறுவன் தான், ஆனால்
என் தாயை நேசிப்பதற்கு எவரும் எனக்கு சொல்லித்தரத் தேவையில்லை. நான் சிறுவனாக
இருப்பதே போதும்’ என்று அவன் பதில் சொன்னான்.

பாலஸ்தீன போராட்டத்தில் இஸ்ரேலுடைய டாங்கிகள், பீரங்கிகளை எதிர்த்து, மேற்கு
கரையிலும் காசா பகுதியிலும் கல்லெடுத்து அடித்த பாலஸ்தீன சிறுவர்களை தெரியுமா
உங்களுக்கு? உலகத்தில் நடந்த முதல் பாட்டாளி வர்க்க புரட்சி 1870 பாரீஸ்
கம்யூன் புரட்சி அதுபற்றி லெனின் எழுதுகிறார்.

“இந்த பாரீங் கம்யூன் புரட்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது அவர்கள் வீட்டு
பெண்களும், குழந்தைகளும் தெருவுக்கு வந்து இராணுவத் தோடு போரிட்டார்கள்” என்று
பெருமையோடு எழுதுகிறார். ஈழத்தில் நடப்பது தேசிய விடுதலை போராட்டம். தேர்தலில்
ஓட்டு போடுவது அல்ல, வயது பார்ப்பதற்கு! இது விரல் மேல் ‘மை’ குத்திக் கொள்கிற
போராட்டம் அல்ல; நெற்றியிலே ரத்தத் திலகமிடும் போராட்டம் என்பது நினைவிருக்
கட்டும். (கைதட்டல்)

பிப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை முழுமையாக
அமுல்படுத்த வேண்டும் என்பதே ஜெனிவாவில் புலிகள் முன் வைத்த முக்கிய கோரிக்கை.
இதனுடைய பொருள் என்ன? மற்ற ஆயுத குழுக்களின் ஆயுதங்களை களைய வேண்டும். கருணா
என்ற துரோகியை பாதுகாத்து கையிலே ஆயுதம் கொடுத்து போராளிகள் மீது பொதுமக்கள்
மீது அமைதியை நேசிக்கிற அரசியல்வாதிகள் மீது, வன்முறையை ஏவிக் கொண்டிருக்கிற
கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும், என்று புலிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இலங்கைக் குழு சொன்னது – நாம் சண்டை நிறுத்த ஒப்பந்தம் என்று போட வேண்டாம்.
சண்டை நிறுத்தம் என்று போட்டால் போதும் என்றார்கள். நார்வே தூதர் எரிக்சோல்ஹைம்
சொன்னார், ‘அப்படிப் போடுவதை விட பேசாமல் சண்டை என்றே போட்டு விடலாம்’ என்று
சொன்னார். அதன் பிறகுதான் போர் நிறுத்த ஒப்பந்தம் என்று எழுதியே இரு தரப்பும்
கையெழுத்துப் போட்டனர்; சிங்கள பேச்சு வார்த்தைக் குழுவின் திட்டங்கள் இதன்
மூலம் தோல்வி அடைந்தன.

பேச்சு வார்த்தை முடிந்ததற்குப் பிறகு சுவிட்சர்லாந்தில் ஒரு மிகப் பெரிய
தமிழர் கூட்டத்திலே புலிகள் அரசியல் பிரிவைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் பேசினார்.
தலைப்பு என்ன தெரியுமா? விடுதலையின் வாசலில்! ஆம்; தமிழ் ஈழம் வாசலில் நின்று
கொண்டிருக்கிறது. அதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தமிழ்ச்
செல்வன் மிகத் தெளிவாக சொன்னார். வாசலில் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்க
முடியாது. எனவே விரைவில் விடுதலைப் போரில் நாங்கள் நுழையப் போகிறோம். அதற்கு
நீங்கள் அணியமாகுங்கள் என்றார்.

புலிகள் மீதான தடை; பயமுறுத்துகிற பயங்கரவாதச் சட்டம்; பொய் வழக்குகள்;
எதனாலும் ஈழ விடுதலை மலர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அமெரிக்க
தூதரின் மிரட்டலின் விளைவாக தமிழகம் எழுச்சி பெற்றிருக்கிறது. தமிழ் ஈழ
விடுதலைப் போருக்கு துணை நிற்கிற அந்த உணர்வோடு நம்முடைய தமிழ் மக்களுக்கென்று
உலக அரங்கிலே முதற்கொடி பறப்பதற்கு வழி வகுக்கிற அந்த ஊக்கத்தோடு நம்முடைய
முயற்சியை தொடருவோம்.

- இவ்வாறு தியாகு தனது உரையில் குறிப்பிட்டார்.

நன்றி முத்தமிழ் கூகிள் குழுமம்.

_____
CAPital

One response so far

பழைய இடுகைகள் »


Video & Audio Comments are proudly powered by Riffly