இவற்றிற்கான களஞ்சியம் July, 2006

Jul 28 2006


CAPitalZ

தமிழ் ஒருங்குறி ?! -14

Filed under Tamil Unicode

நான் சொன்ன தமிழ் எழுத்துக்கள் யாவற்றையும் கணினியில் ஏற்றுதல் என்பது, விசைப்பலகையில் [keyboard] ஏற்றுதல் என்பதல்ல.

பேச்சுக்குச் சொன்னால் கணினியின் மூளையில் ஏற்றுவது. அதாவது ஒருங்குறி என்பது விசைப்பலகை அல்ல. அது ஒரு தகுதரம் [Standard for Computer Information Interchange]். அந்த தகுதரத்தில் தமிழை சரியாக ஏற்றியிருக்கலாம்.

இப்ப எத்தனை கீகள் விசைப்பலகையில் இருக்கிறதோ, அத்தனையே வைத்திருக்கலாம். வேணுமென்றால், கூட்டி (அ) குறைத்துக் கூட வைத்திருக்கலாம்.

அதாவது ஃபிரஞ்சு, ஜேர்மன், ஸ்பானிய மொழிகளில் உள்ளது போல் தமிழிலும் எல்லா எழுத்துக்களையும் ஏற்றியிருக்கலாம். à, á, â, ã, å̀́ இவை இங்கே காண்பது போல் ஒரு எழுத்தாகவும், பிரித்து தனித் தனியாகவும் a, ̀, ́, ˆ, ˜, ˚ ஏற்றப்பட்டிருக்கிறது.

இனிமேல் தமிழுக்கு அவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை தான். அப்படி கிடைத்தாலும் ஏற்கனவே இப்போதிருக்கும் ஒருங்குறியில் ஊறிப்போனவர்கள் மாற்றத்தை விரும்ப மாட்டார்கள்.

அப்ப பிறகேன் இந்தக் கதறல்?
விட்டது பிழை என்று ஒத்துக்கொள்ளலாம்ல… இல்லை. தமிழ் மொழி இப்படித் தான். எழுத்தை ஒழுங்குமாறி வைத்து பிரித்து பிரித்து சேர்த்தால் தான் தமிழ் கணினியில் தெரியும். இல்லையேல் தமிழ் பிழையாகிவிடும். சும்மா ஏமாத்தக்கூடாது எல்லே.

தமிழ் மொழியின் எழுத்தின் வகைகளைப் புரிந்து கொள்ள எழுத்தைப் பிரித்துதான் சேமிக்க வேண்டிய அவசியமில்லை. கணினிக்கு எழுத்து தெரிவதில்லை, அதற்குண்டான இலக்கம் மட்டுமே தெரியும். அந்த இலக்கத்தை வைத்து இது எந்த மெய், எந்த உயிர் என்று அறியலாம். [TUNE இல் அப்படி செய்திருக்கிறார்கள்]

ஏன் தமிழில் கையாளும்போது இவ்வளவு சிரமம், வேகக் குறைவு, சேமிக்க அதிக இடம் என்று சாதரண கணினி உபயோகிக்கும் தமிழனுக்கு தெரியாது. அவன் சிந்தனையில் தமிழ் மொழி கணினியில் இப்படித் தான் இருக்கும் என்று மட்டுமே அறிந்திருப்பான். அவன் ஒரு ஃபிரஞ்சு, ஜேர்மன், ஸ்பானிய, சீனா, ஜப்பான், (அ) கொரியா மொழி தெரிந்தவனாக இருந்தால், தமிழில் எழுதுவதை விட அந்த மொழியில் எழுதினால் சகலவிதத்திலும் மேன்மை என்று யோசிப்பான். இன்றய காலத்தில் தமிழ் தெரிந்திருந்தாலும், ஆங்கிலத்தில் எழுதுவது இலகுவாக இருப்பது போல்.

கணினியில் ஒரு மென்பொருள் தயாரிக்கும் போது மிகவும் முக்கியமானது அந்த மென்பொருள் மிகவும் வேகமாக செயற்பட வேண்டுமென்பது. தமிழில் கணினி மொழியை [programming in Tamil script] எழுதினால் வெறும் எழுத்தைக் கையாள்வதற்கே ஒரு பகுதி வேகம் போய்விடும். பற்றாததற்கு, அந்த மென்பொருளின் சேமிக்கும் இடம் கூட அதிகமாகும். மென்பொருளை கணினிக்கு இறக்குமதி செய்ய காலம் காத்திருப்பவர்களுக்கு இது இன்னும் பெரிதாக்கும். இதையெல்லாம் அறிந்த ஒரு கணினி மொழி [computer programming்] வல்லுனர் ஒருபோதும் தமிழை கணினி மொழியாக தேர்ந்தெடுக்க மாட்டார். வெறும் பல்கலைக்கழகங்களில் சோதனைப் பயிற்சியாக மட்டுமே இருக்கும்.

 

 

பாகம் – 15 >>

<< பாகம் – 13

_____
CAPital

One response so far

Jul 27 2006


CAPitalZ

தமிழ் ஒருங்குறி ?! -13

Filed under Tamil Unicode

நான் இப்போது XP – ல் தமிழை புகுத்தி எழுதுகிறேன்.
அதில் தமிழ் என்று அடிக்க lcfBd என்று அடிக்க வேண்டும். (தலைசுற்றுகிறதா)
இதில் என்ன வசதி இருக்கப்போகிறது. மேலே படியுங்கள்!
ஆனால் மலயாளத்தில் அதே தமிழை அடிக்க அதே lcfBd என்று அடித்தால் போதும்.
lcfBd – തമിഴ് – தமிழ் – இந்த மூன்று சொற்களையும் அடிக்க நான் பயன்படுத்தியது
ஒரே கீகள்தான். மொழியைமட்டும் மாற்றினால் போதும். எவ்வளவு வசதி.

ஆமாம் நீங்கள் சொல்வது சரி. ஒரே கீகளைப் பயன்படுத்தி மற்றய இந்திய மொழிகளைப் பெறலாம். இந்த ஒரே ஒரு இலகுவான விடயத்திற்காக தமிழ் பலதை இழந்துள்ளது. அதிலும் பல வெற்றிடங்கள் உள்ளன. அதாவது, இந்தி மொழியில் உள்ள ஒரு எழுத்து தமிழ் மொழியில் இல்லையென்றால், நீங்கள் சொல்வது போல் செய்ய முடியாது. இப்படி உள்ள வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியாகத் தான் பல புதிய எழுத்துக்கள் தமிழில் சேர்க்கப்படுகின்றன. புதிதாக சேர்க்கப்பட்ட இன்னுமொரு “ச” எல்லாம் இதன் காரணமே. [ச, ஷ, ஸ, இவற்றை விட இன்னுமொரு ச, அது கிட்டத்தட்ட ஸ மாதிரி இருக்கும் அதே சத்தம் தான் கிட்டத்தட்ட]

இதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள்? எழுத்துக்கள் ஏற்றுகிறோம், விருப்பம் என்றால் உபயோகியுங்கள், இல்லையேல் உபயோகிக்காதீர்கள். இதே போல் தமிழ் எழுத்துக்கள் யாவற்றையும் ஏற்றியிருக்கலாமே? விருப்பம் இருந்தால் பாவிப்போம், இல்லையேல் பாவிக்காமல் விட்டிருப்போம்! தப்பை ஏன் ஞாயப்படுத்த எத்தணிக்கிறார்கள் என்று தான் எனக்குக் கோபம்.

சரி என்ன தமிழ் இழந்தது என்று யோசிக்கிறீர்களா?

வேகம்: “போ” என்பது ஒரு குறியல்ல 3 (அ) 2 குறி [3: கொம்பு, பனா, அரவு/ 2: கொம்பு+அரவு, பனா]

இடம்: “போ” என்பதை சேமிக்க 3 (அ) 2 குறியையும் சேமிக்க வேண்டும்
ஒரு பேச்சுக்கு சொன்னால், 1 MB இடம் உள்ள ஒரு கட்டுரையை நீங்கள் எழுதினீர்கள் என்றால் அதை ஒருங்குறியில் சேமிக்க 3 MB இடம் தேவை. ஒரு ஃபுலொப்பியில் சேமிக்க வேண்டியதை மாற்று வழிகள் தேடவேண்டியுள்ளது. ஒரு சாதாரணம் மனிதனுக்கு இந்த பிழை தெரிய வராது. ஏனெனில் அவன் தான் எழுதியதை கணினியில் சேமிக்க 3 MB தான் தேவைப்படும் என்று மட்டும் தான் அறிந்திருப்பான்.
veedikkai ennavenRaal ezhuthiya thamizh kadduraiyai thamingkilishil seemippathaRku thamizhai vida kuRaivaana idangkaLee pidikkum! [வேடிக்கை என்னவென்றால் எழுதிய தமிழ் கட்டுரையை தமிங்கிலிஷில் சேமிப்பதற்கு தமிழை விட குறைவான இடங்களே பிடிக்கும்!]

கையாளும் தன்மை: “போ” என்பது 3 (அ) 2 குறியாக இருந்தாலும் அது ஒரு எழுத்து என்று கணினிக்கு எப்போதும் உணர்த்திகோண்டிருக்க வேண்டும். [ஒரு சொல்லில் உள்ள எழுத்துக்களை எண்ணும்போது, வரிசைப்படுத்தும் போது, ஒரு வசனத்தில் இடம் பற்றாமல் சொல்லைப் பிரிக்க வேண்டி வரும்போது]

தகவல் பரிமாற்ற நேரம்: “போ” என்பதை ஒரு கணினியில் இருந்து மற்றய கணினிக்கு அனுப்ப ஒரு குறி பத்தாது, 3 (அ) 2 குறிகளையும் அனுப்ப வேண்டும்.

இவற்றை விட தமிழ் எழுத்துக்கள் எல்லாவற்றையும் ஏற்றாததால், தமிழ் எந்த ஒரு மென்பொருளிலும் தெரிய அந்த மென்பொருளால் மேலதிக உதவி தேவை. எதற்கு? “போ” என்பது இப்படித் தானே இருக்கு 3: கொம்பு, பனா, அரவு/ 2: கொம்பு+அரவு, பனா. இதை சரியாக ஒழுங்குபடுத்தி கணினித் திரையில் சாதாரண மனிதன் விழங்கிக்கொள்ளக்கூடிய விதமாக தெரியவைக்க.

இப்படித்தானே இவ்வளவு காலமும் இருந்தது இப்ப ஏன் இவ்வளவு கத்துறீங்கள் என்று சிலர் கேட்கக்கூடும். இவ்வளவு காலமும் இருந்ததை விட தமிழ் முன்னேற ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் சில புத்திஜீவிகள் [ISCII] அதை அளிக்கவில்லை. ஏற்றியவர்கள் தான் பிழையாக ஏற்றிவிட்டார்கள் என்று பார்த்தால் மற்றயவர்களும் பத்தாததற்கு அது சரி என்று வேறு வாதிடுகிறார்கள்.

இந்த குறைபாடுகள் எதிர்காலத்தில், சாதாரண மனிதனுக்கு வித்தியாசம் தெரியாத வண்ணம் இருக்கும். இன்றைய நிஜ உதாரணம்: இப்போது கூட பலர் சொல்கிறார்கள். நான் தமிழில் தானே கணினியில் எழுதுகிறேன். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே என்று [இது 3 MB பிரச்சினை போல் தான் - இப்போது இருப்பதை விட தமிழ் மேலும் சக்திவாய்ந்ததாக இருந்திருக்கும் என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை].

 

பாகம் – 14 >>

<<பாகம் – 12

_____
CAPital

No responses yet

Jul 26 2006


CAPitalZ

தமிழ் ஒருங்குறி ?! -12

Filed under Tamil Unicode

தமிழ் ஒருங்குறியில் சரியா பிழையா என்று யோசிக்காவிட்டாலும்,
தமிழ் எழுத்துக்களின் வரிசையில் அவை இல்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். வரிசையில் இருந்திருந்தால், எந்த கணினி மொழியிலும் மேலதிக உதவி இல்லாமல் தமிழை வரிசைப்படுத்தலாம்.

நீங்கள் அரிச்சுவடி பார்த்திருக்கிறீர்களா? [என்ன நக்கலு? .. கி..கி..கி..]. அதில் எழுத்துக்கள் ஒரு ஒழுங்கில் இருக்கும். நீங்கள் படிப்பதற்கு அது இலகுவாக இருக்கும்.
சரி அதே எழுத்துக்களை ஒழுங்கு மாறி அரிச்சுவடி தந்தால், உங்களால் படிக்க முடியாமல் போகாது. படிக்க முடியும், ஆனால் சற்றே சிரமமாக இருக்கும்.

பலர் இந்த ஒழுங்கு மாற்றத்திற்கு கூறும் காரணம், அப்போது தானாம் மற்றய இந்திய மொழிகளுக்குள்ளே மாற்றிக்கொள்ளலாமாம். naam thamingkilish ezhuthuvathaRku aangkila ezhuththukkaLaip paavikkiRoom. ithaRku oru mozhi maRRaya mozhikkaaha ezhuththu idam maaRi irukkaveeNdiya avasiyam illai. [நாம் தமிங்கிலிஷ் எழுதுவதற்கு ஆங்கில எழுத்துக்களைப் பாவிக்கிறோம். இதற்கு ஒரு மொழி மற்றய மொழிக்காக எழுத்து இடம் மாறி இருக்கவேண்டிய அவசியம் இல்லை.] சரி ஆங்கிலம் வேறு தமிழ் வேறு என்று சொல்லத் தொடங்காதீர்கள். method ஒன்றுதான்.

 

பாகம் – 13 >>

<< பாகம் – 11

_____
CAPital

No responses yet

Jul 14 2006


CAPitalZ

லஞ்சம் ஒழிக்க ஒரு வழி

Filed under Government

லஞ்சத்தை ஒழித்தால், கடமை தன் செயலைச் செய்யும்.

நான் விஜகாந்திற்கு ஒரு ஐடியா கொடுக்கலாம் என்றிருந்தேன்.  லஞ்சத்தை ஒழிக்க.. [கி ... கி.. கி...]

ஒரு அறிவித்தல் விடவேண்டும்.  இன்றிலிருந்து ஒரு 30 நாட்களுக்குள் வாங்கும் லஞ்சம் அத்தனையயும் வாங்குங்கள்.  ஆனால், அந்த திகதிக்குப் பின் எவர் லஞ்சம் வாங்கினாலும் அவர் வேலையிலிருந்து நீக்கப்படுவார்.  இது தான் தண்டனை.  குறைந்த தண்டனை என்று எதுவுமில்லை.  இப்படிச் செய்தால், வேலையில்லா பட்டதாரிகள் சந்தோசப் படுவார்கள்.

சில நாட்களுக்குப் பின், மீண்டும் ஒரு அறிவித்தல், எவர் லஞ்சம் வாங்குகிறார் என்று ஆதரபூர்வமாக மக்கள் காட்டிக்கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு [மக்களுக்கு] லஞ்சத்தின் தொகை இரட்டிப்பாக்கி இலவசமாக அரசாங்கத்தால் கொடுக்கப்படும்.  இப்போ மக்களே முன்னுக்கு வருவாங்கள்.  [ஏன் சில நாட்களின் பின் என்று யோசிக்கிறது தெரிகிறது.  அதாவது ஒரு அறிவிப்பிலேயே மக்கள் அதை சீரியசாக எடுக்க மாட்டார்கள்]

சில நாட்களின் பின் இன்னுமோர் அறிவித்தல்.  அந்த குறிப்பிட்ட திகதிக்கு முன் வாங்கிய/ சேர்த்த [இற்றைவரைக்கும்] சொத்துக்கள் பற்றியோ, லஞ்சம் பற்றியோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாடாது.  இது லஞ்சம் வாங்கியவர்கள் ஏற்கனவே தப்பு செய்துவிட்டேன் இனிமே திருந்தினா மட்டும் என்ன விட்டு விடவா போகிறார்கள் என்று எல்லாத்தையும் சுருட்டிக் கட்டாமல் இருக்க உதவும்.

சில நாட்களின் பின் இன்னுமோர் அறிவித்தல்.  அந்த குறிப்பிட திகதிக்குப் பின் அரசாங்கத்தாலேயே மர்ம மனிதர்கள் லஞ்சம் கொடுக்க எத்தணிப்பார்கள்.  அப்போது லஞ்சம் வாங்கினாலும் அதுவும் அவர்களின் வேலை பறிபோவதற்கு ஆதரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும்.  கனடாவில் கடைகளில் 18 வயதிற்கு கீழ்ப் பட்டவருக்கு கடைக்காரன் சிகரட் விக்கிறானா என்று சோதிப்பதற்கு ஒரு பொடியனை இதற்கென்றே செட்டப் பண்ணி அனுப்புவார்கள்.  அவன் அணிந்திருக்கும் சாதாரண தொப்பியில் மிகச் சிறிய கமரா இருக்கும் [மிcரொ cஅமெர].  இப்படி ஒரு போடு இந்தியாவில் போடவேண்டும்.

இப்படி அடுத்தடுத்து அறிக்கைகள் விட, மக்கள் ஒரு பரபரப்பிற்கு உள்ளாவார்கள்.  குறிப்பிட்ட திகதியின் பின் எவர் பிடிபடுகிறாரோ அவரை லஞ்சத்தால் வேலை இழந்தோர் என்று காட்ட வேண்டும்.  பரப்பான செய்தியாக இருக்க வேண்டும்.

எப்படி என்ற ஐடியா? :D

யாராவது விஜயகாந்தின் மின்னஞ்சல் முகவரி தெரிந்தால் சொல்லுங்களேன்.

 

_____
CAPital

No responses yet

Jul 12 2006


CAPitalZ

தீவிரவாதி

Filed under Terrorism

இந்தியாவில் அப்பப்ப குண்டு வெடித்துக்கொண்டு தான் இருக்கிறது. சிலர் வைத்தார்கள் அவர்களுக்கு தண்டனை வழங்கினோம் என்றில்லாமல், ஒரு திட்டமிட்ட செயலாகத் தான் இருக்கிறது.

என்னைப் பொறுத்த வரையில், ஏன் இப்படி குண்டு வைக்கிறார்கள். அவர்களுக்கு என்ன வேணும் என்று காரணத்தைக் கண்டு பிடித்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். தீவிரவாதி தீவிரவாதி என்று சொல்லிக்கொண்டிருந்தால் அவர்களுக்கு இன்னும் கோபம் அதிகமாகும், கோரிக்கை நிவர்த்தி செய்யப்படவில்லை என்று விரக்தியாகும், இதனால் மேலும் திட்டங்கள் தீட்டுவார்கள்.

எங்கள் சமூகத்தில் இருக்கும் மற்றவர்களை இறுக்கிப் பிடிக்கும் பழக்கம் தான் அரசாங்கங்களும் மற்றவர்களுக்கு அதிகாரம் கொடுக்க மறுக்கிறது. “தோழுக்கு மேல் தோழன்” என்று வாய்வார்த்தையில் சொல்கிறோமே தவிர உண்மையிலேயே சுயமாக முடிவெடுக்கும் அதிகாரத்தை நாம் வழங்குவதில்லை.

ஒரு குடும்பத்திலேயே தோழுக்கு மேல் வழர்ந்த பையனை தட்டி வளர்க்க எண்ணினால், ஒண்டில் அவன் அவர்கள் சொன்னபடி கேட்பான், இல்லையேல் வீட்டை விட்டி வெளியேறி உதவாக்கரையாக (அ) உருப்படியாக வாழ்வான். அவனுக்கும் சில அதிகாரங்களை விட்டுக் கொடுத்தால் எல்லோரும் நலமாக வாழலாம் என்பது புரிவதில்லை. எப்போது அதிகாரம் தருவது தான் தீர்வு என்று கோரப்படுதோ அப்போதே அதிகாரத்தை மேலிடம் கொடுத்தால் தான் வருங்காலம் நிலையாக இருக்கும். தர மாட்டேன்; நான் சொன்னது தான் சட்டம் என்றால், ஒடுக்கப்படுபவன் பொங்கி எழுவான்; அகிம்சாவாதியாக; தீவிரவாதியாக.

போராட்ட வழிகள் வேறாக இருக்கலாம்; ஆனால், குறிக்கோள் ஒன்று தான்.

தப்பை ஞாயப்படுத்த எத்தனிக்கவில்லை.

தப்பு செய்துவிட்டான் என்று தண்டனை வழங்கினால், பிரச்சனை ஒழியாது. தப்பு ஏன் செய்தான் என்று காரணம் கண்டறிந்து அதைத் தீர்க்க வேண்டும். அப்போது தான் எல்லா தீவிரவாதிகளும் சிறைப்பட்டாலும் புதிதாக ஒரு தீவிரவாதி உருவாகாமல் இருப்பான்.

என் தந்தையை சிறைப்பிடித்தார்கள். ஏன்? குண்டுவைத்ததால். குண்டு வைத்தல் குற்றம். அப்படியாயின் ஏன் என் தந்தை குண்டை வைத்தார்? இந்தக் கேள்வியின் விடைதான் இன்னுமோர் தீவிரவாதி!

 

The following post also has the thinking in the line of mine.
Target the Real Terrorists

______
CAPital

 

சேர்க்கப்பட்டது I [GMT 2006/07/13 @ 20:02]

முன்பெல்லாம், அயல் நாடுகளில் தீவிரவாதிகள் உருவாக காரணமாக இருந்தது இந்தியா. இப்போது இந்தியாவிற்குள்ளேயே தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள் மற்றய தீவிரவாதிகள்.

தீவிரவாதிகள் புத்திசாலி ஆகிவிட்டார்களா
அல்லது
புத்திசாலிகள் தீவிரவாதி ஆகிவிட்டார்களா?

இதைத் தான் “தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பதோ?

4 responses so far

Jul 09 2006


CAPitalZ

முன்னேறு வேகமாக

பாடசாலையில், அறிவு கூடிய மாணவர்கள் என்று கணிக்கப்படும் மாணவர்கள் மேல் தர வகுப்புக்கு காலம் கடத்தாமல் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். [fast tracking]

நாங்கள் நவீன யுகத்தில் இருக்கிறோம்.  எங்களுக்கு முன் கண்டறிந்த எல்லாவற்றையும் மாணவர்கள் கற்று பின்னரே மாணவர்களால் ஏதாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய நிலமை.  இப்படி ஆயின், முன்னோர் கண்டுபிடித்தவற்றை கற்றறியவே கல்விக் காலம் முழுவதும் முடுந்து விடும்.  பிறகு மாணவர்கள் கண்டுபிடிக்கும் நேரம் அவர்கள் வாழ்வில் இறுதிக் காலமாகத் தான் இருக்கும்.  மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், உயிர் நிலைக்க மாட்டா.

_____
CAPital

No responses yet

Jul 09 2006


CAPitalZ

அரசாங்கத்தால் செய்யப்படவேண்டிய தொழில்கள்

எந்தெந்த தொழில்கள் மனித அடிப்படை அத்தியாவசியத்திற்கு தேவையோ அவை அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [நீர், மின்சாரம், தபால் சேவை, உள்ளூர் பேரூந்து சேவை, புகையிரத சேவை].  அது ஒரு நியாயமான விலையை அப் பொருள்களுக்கு/ சேவைக்கு வழங்கும்.  இலாபத்திற்கு என்று விலைகள் அளவுக்கதிகமாக உயராமல் இருக்க உதவும்.

எந்தெந்த தொழில்கள் சமூக நலனை பாதிக்குமோ அவை அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [மதுபானம், சூதாட்டம், அதிட்ட லாபச் சீட்டு]  அது ஒரு ஒழுங்கு முறையை கடைப்பிடிக்க உதவும்.  நேரங்கடந்த விற்பனையோ/ தரம் கெட்ட விற்பனையோ நடக்காமல் இருக்க உதவும்.

இவை ஒவ்வொரு நாட்டைப் பொறுத்ததுமே.

_____
CAPital

No responses yet

Jul 09 2006


CAPitalZ

கோவில்கள் அரசாங்க சொத்தாக்கப்பட வேண்டும்

என்னைப் பொறுத்த வரையில், எந்த மத கோவில்களும் அரசாங்கத்தின் கீழ் இயங்க வேண்டும்.  ஒரு தனி நபர் கோவிலாகவோ, (அ) ஒரு குழு கோவிலாகவோ இருக்கக் கூடாது.

அரசாங்கம் அர்ச்சகர்களுக்கும், போதகர்களுக்கும் அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும்.  மத ஆலையங்கள் அனைத்தும் அரசாங்க சொத்தாகக்கப்பட வேண்டும்.  ஆலையத்திற்கு கிடைக்கும் பணம் முழுவதும் அரசாங்கத்திற்கே போய்ச்சேர வேண்டும்.  வேணுமென்றால், அந்தக் கோவில் நடத்துனருக்கு (அ) அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு விகிதமோ (அ) பத்து விகிதமோ குடுக்கப்படலாம்.  இதே விகிதம் தான் எல்லாக் கோவில்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் [மத வித்தியாசம் இன்றி].  அர்ச்சகர் தட்டில் விழும் பணம் அர்ச்சகருக்கே போய்ச்சேரலாம்.

இப்படிச் செய்தால், பணக்கார ஆலையங்களில் வரும் பணம் கொண்டு ஏழை ஆலையங்களையும் சீராக நடத்தலாம்.  ஏழை அர்ச்சகர்களும் வாழ்க்கை செலவுக்கு கஷ்டப் பட வேண்டியதில்லை.  பண வரவின்மையால் கோவில்கள் இழுத்து மூடப்படாமல் தடுக்கப்படும்.  நாட்டுக்கு ஆலையங்களும் உதவியதாகவும் இருக்கும்.

 

_____
CAPital

 

சேர்க்கப்பட்டது I [GMT  2006/07/12 @ 18:51]

இதனால், நாட்டின் பண நிலமைக்கு சமயங்களும் உதவியதாக இருக்கும்.  இப்போது சமய மந்திரி என்று ஒருவரை அமர்த்தி சமய மேம்பாட்டிற்கென்று பெருந் தொகைப் பணம் அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகிறது.  மக்கள் வரிப்பணத்திலிருந்து சமய மேம்பாட்டிற்கு என்று பணம் ஒதுக்காமல், அந்தந்த சமய தலங்களினூடாக வரும் பணம் அந்தந்த சமய மேம்பாட்டிற்கு என்று உதவலாம்.  ஆகவே, ஒரு மதத்தைச் சார்ந்தோரின் வரிப் பணத்தில் மற்றய மத மேம்பாட்டிற்கு உதவுவதென்பது இருக்காது.

2 responses so far

Jul 07 2006


CAPitalZ

தமிழ் ஒருங்குறி ?! -11

Filed under Tamil Unicode

இக் கோப்புகள் “tamil-ulagam” என்னும் யாகூ குழுமத்தில் இருந்து எடுக்கப்பெற்றவை.

Tamil Encoding Newsletter3

Tamil Encoding Newsletter5

Tamil Encoding Newsletter7

 

பாகம் – 12 >>

<< பாகம் – 10

_____
CAPital

No responses yet

Jul 06 2006


CAPitalZ

My Notes – DB

Filed under Database

Normalizing Your Database

• A table should store only data for a single type of entity.
• A table should avoid nullable columns.
=========

what is normalization? Basically, it’s the process of efficiently organizing data in a database.
There are two goals of the normalization process: eliminate redundant data (for example, storing the same data in more than one table) and ensure data dependencies make sense (only storing related data in a table).

______
CAPital

No responses yet

பழைய இடுகைகள் »


Video & Audio Comments are proudly powered by Riffly